திங்கள், டிசம்பர் 31, 2012

மதுரை ஆதினம் அப்படி சொல்லியிருக்க கூடாது!!

டெல்லியில் அரங்கேறிய மருத்துவ கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவம் பல விஷயங்களை நமக்கு உணர்த்தியது... என்னன்னா நம் மக்களும் தெருவில் இறங்கி போராடும் அளவிற்கு மனிதாபிமானம் (ஆள் பார்த்து) இருக்கு.. மெட்ரோ சிட்டியில் நேரமும் இருக்கு... இது போக நேத்து இன்னொரு விஷயமும் எனக்கு உணர வச்சது... நம்ம தமிழ்நாட்டு அமைப்புகள் போராடுவதற்கு எந்த ஒரு துரும்பும் இதுவரை கிடைக்கல... நம்மலும் இருக்கோம்னு காட்டணுமே... என்ன  செய்யலாம்னு காத்துட்டிருந்தவங்களோட வலைல நம்ம மதுர ஆதினம் தானா வந்து மாட்டிக்கிட்டார்...

சின்ன வயசுல அடிக்கடி கேள்விபடும் விஷயம், "அரைகுறை ஆடை அணியும் நடிகையை எதிர்த்து மாதர் சங்கம் போராட்டம், உலக அழகி போட்டி எதிர்த்து போராட்டம், விளம்பரத்தில் பெண் போகப்பொருளாக காட்டுவதை கண்டித்து
போராட்டம்...ன்னு இந்த லெவளில் இருக்கும்... இதெல்லாம் நான் முன்பே சொன்ன மாதிரி சின்ன வயசுல... சின்ன வயசுல...

சில வருட குளிர்கால உறக்கத்துக்கு பின் பெண்கள் அமைப்பு புதிய பரிணாமத்தில் வந்தது செம அதிர்ச்சி.... இவ்வளவு நாள் பெண்கள் கண்ணியம் பத்தி பேசிட்டிருந்தவங்களா இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி என புருவத்தை தலைமுடி தொடும் அளவுக்கு உயர்த்தி, காய்ந்து போய் ஒட்டிக்கொண்டிருந்த உதட்டை திறந்து இருக்கும் பற்களையெல்லாம் தெரிய வைத்து, மவுஸ்ஸில் இருக்கும் உள்ளங்கையை தானாக நெத்தியில் சடார்ன்னு ஒரு அடி அடிக்க வச்சது!

ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப இஸ்லாமிய பெண்களைப் போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும்- ன்னு சொன்னார். பாவம் இவர் கெட்ட நேரம் இஸ்லாமும், பர்தாவும் வாய்ல வந்துடுச்சு.... கொஞ்சம் உஷாரா இருந்திருந்து இப்படி சொல்லியிருக்கணும்... //ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப அனைத்து பெண்களும் முழு உடலை மறைக்கும் கன்னியமான ஆடை அணிய வேண்டும்// - இப்படி சொல்லியிருந்தா இப்ப இவருக்கு இந்த நெலம ஏற்பட்டிருக்குமா? இல்ல குளிர்கால உறக்கத்தில் இருந்த பெண்கள் அமைப்பும் மார்கழி மாசம் அதுவுமா மடத்தை முற்றுகையிட்டிருக்குமா? பாவம் தூங்குறவங்களையெல்லாம் எழுப்பிட்டார் இந்த ஆதினம் :-)) 

போராட்டத்தின் போது "நாங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லாதே" என்ற வாசகம் பற்றி கேள்விபடும் போதும், பெண்கள் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டாம் என ஆந்திராவில் ஒரு அரசியல் பிரமுகர் சொன்ன போது அதை நீ சொல்லாதே என சொன்னபோதும்- அப்படின்னா எக்கேடோ கெட்டு போ என அனைவரையும் சொல்ல வைத்திருக்கும்... நம் நாட்டு மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்தது எது என்ற வருத்தமே மிஞ்சியது... கண்ணியமா ஆடை உடுத்து என சொன்னது தப்பா என மனசாட்சி உள்ள அனைவர் மனதிலும் நிச்சயமாய் உதித்திருக்கும்.. பாவம் மாதர் சங்கங்களும், போராட்டத்தில் குதித்த அனைவரின் முகத்திலும் நீங்காத நெய்வேலி கரி  படிந்துவிட்டது...

இந்த பிரச்சனை ஆரம்பமாகிய நேரத்திலிருந்து அனைவரின் பார்வையும் உடைகட்டுப்பாடு, வளர்ப்பு, தண்டனை என்ற 3 விஷயங்களை சுற்றியே வந்தது. அனைவரின் கோரிக்கையும் இதனை வலியுறுத்தியே வந்தது..... துரதிஷ்ட்டவசமாக இவர்கள் வலியுறுத்திய இந்த விஷயங்கள் எல்லாமே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னொரு காலத்திலிருந்தே இஸ்லாமியர்களின் வாழ்க்கை பகுதியில் பிரிக்க முடியாத அங்கமா இருக்கு... இந்த சம்பவத்தால் "இஸ்லாம் முறைப்படி" என்பது அனைவரின்  ஒட்டுமொத்த குரலாக இருக்கும் போது இஸ்லாமோபோஃபியாக்கள் சும்மா இருப்பாங்களா??...ம்ஹூம்.........

உடைகட்டுப்பாடு தேவை- ஆனால் இஸ்லாம் பெண்களை போல் என சொல்லக்கூடாது! பெண் பிள்ளை கண்காணிப்பு தேவை- ஆனால் இஸ்லாம் கூறும் வழிமுறைபடி என சொல்லக்கூடாது! கடுமையான தண்டனை வேண்டும்- ஆனா இஸ்லாம் சொன்ன மரணதண்டனை என  சொல்ல கூடாது!
-என்பதில் ரொம்பவே உறுதியா இருக்காங்க. பாவம் அவங்க பயமும் நியாயமானதே  :-)

என்னத்தான் மூடி மறைச்சாலும் இஸ்லாம் எனும் விதை மண்ணை துளைத்து தழைக்கவே செய்யும்.. பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டாலும் பிளவு ஏற்படுத்தி  வளரவே செய்யும்... காரணம், இது மலட்டு விதை அல்லவே :-)

அப்பறம் இன்னொரு முக்கிய விஷயம்...

பர்தா போட்டா மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...

கடுமையான தண்டனை கொண்டு வந்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...

பெண்பிள்ளைகளை கட்டுப்பாடோடும் கண்காணிப்போடும் வளர்த்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...


கண்ணியமாய் உடை உடுத்தி, வரைமுறைகளோடு பாதுகாப்பான சுதந்திரமும்  அளித்து, நாட்டில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால் நிச்சயம் எந்த வெறிநாயும் சீண்டாது! நாம்  ஏன் கறித்துண்டை காமிப்பானேன்? நாய் ஏன் நம்மை கடிப்பானேன்??    தப்பு செய்றதுக்கான எல்லா கதவையும் அடைச்சு விடுங்க... அப்பறம் குற்றம் கொறையுதா இல்லையான்னு பாருங்க...


டிஸ்கி: இந்த பதிவை தனது தளத்தில் போட அனுமதித்த சிராஜ்ஜிற்கு நன்றி :-)

-ஆமினா முஹம்மத்

நன்றி : oneindia , inneram.com




வெள்ளி, டிசம்பர் 21, 2012

இன்று சத்தியமா உலகம் அழியாது.. ஏன்னா?? ஏன்னா?? ஏன்னா???



தெருவுல நடக்க முடியல.....
ஒரு கடைக்கு போக முடியல.....

காலைல இட்லி வாங்கலாம்னு ஹோட்டலுக்கு போனேன்(காலை சாப்பாடு எங்க வீட்ல கிடைக்குது??? )...

 தெரிந்த நண்பர் தான் சமையல் மாஸ்டராக இருக்கிறார்....  அவர் கேட்டார் "பாய்... இன்னைக்கு ஏதும் ஹாட் நியூஸ் இருக்கா???"

நான்.. "இல்லையே அண்ணன்.. வழக்கம் போல் தான் இருக்கு" என்றேன்.

அதுக்கு அவர்  "இல்ல..இன்னைக்கு உலகம் அழியப்போகுதாமே????" அப்டின்னார்.....


பாமரர்களில் இருந்து, படித்தவர்கள் வரை அனைவரும் இன்று உலகம் அழியப்போகுதாமே??? நிஜமா சார்????

யாரோ மாயன் இன மக்கள் உருவாக்கிய காலண்டர்ல 2012 க்கு மேல இல்லையாமே??

ஆச்சா...பூச்சானு ஒரே அலப்பரையா தான் இருக்கு....

ஆனா பாருங்க சகோதர, சகோதரிகளே!!!!

இன்று சாமி சத்தியமா உலகம் அழியாது...  ஏன்னா..ஏன்னா..ஏன்னா...?????
அதே தான்.. நான் என்ன பெருசா சொல்லிட போறேன்... ???

இஸ்லாமிய நம்பிக்கைப் படி இன்று உலகம் அழியாது.. அழியவே அழியாது...


 
 ( இது மாயன் காலண்டர் இல்ல.. எங்க ஊரில் விசியோகிக்க              
இருக்கும் 2013 காலண்டர்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....)
                                                                 


உலக அழிவின் முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
 
1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

 
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.

இதில் 10 விசயங்கள் சொல்லப்பட்டாலும், நான் அனைத்தையும் பற்றி பேசப்போவது இல்லை.. ஒரே ஒரு விசயம்...  5 வது பாயிண்ட்... 


5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

ஈஸா (அலை) என்பது கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசுநாதரை  குறிக்கும். 
ஏசுநாதரை குறித்த இஸ்லாமிய நம்பிக்கையை சுருக்கமாக 4 பாயிண்டுகளில் பார்த்து விடுவோம்.

1. முஸ்ஸிம்களைப் பொறுத்த அளவில் அவர் கடவுள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போல் இறைவனின் தூதுவர். முந்தைய கால மக்களுக்காக வந்தவர்.

2. அவர் சிலுவையில் அறையப்படவில்லை. அதே போல் சாகவும் இல்லை. சிலுவை  பிரச்சனையின் போது எதிரிகளிடையே குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் சிலுவையில் அறைந்தது ஏசுவை அல்ல. ஈஸா (அலை) அவர்கள் கடவுளிடத்தில் உயிருடன் உயர்த்தப்பட்டார்கள். 

3. உலக இறுதி நாளின் போது கடைசி 40 நாட்கள் அவர் வருவார். இந்த உலகை ஆள்வார். முஸ்லிம்கள் அனைவரும் அவரின் பின் அணி வகுப்பார்கள். அவரை கொண்டாடுவார்கள்.

4. தஜ்ஜால் என்ற கொடுங்கோலன் சர்வ வல்லமையுடன் இருப்பான். அவன் முஸ்லிம்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருப்பான். அவனை ஈஸா அலை அழிப்பார்கள். அத்துடன் உலகம் அழிக்கப்படும்.

இது குறித்த ஒரு நபி மொழியை பாருங்கள்.....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல
்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும். 
 
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி)

'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (திருக்குர்ஆன் 04:159) 

என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்????   அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????

தஜ்ஜால் என்ற கொடுங்கோலனும்,ஈஸா நபியும் இந்த உலகத்திற்க்கு இன்னும் வர வில்லை. இதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சாட்சி, கிருத்தவ சகோதரர்களும் சாட்சி.

ஆகவே சகோஸ்... இன்று சத்தியமா உலகம் அழியாது.. அழியவே அழியாது.....

டிஸ்கி : இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி......


சனி, செப்டம்பர் 15, 2012

இஸ்லாத்தின் பிரச்சார பீரங்கி - ஆமினா முஹம்மத்....



//அதுமட்டுமன்றி, இந்த மதவெறி கொண்ட ஒரு கும்பலோடு அவர்கள் ஒருபோதும் சேர்வதையே விரும்பாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் வரிசையில் இருந்தவர் தான் ஆமினாவும். 
மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! 
அப்புறம் எப்படி ஆமினாவிற்கு திடீரென்று ஞானோஸ்தயம் “மௌலவி சுவனப்பிரியனிடமிருந்து” கிடைத்தது என்று நீங்கள் கேட்கலாம்?//

இது நேற்று ஒரு பதிவில் சொல்லப்பட்ட கருத்து. இது எந்த பதிவு?? யார் எழுதியது? என்பதெல்லாம் இந்த பதிவிற்க்கு அவசியம் இல்லை என்று கருதுகிறேன். கண்டன்ட் தான் விவாதப் பொருள்.

அதாவது ஆமினா அவர்கள் ஏதோ ஒரு முகநூல் குழுமத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்த வேலையில், அண்ணன், வஹாபிகளின் தலைவர், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள் அவரை அங்கிருந்து பிரித்து கூட்டி வந்து இஸ்லாமிய பெண்மணி என்ற தளத்தில் மிரட்டி எழுது வைத்தார் என்பது குற்றச்சாட்டு...

ஒரு நபரை ஒரு இடத்தில் இருந்து பிரித்து கூட்டி வந்து ஒரு விஷயத்தை மிரட்டி செய்யச் சொல்வது என்றால் அந்த விஷயத்தில் அவர் பெரிய பிஸ்தாகத் தான் இருக்க வேண்டுமென்று தான் அனைவரும் நினைப்போம்(ஹாலிவுட் படத்தில் விஞ்ஞானிகளைலாம் மிரட்டுவாங்கள்ல??? அவங்க மகளையோ, மகனையோ பிடித்து வைத்துக்கொண்டு. அதுமாதிரி நினைத்துக்கொள்ளுங்கள்) .

இதை காண்பவர்கள் ஆமினா அவர்கள் இஸ்லாத்தில் பெரிய கரை கண்டவர் போல. இப்ப கொஞ்ச காலமா அதில் இருந்து விலகி அவர்களின் முகநூல் குழுமத்தில் அட்மினாக சேவை செய்கிறார் போல என்று நினைத்து மிகுந்த ஆச்சரியம் அடையலாம்.


சரி, இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்வோம் என்று ஆமினா அவர்களின் குட்டிசுவர்க்கம் தளத்தை பார்வையிட்டீர்கள் என்றால்.....றால்.........ல்..............

ஆஹா..ஆஹா.. என்ன அருமையா இஸ்லாத்தை பற்றி எழுதி இருக்கிறார்... ???? வாவ்.....அந்த தளத்தில் இருந்த அனைத்து கட்டுரைகளும் அப்படியே இஸ்லாத்தை வளர்ப்பதற்க்காகவே எழதுப்பட்டு இருந்தது கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள்..


அந்த வரலாற்று சிறப்பு மிக்க இஸ்லாமிய கட்டுரைகள் சிலவற்றை பாருங்கள் சகோஸ்...

பதிவு -1 :கொலவெறியும் ஜெட் வேகத்தில் பயணிக்கும் தமிழும்!

http://www.kuttisuvarkkam.com/2011/11/blog-post_29.html

பதிவு - 2: ஊர் வம்பு 1-10-2011

http://www.kuttisuvarkkam.com/2011/10/1-10-2011.html

பதிவு - 3 :சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!!

http://www.kuttisuvarkkam.com/2012/03/blog-post_26.html


இவரைத்தான்...இது போன்று அருமையான இஸ்லாமிய சேவை ஆற்றியவரைத்தான்.... இப்படி முகநூலில் தனது திறமையை வேஸ்ட் செய்கிறாறே என்று உள்ளம் வெதும்பிய எங்கள் அன்பு அண்ணன்...இஸ்லாமிய பிரச்சார ஆண் பீரங்கி, வஹாபிகளின் தலைவர்,மதவெறி பிடித்த மாணிக்கம், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள்.. ஆமினா அவர்களை தேடி கண்டுபிடித்து, மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இஸ்லாத்தை பரப்பச் சொல்லி உள்ளார்.....


அட போங்கப்பா!! நீங்களும் உங்க குற்றச்சாட்டும்... ஆமினா எழதுன எல்லாமே மொக்க பதிவு... இதுல இவுகள மிரட்டி கூட்டி வந்து எழுத சொன்னாங்களாம்.... இத விட பெரிய காமெடி எதுவும் இருக்க முடியாது.....

நான் நினைக்கிறேன்.... ஆமினா அவர்கள் வந்த பிறகு அந்த குழுமத்தின் செயல்பாடுகளில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்று... அந்த கோபத்தில் அவர் சார்ந்த மதத்தை நுழைத்து தாக்குகிறார்கள் என்று.... முன்னொரு முறையும் இதே போல் தான் நடந்தது....

இஸ்லாமிய வளர்ச்சி என்பது தனி மனிதர்கள் சார்ந்தது அல்ல... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தானே நடக்கும்.... ஆமினா இல்லாட்டி ஒரு பெனாசிர், ஒரு பெனாசிர் இல்லாட்டி ஒரு சாஜிதா.....அவ்ளோதான்..
இஸ்லாத்திற்க்கு முன் தனி மனிதர்கள் அனைவருமே தூசு தான்... இந்த லட்சணத்தில மிரட்றாங்களாம்!!!!! அய்யோ..அய்யோ......காலக்கொடுமை...


சகோஸ்.. உங்களுக்கு பிரச்சனை அவருடன் என்றால் நேரடியாக அவருடன் மோதுங்கள்..அதை விடுத்து அவர் சார்ந்த மதத்தையும், பிற நபர்களையும் சாடுவது சரியான அணுகுமுறை ஆகாது.....

ஒரு வேளை சுவனப்பிரியனோ அல்லது வேறு யாரோ மிரட்டி அவர் உங்கள் குழுமத்தை விட்டு வந்து இருந்தாலும் அது ஆமினாவின் தவறே அன்றி சுவனப்பிரியனின் தவறு ஆகாது..... மிரட்டலுக்கு பணியும் அளவுக்கு ஆமினாவும் பலகீனமானவர் அல்ல....
அவர் ஒரு வீர மங்கை... (அட்ரா..அட்ரா..அட்ரா....)


குறிப்பு : இது தான் இந்த பிரச்சனை தொடர்பாக எனது லாஸ்ட் பதிவு**. நெஜமாவே ரொம்ப போர் அடிக்குது. வேல வெட்டி இல்லாம இருந்தா தான் இந்த சண்டைக்கெல்லாம் பிட் ஆகுவோம் போல....???????


வியாழன், செப்டம்பர் 13, 2012

சில ஈழப் பதிவர்களின் ஹிட்ஸ் வெறியும், பிரிவினை வாதமும்....

முக்கிய முன் அறிவிப்பு: இப்பதிவானது பதிவுலகில் சைக்கோ போல் சுற்றி திரியும் ஹிட்ஸ் வெறியர்களுக்காக மட்டுமே..  என்னையும் மீறி தவறுதலாக எங்கேனும் ஒட்டுமொத்த ஈழப்பதிவர்களை குறைகூறும்படியான வார்த்தைகள் அமைந்தால் சுட்டிக்காட்டுங்கள். அவ்வார்த்தைகள்/வசனங்கள் உடனே நீக்கப்படும்! (ஈழ பதிவர்கள்னு பொதுவா சொல்லக்கூடாதாம், இஸ்லாமிய வெறியர்கள் கட்டளை இட்டுள்ளார்கள், இந்த முறை மட்டும் கட்டுப்பட்றேன்னு சொல்லி இருக்கேன்)

சில நாட்களாக  எந்த வித சச்சரவுகளும் (பதிவர் சந்திப்பு குழுவிற்கும் மூத்த பதிவர்களுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தவிர்த்து) அல்லாமல் அமைதியாகவே இருந்துவந்தது. இது இந்த ஹிட்ஸ் வெறியர்களுக்கு பொறுக்கவில்லை போலும்! . சில நாட்களுக்கு முன் நிரூபன் இஸ்லாமியர்களை தாக்கி ஒரு பதிவு போட, அவர்கள் இயக்கிவரும் வானொலியை பிரபலப்படுத்த இத்தகைய  விளம்பரம் தேவைப்படுகிறது போலும்  என  கண்டுக்கொள்ளாமல் விட்டாச்சு. அவர்களின் நோக்கம் அப்போதும் புரியவில்லை! வெறும் ஹிட்ஸ், விளம்பரம் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது! அதன் பின்னும் ஐடியாமணி பதிவு போட  ஹிட்ஸ்  என்ற கண்ணோட்டத்திலேயே  அதையும் நினைத்தேன்! ஆனால்  இன்றைய பதிவில் தான் தெரிந்தது இவர்களின்  நோக்கம் என்னவென்று!




//அல்லாவுக்காகச் செய்யப்படும் கொலைகள் பற்றிக் கேள்வி கேட்டால், அவர்கள் இந்துக் கடவுள்களுக்காகச் செய்யப்படும் கொலைகள் பற்றித்தானே ப்பேசோணும்! அப்பத்தானே நாமும் எம் பக்க தவறுகளைத் திருத்த முடியும்!//

அட்ரா...அட்ரா...அட்ரா... இந்து-முஸ்லீம் பிரிவினை ஒன்று மட்டுமே இவர்களின் நோக்கம் என்று  இந்த பதிவில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது.,..   நாம் அல்லாஹ்வை தாக்கினால் இவர்கள் இந்து கடவுளை தாக்கக்கூடும்... அப்ப தான் பதிலுக்கு  மத்த பதிவர்களும் இஸ்லாமியர்களை தாக்குவாங்க... பதிவுலகில் மதக்கலவரம் வரட்டும்..  அமைதி குலையட்டும். ஆளாளுக்கு தனித்தனியா பிரிஞ்சு போகட்டும்... நாம ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கலாம்... சூடேத்திவிடலாம்... இதான் இவர்களின் நோக்கம்.. உங்க வாயாலேயே தெரியப்படுத்தியதற்கு நன்றிங்க!

ஏன் சார்.... இப்படி இரு பிரிவினர்களுக்கிடையே  பிரச்சனையை உண்டு பண்ணுவதால்  எதாவது பத்து பைசாவுக்கு ப்ரோஜனம் இருக்கா சொல்லுங்க?? இல்ல பிரான்ஸ்ல மால் கட்ட போறீங்களா? 

ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழி இருக்குங்க... ஏன் இந்த கேவலமான வழிய தேர்ந்தெடுக்கிறீங்க....???

எங்கனாலயும்....
 "பிரபாகரன் சிறந்தவறா.. ராஜபக்சே சிறந்தவரா???"
 "பிரபாகரன் சிறந்தவரா??? முல்லா உமர் சிறந்தவறா" னு பதிவு போட முடியும்.... பட் பெரும்பான்மை ஈழ மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்த விரும்பவில்லை... நேத்து பேசினதே மனசு இன்னும் ரணமா இருக்கு...

இந்த பதிவ ரொம்பா சூடா எழுதி இருக்க முடியும் சகோஸ்.... இந்த சண்டை போரடிக்குது எனக்கு.... How long???? hi..hi..hi..hi....

டிஸ்கி-1 : எனக்கு இன்னும் பசுமையா நியாபகம் இருக்கு.. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஈழ பதிவர்களுக்கும் இஸ்லாமியரகளுக்கும் சண்டை வந்தது.. அதன் பின் சில மாதங்கள் கழித்து ஈழ பதிவர்களுக்கும், தமிழக பதிவர்களுக்கும் சண்டை வந்தது...அப்ப நானும், ஆசிக்கும்(மனிதாபிமானி) பிரிவினைவாதத்தை ஆதரிக்க முடியாதுன்னு பதிவு போட்டோம்... அப்பொழுது நாங்கள் நினைத்து இருந்தால் இப்ப நீங்க பிடிக்க நினைக்கிற மீன ஈசியா பிடிச்சு இருப்போம்... நீங்கள் இப்படி நடந்துகொண்ட பிறகும் அந்த முடிவிற்காக நாங்கள் பெருமையே கொள்கிறோம்... ஏனெனில் எங்கள் செயல்களுக்கான கூலியை இறைவனிடமே எதிர்பார்க்கிறோம்..மனிதர்களிடம் அல்ல....

டிஸ்கி-2 : காலைல ஒரு SMS .. நான் நேத்து ரிஷியோட தளத்தில போட்ட கமெண்ட்ட Q பிராஞ்ச்க்கு அனுப்பிட்டாங்களாம்...வருண்னு ஒருத்தர் மும்பைல இருந்து மெஸேஜ் பண்ணி இருந்தார்... டைம் வேஸ்ட் பண்ணாதிங்க சார்... நம்ம பேர் 6 வருஷத்துக்கு முன்னாடியே அந்த லிஸ்ட்ல வந்திடுச்சு வேறு காரணங்களுக்காக....அய்யோ..அய்யோ......



வெள்ளி, மே 04, 2012

சில ஈழப் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ...முஸ்லிம்களை பதிவுலகில் இருந்து விரட்ட ஒரு அரிய சந்தர்ப்பம்.....


அன்புத் தம்பிங்களா.... இப்பயும் சொல்றேன்... இப்ப தான் போர் முடிஞ்சு, மனக் காயங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வர்றீங்க.. இப்ப உங்க மக்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு..அதைலாம் விட்டுட்டு இஸ்லாத்த தாக்குறது தான் உங்கள் முதல் குறி  அப்டின்னா...நீங்க சமீபத்திய வரலாற்றில் இருந்து கூட சரியா பாடம் படிக்கலன்னு தான் அர்த்தம்...

நீங்க என்ன தாக்குனாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது, எங்க வேலைய நாங்க பாத்துகிட்டு தான் இருப்போம்.. ஆனா நாங்க தீவிரமா தாக்க ஆரம்பிச்சா உங்க மனசு ரொம்ப வலிக்கும்... நொந்து போய் இருக்க ஒரு மக்களை தாக்குற அளவுக்கு காட்டுமிராண்டி இல்ல நான்(ஆனா நாங்க காட்டு மிராண்டின்னு நீங்க கத்திகிட்டே இருப்பீங்க, அதுக்கு உங்களுக்கு ஒரு smiley தான் பதில்) ... நெஜமாவே எனக்கு உங்கள தாக்க மனசு கஷ்டமா இருக்கு..அதான் இன்னும் எதிர் பதிவு போடாம இருக்கேன்... இல்ல நாங்க அப்டி தான் இருப்போம்.. எங்களுக்கு எங்க மண்ணு, மக்கள் , மீள் குடியேற்றம், வாழ்க்கை இதெல்லாத்தையும் விட முஸ்லிம்களோட
சண்ட போடறது தான் பிடிச்சு இருக்குன்னா...கண்ணுகளா நான் தயார்....

தம்பி மதி சுதா,

உங்க பதிவு பாத்தேன்...அடுத்த பதிவு தலைப்புலாம் போட்டு கலக்கலா எழுதுறீங்க....ஹி.ஹி..ஹி.. வாழ்த்துக்கள்....உங்களுக்கு மட்டுமே தனியா 3 தலைப்பு ரெடி பண்ணி வச்சி இருக்கேன்...நீங்க அடுத்த பதிவு போட்டா நானும் போடறேன்.... அதுல அந்த தலைப்புகள தர்றேன்.. இப்ப வேணாம்...சரியா???

உங்க அண்ணன் எந்த நிலையில் இருக்காரு??? அவருக்கு ஏதாவது ஆக்கப் பூர்வமா பண்ணுவோம், இப்டி யோசிக்கிறத விட்டுட்டு நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க???? உங்கள பார்க்கையில் பாவமா தான் வருது தம்பி.... கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க...வர மாட்டேன்னு அடம் பிடிச்சா அப்டியே இருங்க....எழுதி வச்சுகங்க நட்டம் உங்களுக்கு தான் இருக்கும்...

அன்புத் தம்பி மதுரன்,

நல்லா இருக்கீங்களா... கமெண்ட் லாம் பறக்குது..பார்த்தேன்...ரொம்ப கோவத்தில இருக்கீங்க போல... தமிழ்மணத்தில மகுடத்த வஹ்ஹாபி மகுடம் னு மாத்தணும்னு சொல்லி இருந்தீங்க... வஹ்ஹாபி னா என்னன்னாவது தெரியுமா தம்பி????? இப்ப வரை தெரிஞ்சு இருக்காது..இப்ப இந்த கேள்வி கேட்டநாள இனி யார்கிட்டயாவது கேட்கனும்னு ஓடுவீங்க...
போய் கோவி கண்ணன் கிட்ட கேழுங்க கரெக்டா சொல்வார்.. இல்லாட்டி நம்மகிட்ட chat ல வாங்க விரிவா சொல்றேன்...

ஏன் கண்ணு அவ்ளோ கஷ்டப் படறீங்க???? தமிழ்மணம் மகுடம் தூக்கணும், அது இதுன்னு... அதான் எங்கள ஒழிக்க எழிமையான வழி சொல்லி இருக்கோமே... மனிதாபிமானி தளத்தில்
என் கமெண்ட் பாக்கலையா??? நாங்க தான் கள்ள ID பயன்படுத்துறோம்னு நிரூபிச்சா நாங்க எல்லாரும்  பதிவுலகத்தவிட்டு போறோம்னு பகிரங்க சவால் விட்டனே?? பாக்கலையா???
சரி பாக்காட்டி.. இப்ப கேட்டுகங்க... நிரூபிங்க.. நாங்க ஓடிட்றோம்.. வெரி சிம்பிள்....

அப்புறம்... பேச்சு சுத்தம் ஒரு மனுஷனுக்கு முக்கியம் மதுரன்....உங்க கடைசி பதிவுல நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இனி நான் இது தொடர்பில் பேச மாட்டேன்னு சொன்னீங்க.. ஆனா அடுத்து அடுத்து தாக்கி கமெண்ட் போடறீங்க... கமெண்ட் போடறதுக்கு பேசாம நீங்க பதிவே போட்றலாமே?? என்ன வித்தியாசம்??? ஆனா நாங்க பாருங்க அப்டி இல்ல.. நீங்க சொன்ன பிறகு சகோ ரஜின் ஒரு பதிவு போட்டார், ஒடனே முஸ்லிம் பதிவர்கள் தூக்கச் சொன்னாங்க...அவரும் தூக்கிட்டார்... இதாங்க நேர்மை.... இதாங்க வாய்மை.. நீங்க எந்த கொள்கைல வேணும்னாலும் இருங்க.. பட் நேர்மையற்று, வாக்கு சுத்தம் இல்லாம இருக்காதீங்க...அப்டி இருந்தா இறுதி வெற்றி கிடைக்காது....

http://sunmarkam.blogspot.in/2012/05/blog-post.html   இத பாருங்க..


சகோ நிரூபன்,

நலமா??? உங்களுக்கு மறுபடியும் கடிதம் எழுதுற மாதிரி வந்திருச்சு.... ஹ..ஹா..ஹ... நேத்து உங்க பதிவு படித்தேன்.. நல்லா காமடியா இருந்துச்சு...நல்லா வாரி இருந்தீங்க...யார??? அதான் எனக்கும் புரியல???
உங்களுக்காவது புரிஞ்சா சரி.... என்ன நிரூபன் நீங்க??? பதிவுலகில் நீங்க அனைவரும் அறிந்த ஒரு நபர்...அப்படி பட்டவர் ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தலாமா???? இருங்க உங்க பதிவ மறுபடியும் படிச்சுகிறேன்...
என்ன சொன்னீங்கன்னு வார்த்தை மறந்து போச்சு...வெய்டீஸ் ப்ளீஸ்....ஆங் வந்துட்டேன்....

/* இப்படியான வசை மொழிகளுக்கு பயந்தா 21ம் நூற்றாண்டில ஐரோப்பாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வேலைகளைச் செய்ய முடியுமா சார்?  */ - நிரூபன் பதிவில் உள்ளது....

ஹி..ஹி..ஹி... தம்பி தெளிவா இருக்கீங்கல்ல....?????? இங்க ஒருத்தருக்கு தான் இருக்குறதுக்கே ஒரு நாடு இல்லையாம்...இவங்க ஐரோப்பா இஸ்லாம் ஆகுறத பத்தி கவலை பட்ராங்கலாம்... ஐயோ..ஐயோ... இத படிச்ச ஒடனே நெஜமாலுமே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது தம்பி....நீங்க இன்னும் வளரனும்... உருப்படியா உங்க மக்களுக்கு ஏதாவது செய்ய ட்ரை பண்ணுங்க....

/* ஒலகத்துல நம்ம ஆளுங்களில் சிலர் வெறி கொண்டு எப்போதும் கலவரம், கொலை, குண்டு வைப்புன்னு செம ஜோரான காரியங்களைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.  */ - நிரூபன் பதிவில் உள்ளது....

அப்ப... இத யாரு பண்ணாலும் வெறியனுக தானே????? ஈன புருஷன் தானே??? தம்பி பின்னாடி மாத்தி பேசமாட்டீன்களே???? ஹி..ஹி..ஹி.. அப்ப இலங்கைல வெடிச்ச குண்டெல்லாம்...ஹி..ஹி..ஹி.. அப்ப அவங்க எல்லாம்...ஹி..ஹி..ஹி..  இதுக்கு மேல விளக்கமா சொல்ல தேவை இல்ல...பாக்குறவங்களுக்கு இந்நேரம்  தானா புரிஞ்சு இருக்கும்...

/* கடமைகள் பலது இருக்குங்க. ஒரேயாளா தனித்து நின்னு, நான்கு, ஐந்து பேர்களில் (வெவ்வேறு பேர்களில்) ப்ளாக் உருவாக்கி ஒட்டு மொத்த பதிவுலகத்தையும் மதம் மாத்தி நம்ம மதத்திற்கு அடிமையாக்குவதும், நாற்பது கள்ள ஐடி வைச்சு ப்ளஸ், மைனஸ் ஓட்டு போடுவது தான் கடமைகள் என்று சொல்ல முடியும்.   */ - நிரூபன் பதிவில் உள்ளது....

நிரூபன்..இது சீரியஸ்..உங்களுக்கு பகிரங்க சவால்.. நீங்கள் உணமையாலர்களாக  இருந்தால் இதை நிரூபிக்க வேண்டும்...நீங்க டெக்னாலஜி நல்லா தெரிஞ்சவங்க என்று ஒரு பேச்சு இருக்கு... சோ, நிரூபிங்க... இல்லாட்டி உங்க கூட்டமே பொய்யர் கூட்டம்னு இந்த பதிவுலகம் தெரிஞ்சு கிரட்டும்....


அண்ணே கந்தசாமி,

அப்புறம் உங்க லேட்டஸ்ட் போஸ்டும் படிச்சேன்... ஒரு பைத்தியம் எழுதுனா எப்படி இருக்குமோ அப்டி இருக்கு...உங்க பைத்தியம் தெளிய வாழ்த்துக்கள்... நீங்க இருக்கிற இந்த நிலமைலையும் இப்டி பேசுறீங்களே..
நீங்கல்லாம் நல்லா இருந்தா என்னன்னா பேசுவீங்க???? கடவுள் அத அத இருக்க வேண்டிய இடத்தில தான் வைக்கிறான்.


இப்பதைக்கு இவ்ளோ தானுங்க...தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்ங்க.... ஒரே ஒரு சின்ன அட்வைஸ்..கேட்குறதும் கேட்காததும் உங்க இஷ்டம்....

மல்லாக்க படுத்துகிட்டு எச்சி துப்பாதீங்க....நீங்க நினைக்கலாம் அது அடுத்தவர் மீதும் படும்னு...பட் முடிவு வேற மாதிரி இருக்கும்....

நன்றி..


புதன், பிப்ரவரி 22, 2012

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு


 
                                                      
 
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி J . ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் சொன்ன சில முக்கியமான வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவேன் என்பதும் ஒன்று.
 
 
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது தற்போதைய முதல்வரின் ஸ்பெசாலிட்டி என்பது போன்ற ஒரு பிம்பமும் நீண்ட நெடுங்காலமாய் அவரின் ஆதரவு பத்திரிக்கைகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் வாயிலாக பெருமையுடன் பேசப்பட்டு வந்தது. இப்பொழுது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இதுவும் அரசிடம் காரியம் சாதிக்க நினைக்கும் நபர்களின் துதிகளில் ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
 
 
நிறைய உதாரணங்கள் இருந்தாலும் ஓரிரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
 
 
சம்பவம்-1 : சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.


சம்பவம்-2 : சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.இந்த வங்கியில் நேற்று பகல் 2 மணிக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தனர். வந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி சர்வ சாதாரணமாக ரூ 14 லட்சங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
 
 
சம்பவம்-3 : நேற்று இரவு திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள் ரூ 14 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதே திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் முத்தூட் நிறுவனத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.
 
 
                                                      
 
 
கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்???? ஒவ்வொரு கடை அல்லது நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நடை முறைச் சாத்தியமா? என்று யோசித்தால், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே கொள்ளை நடக்கும் விசயத்தில் அரசை பெரிதாக நாம் குற்றம் சாட்டி விட முடியாது தான்.
ஆனால் பெரிய அளவில் திட்டம்   போட்டு பட்டப் பகலில் பஹிரங்கமாக துப்பாக்கி காட்டி கொள்ளை அடிக்கும் நபர்களை பல மாதங்களாக பிடிக்க முடியாமல் இருப்பது நிச்சயம் காவல்துறை மற்றும் உளவுத் துறையின் தோல்வியைத் தான் காட்டுகிறது.
 
 
இதற்கு மேலும் தாமதிக்காமல், முதல்வர் மக்களுக்கு கொடுத்த சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்ற வாக்குறுதியை உறுதியாக செயல்படுத்த வேண்டும். உண்மையோ பொய்யோ, அவரின் மீது கூறப்படும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர் என்ற சொல்லை காக்க கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது நிச்சயம் அவரின் ஆட்சியின் நீங்காத கரையாக வரலாற்றில் பதியப்படும். பின் அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை.
 
 
நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று பெருமை பொங்க அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
அது முற்றிலும் உண்மை தான். அதற்காக நன்றி மேடம்.
 
 
ஆனால்... ஆனால்... பேங்குகளையும், நகைக்கடைகளையும் கொள்ளை அடிக்கும் பலே திருடர்கள் அனைவரும்
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து விட்டார்களே அம்மா. வாட் டு டூ!!!!!!
 
 
இது தொடர்பில் நான் இந்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் பதிவிட்ட கீழ்க்கண்ட பதிவையும் பார்வையிடுங்கள் நண்பர்களே...
 


திங்கள், பிப்ரவரி 20, 2012

இன்றைய சென்னை பனி மூட்டமும், எனது ஆக்ரா நினைவுகளும்....

 
இன்று அதிகாலை எழுந்து வீட்டின் கதவை திறந்த சென்னை வாசிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கிடந்தது.
 ஊரைச் சுற்றி வெள்ளை போர்வை போர்த்தியது போல் ஒரே பனிமூட்டம் (FOG ). சென்னைக்கு , அதுவும் பிப்ரவரி மாத இறுதியில் இது அரிதான காட்சி என்பதால் பார்க்கவே பரவசமாக இருந்தது.
 
 
                                                 
 
எனது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக பைக்கில் சென்ற பொழுது குளிர்க்காற்று முகத்தில் அறைந்தது பேரானந்தம்.
அதுவும் சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகம் இருந்த நிலையில்.
நிச்சயம் அனைவரும் ரசித்து அனுபவித்து இருப்பார்கள். 
 
காற்றின் வேகக் குறைவும், ஈரப்பத குறைவும் இந்த பணிமூட்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அது தினமும் தொடர வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
டெல்லியில் இருப்பது போல் ஒரு பீலிங்.
 
இதன் மறுபக்கமாக, இன்று அதிகாலை முதல் 7 மணி வரை சென்னை விமான நிலையத்தில் எந்த விமானகளும் தரை இறங்கவோ அல்லது கிளம்பவோ இல்லை என்று புதிய தலைமுறை செய்தி சொன்னது. ECR ரோட்டில் ஒரு பஸ் கவிழ்ந்து உள்ளது. நிச்சயம் இதற்கும் பணிமூட்டமே  காரணமாக இருக்கும்.
 
இதைப் பார்த்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு டிசம்பர் மாதத்தில் டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு தாஜ்மஹால் பார்க்க நண்பர்களுடன் சென்றது தான் நினைவிற்கு வருகிறது. பனி மூட்டம்னா மூட்டம், அப்படி ஒரு மூட்டம். மூட்டு மூட்டுன்னு மூட்டிருச்சு என்றே சொல்லலாம். 10   அடிக்கு   முன்னாள் இருந்த எதுவும் தெரியவில்லை. அதிகாலை 5 மணிக்கே புறப்பட்டுவிட்டோம் பெரிய பெரிய  கனவுகளுடன்.
 
 
                                                
 
என்ன கனவென்றால், நேராக பதேபூர் சிக்ரி(முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம்) என்ற ஊருக்கு போவது. அதன் பின் தாஜ்மஹால் சென்று பார்த்துவிட்டு வரும் வழியில் சரித்திர புகழ் பெற்ற ஆக்ரா கோட்டையை பார்வை இடவேண்டும் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள். அனைத்துக்கும் இந்த பனி(FOG ) வச்சது பாருங்க ஆப்பு....
 
ஆமாங்க.. நாங்க அனைவரும் ஒரு செவ்ரோலே காரில்  சென்றோம், ஒரு 3  மணி நேரத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம் என்று திட்டம். ஆனால் இந்த பணியால் 5 மணி நேரங்களுக்கு மேல் ஆனது. போகும் வழி எல்லாம் சிறு சிறு விபத்துக்களை காண நேர்ந்தது. விபத்து நடந்த ஒவ்வொரு இடங்களிலும் 3 அல்லது  அதற்க்கு மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன.
 
இப்படியாக தாமதம் ஆனதால், நிகழ்ச்சி நிரலில் சில மாறுதல்களை செய்தோம். அதாகப்பட்டது, பதேபூர் சிக்ரி போவது இல்லை என்றும். முதலில் ஆக்ரா கோட்டையை பார்த்துவிட்டு தாஜ் மஹால் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆக்ரா அடைந்தவுடன், அந்த ஆக்ரா கோட்டையை பார்வையிட உள் நுழைந்தோம்.....
 
 
                                             
 
ஆக்ரா கோட்டையை பார்வை இடுகையில் தான்...இந்திய வரலாறு எப்படி பொய்களாலும் நயவஞ்சகங்களாலும்  நிரப்பப்பட்டுள்ளது என்பதை கண்டு கொண்டேன்...
 
மக்களே தயவு செய்து இந்திய வரலாற்று புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் மொகலாயர்களின் வரலாறை நம்பாதீர்கள்.... அது பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை நான்
எனது அடுத்த பதிவில் நிரூபிக்கிறேன்....
 
அதுவரை காத்திருங்கள் சகோஸ்.......


சனி, பிப்ரவரி 18, 2012

என்னப்பா இது... வினவுக்கு வந்த சோதனையா இது....??????

கடைய நல்லூர்ல துரப்ஷா துரப்ஷா னு ஒருத்தர் கோழி கடை வச்சி இருந்தாராம். அவர் ஒரு முஸ்லிமா இருந்தாராம். சிலப் பல நாட்களுக்கு பிறகு இஸ்லாமிய கொள்கை 
பிடிக்காமால் கம்யுனிஸ்ட் ஆகிட்டாராம். ஆனா என்ன, அமைதியா கோழி வியாபாரம் பார்த்துகிட்டு குழந்த குட்டிய படிக்க வச்சிக்கிட்டு ஜாலியா இருக்க வேண்டியதுதானே.

அண்ணே அத தான் செய்யல. கம்யுனிஸ்ட் புத்தி சும்மா இருக்குமா???? இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் மதிக்கும் லூத் என்ற நபிய பத்தி எவனோ எழுதின ஒரு கட்டுரைய பேஸ்புக் ல பஹிர்ந்தாராம். சரி அதாவது ஒரு நாகரிகமாக பேசும் கட்டுரயான்னா பதில் இல்லன்னு தான் சொல்லணும். பார்த்த  நம்ம பக்கிய சும்மா இருக்குமா???
பிரிச்சு மேஞ்சுருச்சுகன்னு நினைக்கிறேன். சரியா தெரியல. மேஞ்சிட்டாணுக என்றே கொள்வோமே?? என்ன கெட்டிவிட போகிறது???

ஏன் பிரிச்சாணுக???? அது என்ன அவுக எழுதுன கட்டுரையா??? பஹிர்ந்தது தானே??? யார் எழுதுனதுன்னு நீங்க ஏன் ஆராட்சி பண்ணல???? அப்படின்னு வினவு குதிக்குது. இங்க தான் எனக்கு ஒரு மைல்ட் டவுட்டு. எழுதுனா என்ன?? பஹிர்ந்தா என்ன??? எல்லாம் ஒண்ணுதானே???? என்னோவோ போங்க வினவுக்கு தான் வெளிச்சம்.

சரி, மேஞ்சு முடிச்சாச்சா???? மேஞ்ச உடனே நம்ம துரப்ஷா என்ன பண்ணி இருக்கணும்??? வினவுக்கு போன் போட்டு இருக்கணும். இந்த இந்த மாதிரி நம்ம கொள்கைய எதிர்க்கிராணுவ, கருத்து சுதந்திரம் இல்லாம போய்டுச்சு, கேவலம் 400 கோடி பேர் மதிக்கும் ஒரு மனிதரை அநாகரிகமாக பேசுவது தவறா???  அராஜகம் தலை விரித்து ஆடுது,
நாங்கல்லாம் சீனாவுக்கு போய் அங்கேயே ஜிங் ஜங் ஜக்க எதிர்த்து கேள்வி கேட்போம், இவனுக என்ன சுண்டக்கா  அப்படின்னு. அப்படி செஞ்சாரா நம்ம துரப்ஷா. அது தான் இல்ல. அடிச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்ட்.

அட ஆமாங்க, நம்புங்க.. "நான் தப்பு பண்ணிட்டேன், என்ன மன்னிச்சுகங்க, நான் அல்லாஹ்வையும் முஹம்மது நபியையும் உளமார நம்புறேன்னு" சொல்லிட்டு படக்குன்னு முஸ்லிம் ஆயிட்டாரு இந்த கொள்கைக்  குன்று.

பொறுக்குமா வினவுக்கும் அவர் கூட்டாளி ரெட் flag க்கும்???? போட்டாங்க பாரு ஒரு கட்டுரைய. அந்த கத உங்களுக்கே தெரியும். அத பார்த்து மனிதாபிமானி சும்மா இருப்பாரா??  போட்டாரு பாருங்க அவரு ஒன்ன, அதுவும் பத்திகிட்டு ஓடுது. இதெல்லாம்  பார்த்துகிட்டு நான்  சும்மா இருப்பேனா?? போட்டேன் பாருங்க நான் ஒன்ன. அதான் இது.

யாரோ நாலு பேரு இழுத்துகிட்டு போய் அவர முஸ்லிம் ஆக்கிடாங்கலாம். நான் நெனைக்கிறேன் இதுக்கு முன்னாடி செங்கொடி தான் இழுத்துகிட்டு போய் மிரட்டி அவர கம்யுனிஸ்ட் ஆக்கி இருப்பாருன்னு. இப்ப முஸ்லிம்கள் மிரட்டி முஸ்லிம் ஆக்கிட்டாங்க. நாளைக்கு RSS காரன் மிரட்டி இந்து ஆக்குவாணுக. அதுக்கு பிறகு கம்யுனிஸ்ட் மீண்டும் மிரட்டி பொதுவுடமைக்கு வருவாரு.

துராப்சாவுக்கு இருக்கிறதுக்கு பேரு ஒரு கொள்கை??? இதில அவரு எங்க கோஷ்டி, உங்க கோஷ்டின்னு ஒரு சண்டை??? அதுக்கு 3 பதிவு வேற. போங்கப்பா, போய் வேலைய பாருங்கப்பா. நாளைக்கே  அவரு கிறித்துவரா  வந்தாலும் வருவாரு.

முடிக்கும் முன், இதுக்கு நடுவுல என்ன காமடி நடந்துச்சுன்னு தெரியல. இன்னொரு பொது உடமை கொள்கைக் குன்று ரெட் FLAG  தன் தளத்த மூடிருச்சு. என்ன நடந்துச்சு, என்னான்னு புரியல. மர்மமா இருக்கு. இந்த குன்றோட ஊரும் கடையநல்லூர் தான் என்பது கூடுதல் தகவல்.

என்னப்பா இது!!!
(கடைய)நல்லூருக்கு வந்த சோதனையா இது....
பொதுவுடமைக்கு வந்த சோதனையா இது....
குறிப்பா வினவுக்கு வந்த சோதனையா இது....??????


புதன், பிப்ரவரி 15, 2012

தி.மு.க.,வின் தலைவராக நான் ரெடி- இது அழகிரியின் அட்டாக்.....


சென்னை வந்த மத்திய அமைச்சர் அழகிரியை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சங்கரன்கோவில்  இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா? என்று கேட்டபோது முதலில் தேதியை அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.

அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறக்கி விட்டுள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே என்ற கேள்விக்கு, திமுக மந்த நிலையில் இல்லை. வருகிற  17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்  நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம் என்றார் அழகிரி.

அடுத்து முக்கியக் கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். திமுகவில் தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என்று அவர்கள் கேட்டபோது, கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி சிரித்தபடி.

அடுத்ததாக இன்னொரு முக்கியக் கேள்வி கேட்கப்பட்டது. திமுக,  தேமுதிக இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டனர். ஆனால் அதற்கு பதிலே தராமல் போய் விட்டார் அழகிரி.


ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

என்னை பேச வைத்துவிடாதீர்கள்- ஜெயலலிதாவை மிரட்டும் விஜயகாந்த்.........




விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:


இடைத்தேர்தலுக்கு 26 மந்திரிகள் உள்பட 34 பேர் கொண்ட குழு அதிமுக அமைத்திருக்கிறது. ஆனால், தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 26 மந்திரி உள்பட 34 பேர் கொண்ட குழுவை அனுப்பினீர்களா? எங்க மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். சங்கரன் கோவிலில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை கொடுக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லாமல் இதையெல்லாம் எப்படி பயன்படுத்த முடியும். இதனால் மக்கள் அதிருப்திபயாக உள்ளனர். நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவை பொது மக்களுக்கு சேருவதை நான் தடுக்க மாட்டேன்.


சங்கரன் கோயில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால், வேட்பாளரை அறிவித்துவிட்டு குழுக்களை அமைத்து ஓட்டுக்ககு இலவசங்களை கொடுத்து வருகிறார்கள். இது உங்களுக்கு (அதிமுக) இடைத்தேர்தலில் தோல்வி பயம் உள்ளது என்பதை இப்போது தெரிந்துவிட்டது. என் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்கும் நான் பயப்பட போவதில்லை. என்னை பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள். இன்னும் நிறைய பேசுவேன். வேறு மாதிரி பேசுவேன்.

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர்.   இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


சனி, பிப்ரவரி 11, 2012

சசிகலாவுடன் மோதியதால் கைது செய்யப்பட்ட செங்கோட்டையன் உதவியாளர்....



 சென்னை : குடித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் தகராறு செய்த அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் அப்பு தெருவில் தேஜூ அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கோவர்த்தனன். இவரது மனைவி சசிகலா. இந்த அபார்ட்மென்ட்டில் சசிகலாவுக்கு சொந்தமாக இன்னொரு வீடும் உள்ளது. இந்த வீட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் பிரிவு உதவியாளர் ஆறுமுகம்(38), வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆறுமுகத்தின் வீட்டுக்கு அடிக்கடி இரவு நேரத்தில் சிலர் வந்து சென்றனர். பலர் குடித்து விட்டும் வந்தனர். கார்களை தங்கள் விருப்பம்போல நிறுத்தி விட்டுச் சென்றனர். இதுகுறித்து அபார்ட்மென்ட்டில் வசித்தவர்கள் சசிகலாவிடம் புகார் செய்தனர். இதனால், கடந்த 4 மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம் சசிகலா கூறினார். ஆனால் அவர் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம், சசிகலா கூறியுள்ளார். அதனால், இரவு அவர் குடித்து விட்டு தனது கார் டிரைவர் ராஜசேகருடன் அங்கு வந்துள்ளார். சசிகலாவின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். பின் வீட்டில் இருந்த டீப் பாயை உடைத்துள்ளார். அதோடு 'நான் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர். என்னிடமே உன் வித்தையை காட்டுகிறாயா' என்று சத்தம்போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து நேற்று மயிலாப்பூர் போலீசில் சசிகலா புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோரை நேற்று கைது செய்தார். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 452, 506(2) மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் அவர்கள் இருவரும் சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் சிக்னல்

அமைச்சரின் உதவியாளர் மீது புகார் என்றதும், போலீஸ் அதிகாரிகள் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பெண்ணை மிரட்டியது குறித்து தெரிந்ததும், உடனடியாக கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டிஸ்கி-1: சசிகலா என்றதும் எதையோ நினைத்து வேகமாக படிக்க வந்த உங்களுக்கு நன்றி.

டிஸ்கி-2;இந்த சம்பவத்தோடு தொடர்புடைய சசிகலா படம் கிடைக்காததால் முன்னாள் உடன் பிறவா சகோதரியின் படத்தை போட்டு சமாளித்துள்ளேன்.


டிஸ்கி-3: சீரியாசாவே எத்தனை பதிவுதான் போடறது?

டிஸ்கி-4:  டிஸ்கி பதிவை விட பெருசா போயிடுச்சே...




புதன், பிப்ரவரி 08, 2012

வாச்சாத்தி - கிடைத்தது முழுமையான நீதியா????


காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அந்த கூற்றை உண்மையாக்கியது போல் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  கொடுமைகளுக்கு, கடும் போராட்டங்களுக்கு பிறகு , 19  ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதென்ன வாச்சாத்தி வழக்கு, ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்....

ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான ஒரு குக்கிராமம்தான் வாச்சாத்தி. இது தர்மபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் இருக்கிறது. . கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.


இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில்  சந்தன மரங்கள் ஏராளமாக இருந்த காலம் அது.  இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, சந்தன மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர்.

அங்கு சில பாலியல் ரீதியான தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வர… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல்  கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். போலீஸார், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தனர். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.





இந்த சம்பவம் தமிழக மலைவாழ் மக்கல் நல சங்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த அ(கே)வலத்தை கண்ட தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீதி கிடைக்க அந்த சங்கம் போராட்டத்தில் இறங்கியது.  இவர்களோடு கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தது.  வழக்கும் போடப்பட்டது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக,  இன்றைக்கு அந்த மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க(?????) தீர்ப்பை பெற்றுத்தந்துள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் MLA அண்ணாமலை மற்றும் அதற்காக பாடுபட்ட நெஞ்சுரம் மிகுந்த அனைத்து மக்களையும் நான் உளமார பாராட்டுகிறேன். இதுபோன்று ஏழைகளுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் நல்லோர்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்தது முழுமையான நீதி தானா? குற்றவாளிகள் 
அனைவரும் தண்டிக்கப்பட்டு விட்டார்களா??? சிந்திக்க வேண்டிய கேள்வி 
தோழர்களே,நண்பர்களே, சகோதரர்களே.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர் அளவில் மனசாட்சியோடு தீர்பளித்துவிட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இது ஒரு முழுமையான தீர்ப்பாக எனக்கு படவில்லை, ஒரு சின்ன நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.
என்ன நெருடல் அது?????
இந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் பொழுதே இறந்து போனவர்கள் 54 பேர். அவர்கள் எந்த தண்டனையும் அனுபவிக்க வில்லையே???? அவர்களும் தவறு செய்தவர்கள் தானே???? அவர்களை நம்மால் தண்டிக்க முடியவில்லையே???? மரணம் அடைந்தது தான் தண்டனையா???? அப்படி என்றால் அனைவரும் தானே மரணம் அடையப் போகிறோம்... அவ்வளவு ஏன் இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்களும் ஒரு நாள் மரணிக்கத் தானே போகிறார்கள். எனவே குற்றவாளிகள் மரணம் அடைந்து விட்டால், அவர்கள் செய்த தீங்குகள் அநீதிகள் இல்லையென்று ஆகி விடுமா????
நிச்சயமாக மரணம் அடைந்தவர்களை எழுப்பி தண்டனை கொடுக்க முடியாது. வேறு என்னதான் தீர்வு????? இங்குதான் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை என்ற தத்துவம் வருகிறது...... சொர்க்கம், நரகம் என்ற கான்செப்ட் வருகிறது.
இறந்தவர்களை ஒருநாள் கடவுள் மீண்டும் எழுப்புவார். அவர்களின் நன்மை, தீமை குறித்து விசாரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சொர்க்கமோ நரகமோ செல்வார் என்ற சித்தாந்தம் வருகிறது.
அருமைத் தோழர் அண்ணாமலை, பாபு மற்றும் இதற்காக பாடுபட்ட தோழர்கள் இதை நம்புவார்களோ மாட்டார்களோ. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கான உண்மையான நீதி மறுமை நாளில்தான் கிடைக்கும். செய்த பாவத்திற்கு எந்த தண்டனையும் அனுபவிக்காமல் சென்றுவிட்ட அந்த 54 பெரும் இறுதித் தீர்ப்பு நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.

உலக மக்கள் அனைவர் முன்னிலயிலும் நடக்கும் அந்த நீதி விசாரணையின் போது தவறிழைத்தவர்கள் தலைகுனிந்தும், வாச்சாத்தி மக்கள் தலை நிமிர்ந்தும் சந்தோசமாக நடக்கும் அந்த கணம் நிச்சயம் வந்தே தீரும். அன்றுதான் அவர்கள் நீதிக்கான தேடல் முற்றுப்பெறும்.

குறிப்பு: நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் இருந்த பதிவு இது...  நேரமின்மை காரணமாக அப்போது வெளியிட முடியவில்லை.


திங்கள், பிப்ரவரி 06, 2012

பதிவர் சென்னை பித்தனின் மறுபக்கம்....


பிரபல பதிவர் சென்னை பித்தனை, பதிவுலகில் இருக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் பதிவு உண்டு என்று எழுதக்கூடியவர், புதிய பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவர், இத்யாதி இத்யாதி. இது தான் அவரைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்தது. 
அது ஓரளவிற்கு உண்மை தான். ஆனால் அவர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில விடயங்கள் உண்டு. அவற்றை பொது மேடையில் பேசுவதால் அவர் இதைப்பற்றி தவறாக எண்ணிவிடக் கூடாது**.
                                                       
கடந்த பொங்கல் அன்று, நானும் நண்பன் ரஹீம் கஸாலி அவர்களும் சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றோம். இது  சம்பந்தமாக நண்பன் கஸாலி, "புத்தகக் கண்காட்சியில் நான்" என்ற தலைப்பில் தொடராக எழுதி அனைவரையும் கொலையா  கொண்டதை நாம் அனைவரும் அத்துணை எளிதில் மறந்து விட முடியாது. நிற்க.
நாங்கள் அவருடன் ஒரு 10 அல்லது 15 நிமிடமே பேசி இருப்போம். இது தொடர்பில் சென்னை பித்தன் ஐயா அவர்கள் பதிவிட்டதை போல், நாங்கள் ஒன்றும் பதிவுலகயோ அல்லது மொத்த உலகையோ புரட்டி போடும் விஷயங்கள் பற்றி எல்லாம் பேசவில்லை. நாங்கள் நலம், நீங்கள் நலமா??? என்ற அளவில் தான் பேசினோம். இந்த பதிவு எங்கள் பேச்சு பற்றியோ அல்லது சந்திப்பு பற்றியோ அல்ல. மாறாக அவரது வீட்டில் நான் கவனித்த ஒரு நெகிழ்வான விஷயம் பற்றியது.

ஆம். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவருக்கு அருகில் ஒரு வயதான அம்மா அமர்ந்திருந்தார்கள். பேச்சின் ஊடாக அவர்கள் யார் என்று கேட்டோம். அதற்க்கு அவர்தான் எனது தாயார், அவருக்கு வயது 93 ஆகிறது. இந்த வீட்டில் நானும் அவரும் மட்டும் தான் இருக்கிறோம், நான் தான் அவரை கவனித்து கொள்கிறேன்  என்று கூறினார். ஒரு நிமிடம் நான் ஆடிப்போய் விட்டேன்.

பெண்டாட்டி, பிள்ளை,, தம்பி தங்கை என்று இருக்கும் பொழுதே இந்த காலத்தில் பெற்ற தாய் தந்தையரை யாரும் கவனிப்பதில்லை. குறிப்பாக நகரம் என்ற நரகத்தில் வாழும் படித்த பொடலங்காய்கள் பொண்டாட்டிக்கு பிடிக்க வில்லை, நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவோம் அதனால் இவர்களை கவனிக்க ஆளில்லை என்று ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி  பெற்ற தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடும் இந்த காலத்தில், 93 வயது நிரம்பிய தனது தாயை
அவர் ஒருவராக கவனித்துக் கொள்கிறார் என்றால்(சென்னை பித்தனுக்கு வயது 76 , சரியா ஐயா????), அந்த மனிதத்தை என்னவென்று சொல்வது???? அந்த பாசத்தை என்னவென்று சொல்வது????? வார்த்தைகள் இல்லை.

அந்த சந்திப்பிற்கு பின், பல முறை நான் அது பற்றி சிந்தித்தது உண்டு. 76 வயதில் நாம் நமது பெற்றோரை இது போன்று பார்த்துக்கொள்வோமா? ஏன் பெரும்பாலானோரால் .இவரைப்போல் இருக்கு முடியவில்லை? தனது பெற்றோரை புறக்கணிக்கும் கொடூர மனது மனிதனுக்கு எப்படி வருகிறது??? என்று எண்ணற்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.
நாமும் நமது பெற்றோரை கடைசி வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மனதிற்குள்  நினைத்துக்கொண்டேன்.
சென்னை பித்தன் அய்யா!!!! இந்த பொருள்/பணம்  சார்ந்த உலகில், தனி மனிதராக தனது  தாயாரை கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அனைவரும் பாராட்டுக்கு  உரியவர்கள். உங்களில் இருந்து தான், முதியோர் இல்லங்களில் தனது தாய் தந்தையரை விட்டுச் செல்லும் கழிசடைகள் பாடம் படிக்க வேண்டும். இன்று தனது தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் அனாதைகளாக விடும் அனைவரும் நாளை நிச்சயம் அதைவிட கேவலமான நிலையையே அடைவார்கள்.
ஏனெனில், ஆத்திகர்களுக்கு சொல்வதானால், நிச்சயம் இறைவன் அவர்களை தண்டிப்பான். நாத்திகர்களுக்கு அறிவியல் பூர்வமாக சொல்வதென்றால்
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை ஒன்று உண்டு.


உங்கள் தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரில், தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உங்களோடு இருந்தால், அவர்களை ”சீ” என்று கூட கூறாதீர்கள். மேலும், அவர்களை கடிந்து பேசவேண்டாம். மாறாக, அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக.....
அல்குர் ஆன் - 17:23

தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கலாம்.


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஈழ பதிவர்களாம், தமிழ் பதிவர்களாம்...என்ன பிரிவினை இது?

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பதிவுலகில் சமீபத்தில் நடக்கும் சில சங்கடங்கள் வருத்தத்தை தருவதால், எங்கள் நிலையை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

சில ஈழ பதிவர்கள் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. அதற்காகவே தற்போது அவர்களிடம் இருந்து விலகி இருக்கின்றோம். அதே நேரம், இந்த வருத்தத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் என்பது மாதிரியான எண்ணம் எழுந்தால் அது தவறானது (சகோதரர் நிரூபன் அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு சில முஸ்லிம்கள் ஆதரவு வோட் போட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். அதுபோல தமிழக நண்பர்களை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளில் எந்த முஸ்லிமாவது ஆதரவு கொடுத்திருந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்).

"...எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை அறிந்தவனாக இருக்கின்றான்" - குர்ஆன் 5:8

இறைவனின் இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தே இருக்கின்றோம். ஒருவர் மீது நாங்கள் கொண்டுள்ள வருத்தம், நியாயம் அநியாயம் பார்க்காமல் அவருக்கு எதிராக செயல்பட வைக்குமானால் நாங்கள் முஸ்லிம்களே இல்லை.

ஈழ, முஸ்லிம் பதிவர்கள் இடையிலான பிரச்சனை துரதிஷ்டவசமானது. இந்த பிரச்சனையில் எங்களுக்கு உதவ இங்குள்ள தமிழ் பதிவர்கள் வரவில்லை என்ற கருத்தையும் காண நேர்ந்தது. இதுப்போன்ற கருத்துக்கள் வருத்தமளிக்க கூடியவை. இங்குள்ள பல பதிவர்களுடன் அழகான நட்பு எங்களுக்கு இருக்கின்றது. பல விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவியும் கொள்கின்றோம். அப்படியான நிலையில் அவர்கள் மீது வருத்தம் கொள்ள ஒன்றுமில்லை. அவர்கள் நிலையில் இருந்து இதனை அணுகவே விரும்புகின்றோம்.

உலகில் உள்ள அனைவரும் சகோதர சகோதரிகளே. இதில் ஈழ, தமிழர் என்று பிரித்து பார்க்க ஒன்றுமில்லை. பிரச்சனை ரீதியான கருத்துவேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய, பகுதி வாரியான கருத்துவேறுபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈழ, தமிழர் என்று பிரிவினை பேசுவதெல்லாம் எங்கள் கொள்கைக்கு முற்றிலும் எதிராவை. இஸ்லாமிற்கு நேரடியாக பங்கம் விளைவிக்க கூடிய இந்த விசயத்தில் முஸ்லிம்கள் எவ்வித ஆதரவும் தர இயலாது.

பதிவுலக சகோதரர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், தயவுக்கூர்ந்து உங்கள் வேறுபாடுகளை களைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையை வளர்க்கும் விதமாக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாடி பதிவிடுவதை நிறுத்துங்கள். ஒருவருக்கு சிறிதளவு கூட சங்கடம் தரும் விதமாக, உணர்வுகளை தூண்டும் விதமாக பதிவிட வேண்டாம். சிலபல காலம் இதுக்குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்துக்கொள்ளுங்கள். நேர இடைவெளி நிச்சயம் ஒரு அழகான புரிதலை தரலாம் (இறைவன் நாடினால்).

இதுப்போன்ற துரதிஷ்டவசமான நிலையிலிருந்து பதிவுலகம் வெளியில் வந்து ஆரோக்கியமான வகையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

--- சிராஜ் & ஆஷிக் அஹமத்
நன்றி: முஸ்லிம் பதிவர்கள்.     


வெள்ளி, ஜனவரி 27, 2012

சவுதியில் இந்தியர்கள் இரத்த தானம் - இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா ரியாத் மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் பல்வேறு கிளைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், இரத்த தான முகாம்கள், பாதிக்கப்பட்டோருக்கு அவசர கால நிவாரண உதவிகள், கல்வி விழிப்புணர்வு முகாம்கள், மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள், ஜகாத் உதவிகள், உடற்பயிற்சி முகாம், கல்வி உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றது. இந்திய குடியரசின் அரசியலமைப்பு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, ரியாத் மாநகரில், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 16 ஆவது மெகா இரத்த தான முகாம் ஆகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது. அவர்களுள் பலருக்கு பி.ஜெ. அவர்களின் தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



முகாம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் குறிப்பிடும் போது, "இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெறுமனே கொடியேற்றிவிட்டு கலைவதும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையுமே பெரும்பாலோர் செய்து வருகின்றனர். தொலைக்காட்சிகளோ சினிமா நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதில்தான் தத்தமது கவனத்தை செலுத்துகின்றன. இந்த நாட்களில் அனைவரும் பயன்பெறும் வகையில் TNTJ பயனுள்ள நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு பாகம் தான் இன்றைய இரத்த தான முகாம். இந்த இரத்த தான முகாம் குறித்த செய்திக்குப் பிறகாவது, நமது குடியரசு தின கொண்டாட்டங்களை மக்கள் பயனுறும் முறையில் அமைத்துக் கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும்" என தெரிவித்தார்.

நாம் அளித்த இந்த குருதிக்கொடை இந்திய விடுதலைக்கு வித்திட்ட முஸ்லிம்களையும் அவர்களது தியாகங்களையும் நினைவுபடுத்தும் விதமாக அமையட்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேரமின்மை மற்றும் இதர காரணங்களால் 270 நபர்கள் பதிவு செய்ததில், 248 நபர்களால் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.

ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகளும் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளுக்கிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் ரியாத் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இச்செய்தி பிரபல நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.

நன்றி: http://riyadhtntj.blogspot.com/2012/01/riyadthtntj-republic-blood-donation.html


நன்றி சுவனப்பிரியன்
http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_25.html


சனி, ஜனவரி 14, 2012

35-வது சென்னை புத்தகக் கண்காட்சி - டிப்ஸ் (பாகம்-2)


35  வது சென்னை புத்தகக் கண்காட்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் பொங்கல் விடுமுறையும் ஆரம்பித்து விட்டதால் இந்த நான்கு நாட்களும்  நிச்சயம் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சென்ற வாரம் நான் வெளியிட்ட இந்த டிப்ஸ் பதிவை மீண்டும் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதோ எனது திருத்தப்பட்ட  மீள் பதிவு....



                                                     
ஒவ்வொரு வருடமும் நான் சென்னையில் இருக்கும் பொழுதெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வகையில் நான் கற்றுக்கொண்ட சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே...

1 . கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும்.

2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.

3 . இந்த 4  நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள்.

4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.

5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.

6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.

7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள்.

8 . ஏதாவது ஒரு முனையில் இருந்து தொடங்குங்கள். நடுவிலிருந்து தொடங்காதீர்கள், அது நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தும்.

9 . பணமாக எடுத்துச் செல்லுங்கள்(நிறைய எடுத்துச் செல்லுங்கள்). கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தலாம் என்று யோசனையை புறம் தள்ளுங்கள். ஏனெனில் அனைத்து கடைகளிலும் அந்த வசதி இருக்காது. மாறாக அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் ஒருவர் இருப்பார். அங்கும் கூட்டம் அதிகம் இருக்கும். அதற்காக நீங்கள் இங்கும் அங்கும் நடக்க வேறு வேண்டும். எனவே பணமாக எடுத்துச் செல்வது புத்திசாலித் தனம்.

10 . மறக்காமல் ஒரு நோட்டு மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இந்த புத்தகம் வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பம் இருக்கும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், விற்பனை செய்யும் கடையின் பெயர், அதன் விலை மற்றும் கடையின் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மேலும் இது போல் 5 புத்தக விபரங்களை நியாபகம் செய்தால் முதலாவது மறந்து விடும். எனவே எழுதுவது சாலச் சிறந்தது.





                                                
11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.

12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.

13 . நிறைய எழுத்தாளர்களை அங்கு நீங்கள் காணலாம். அவர்களுடன் ஒரு 5 நிமிடங்களை செலவு செய்யுங்கள். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக ஞானி அங்கேயே  இருப்பார்.

14 . முடிந்த அளவு toilet பயன்படுத்தாதீர்கள். ரொம்ப கேவலமா இருக்கும் பராமரிப்பு.

15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள்.

நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்... அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்....  எவ்வளுவு காலம் தான்
இலக்கியவாதிகளே நம்மல கொல்றது.... நாமும் பழி தீர்ப்போம்...


டிஸ்கி-1 : நானும் ரஹீம் கஸாலியும் நேற்று சென்று இருந்தோம், நோட்புக் எடுத்துச் செல்ல மறந்து விட்டோம். கல்கியின் பொன்னியின் செல்வன் புக் ஒரு கடையில் மிகக் குறைவான விலையில் கொடுத்தார்கள், அந்த கடை எண்-னை மறந்துவிட்டோம், சிறிது நேரம் கழித்து எவ்வளவோ முயன்றும் அந்த கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters