டோண்டு ராகவன்....
ஜனவரி மாதம்... எதிர்க்குரல் புத்தகம் வெளியீடு தொடர்பான பதிவு போட்டதும், அன்று மதியம் எனக்கு போன் வந்தது.. பேசியவர் டோண்டு ராகவன், அது தான் அவர் என்னிடம் பேசுவது முதல் முறை...
"நல்ல விஷயம் செஞ்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள்.. புத்தக கண்காட்சிக்கு போவீங்களா? நான் வருவேன், முடிந்தால் சந்திப்போம்" என்று கூறினார்.
ஆயிரம் தான் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவராக இருந்தாலும், புத்தகம் வெளியீடு என்று கேள்வி பட்டதும் போன் போட்டு வாழ்த்து சொல்லிய பண்பாளர்.
டோண்டு ராகவன் அவர்களின் மரணச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அன்று சந்தித்து இருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது.
எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்தாருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை அளிப்பானாக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...
நீங்கள் உறுதியாக கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும்... (அல் குரான்)
| Tweet |
