கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 01, 2011

சேலம் மற்றும் மன்னார்குடியை ஆந்திராவிற்கு தாரைவார்த்த தமிழக அரசு



                                                                                                                                

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் செய்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று "கழக அரசு பதவி ஏற்ற உடன் வழிப்பறி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கேள்வி பட்டேன்" என்பதுதான். இந்த பேட்டி எப்படி இருந்தது என்றால் என்னமோ கலைஞர் தான் கொள்ளையர்களை கொள்ளை அடிக்க சொன்னது போலவும், அவரின் ஆட்சி முடிந்த உடன் இனி நமக்கு சப்போர்ட் யாரும் இல்லை என்று கொள்ளையர்கள் ஓடி விட்டது போலும் இருந்தது.

உண்மையா இது? என்று பார்த்தால் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய கொள்ளை சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் நடந்துள்ளன. சமீபத்திய 3  நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

சம்பவம் 1 : தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க MLA வாக இருக்கும் பழ.கருப்பையா அவர்களின் மனைவி இடமே சங்கிலி பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

சம்பவம் 2 : நேற்றைய முன் தினம் சேலத்தில் 150  பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் 3 : நேற்றைய தினம் மன்னார்குடியில்(சின்னம்மாவின் ஊர் என்பதை இங்கு நினைவில் வைக்க வேண்டும்) 500  சவரன் தங்க நகைகள் அடகுக் கடையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.




                                                            

கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது என்னடா என்றால் 100 பவுன் 500 பவுன் என்று பல்க்காக ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் சொன்னது போல் வழிப்பறி செய்யும் குட்டி திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி அங்கிருந்து ப்ரொபசனல் திருடர்கள் இங்கு வந்து விட்டார்களா? அல்லது சேலத்தையும் மன்னார்குடியையும் ஆந்திராவிற்கு தமிழக அரசு தாரை வார்த்து விட்டதா?




மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே, பேட்டிகளை அல்ல. சென்ற ஆட்சியில் நிறைய பேட்டிகள், பேச்சுகள் மற்றும் கவிதைகளை கேட்டு விட்டோம்.


சனி, மே 14, 2011

கலைஞருக்கு நன்றி... மிக்க நன்றி....


                                                                      

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பீர்கள். தோல்விக்கான காரணங்கள் என்ற பெயரில் உங்கள் மீது வீசப்படும் விமர்சனங்களால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பீர்கள்.

ஆனால் நான் உங்களை காயப்படுத்தப்போவதில்லை... உங்களுக்கு பல விதங்களில் நன்றி சொல்ல தமிழக மக்களாகிய நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

1 . ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு குடுத்ததற்க்காக, நிச்சயமாக இது ஏழைகளுக்கு உதவிய நல்ல திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

2 . மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், 108  இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியதற்க்காக நன்றி.

3. இலவச காப்பீடு  திட்டத்தை 
செயல்படுத்தியதற்க்காக. நிச்சயமாக பல ஏழைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது உண்மை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

4 . குக்கிராமங்களில் கூட ஓரளவு சாலை வசதி செய்து தந்ததற்கு நன்றி.

5 . வாக்களித்தபடி பெரும்பாலோருக்கு வண்ணத் தொலைக்காட்சி தந்ததற்கு நன்றி.

6 . சென்னையில் பல மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைத்ததற்கு நன்றி.

7 . மின் அலுவலக நடவடிக்கைகளை முறைப்படுத்தியதற்க்காக. மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்தது என்னவோ உண்மை, ஆனால்  சென்னையில் எந்த நேரம் போன் செய்தாலும் மின் அலுவலகங்களில் எடுத்து முறையான பதில் தந்தார்கள். அதற்க்காக நன்றி.

8 . ரேஷன் அலுவலகங்களில் கையூட்டு வாங்காமல் தேவையான மாற்றங்களை செய்து தந்தார்கள். அதற்க்காக நன்றி.

9 . மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கியதற்க்கு நன்றி.

10 . சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி.

மேலும் பல நல்ல திட்டங்களை செயல் படுத்தியதற்க்காக நன்றி.

இவ்வளவு செய்தும் ஏன் தோல்வி அடைந்தோம் என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பின்வரும் காரணங்களை களைய உடனடி நடவைக்கை எடுங்கள். எடுத்தால்... நிச்சயம் அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும்.





                                                           
                                              

1 . குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எல்லா மட்டங்களிலும் கட்டுப் படுத்துங்கள்.

2 . திரைத்துறையில், தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இருந்து உங்கள் குடும்பத்தினரை விலகச் சொல்லுங்கள் அல்லது அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள். சினிமா மக்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து கவனிக்கும் ஊடகம். அதில் உங்கள் குடும்பத்தினரின் கடும் ஆதிக்கம் மக்களிடம் இயல்பான வெறுப்பை சம்பாதித்தது.

3 . ஏன் வியாபாரங்களில் இவ்வளவு போட்டி, யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? ஏற்கனவே 100  தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. இன்னும் ஏன் இவ்வளவு வெறி பணத்தின் மீது? இங்கு ஒரு தலைமுறையே சாப்பட்டிற்க்கும் சாதாரண வாழ்க்கைக்கும் போராடிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 . நீங்கள் குடும்பத்தினரை சமாளிப்பதிலே அல்லது காப்பாற்றுவதில் போராடிக்கொண்டு இருக்கையில், பாரபட்சம் இல்லாமல் எல்லா அமைச்சர்களும்,       MLA-க்களும் புகுந்து விளையாடி விட்டார்கள். யாருக்கும் 10  கோடிக்கு கம்மி சொத்து இல்லை.

5 . இவை அனைத்தையும் மக்களுக்கு காசு கொடுத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தீர்கள். மக்களை காசு குடுத்து விளக்கி வாங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த குறைகளை சரி செய்தால் நிச்சயம் மீண்டும்  ஆட்சியை தி.மு.க வெல்லும். 


நம்பிக்கையோடு இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள். சிறந்த இரண்டாவது எதிர்க்கட்சியாக ஜனநாயக் கடமையை ஆற்றுங்கள்.
மக்கள் நன்மதிப்பை மீட்டெடுக்க போராடுங்கள்.

மற்றபடி, உங்களுக்கு.... மீண்டும் நன்றி....மிக்க நன்றி....


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters