அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு...


அன்பு நண்பர்களே... அருமைத் தம்பிகளே... பெரியோர்களே...
தாய்மார்களே... இதோ வலை உலகத்திற்கு ஒரு புதிய அறிமுகம்...
நீண்ட நாட்களாகவே பதிவுலக ஜாம்பவான் நண்பர்கள் என்னை வலை உலகிற்குள் வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் சரி என்னதான் நடக்குது, எப்டிதான் எழுதுறாங்கன்னு பாத்துட்டு அப்புறம் நுழையலாம்னு கடந்த இரண்டு வாரமா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். உள்ளதும் போச்சிடா நொள்ள கண்ணாங்கிற கதையா ஏன்டா இத்தன நாள் வாட்ச் பண்ணோம்னு ஆயிடுச்சு. பின்ன என்னங்க கொஞ்ச நஞ்சமா ஏழுதுறாங்க? இத பாத்தா பின்னால நாமள்லாம் பதிவுலகத்தில தாக்கு புடிக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்கு.

இருந்தாலும் இந்த கடல்ல நீச்சலடிச்சு தான் பார்ப்போமேன்னு தொபுகடீர்னு குதிச்சிட்டேன், ஹ்ம்ம்.. பார்ப்போம்... தேருவனான்னு...
இருக்கிற ஆளுங்க பத்தாதா இவன் வேறயான்னு நீங்க முனுமுக்கிறது காதில விழுது. கவலையே படாதீங்க, அடிக்கடி எழுதி தொந்தரவு செய்ய மாட்டேன்... மனசில தோணுனா மட்டும் தான் எழுவேன். ஆனா மனசில தோன்றது எல்லாத்தையும் எழுவேன், முடிந்த அளவு அடுத்தவர் மனதை காய படுத்தாமல்.

ஆனா யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு... ஆமாம். மத்தபடி மனசில படுற கமெண்ட்ச தயங்காம போடுங்க, படிச்சு என்னைய திருதிக்கிறேன் இல்லாட்டி அத பார்த்து என்ன வளர்த்து கொள்கிறேன்.
பதிவு உலகிற்குள் நான் இன்று நுழைய முழுக்க முழுக்க காரணம் எனது அருமை நண்பன் ரஹீம் கஸாலி தான். எனக்கு ஊக்கம் அளித்து எல்லா வகைகளிலும் உதவி புரிந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள்.

நட்புடன்,
சிராஜ்.



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters