கடைய நல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடைய நல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 18, 2012

என்னப்பா இது... வினவுக்கு வந்த சோதனையா இது....??????

கடைய நல்லூர்ல துரப்ஷா துரப்ஷா னு ஒருத்தர் கோழி கடை வச்சி இருந்தாராம். அவர் ஒரு முஸ்லிமா இருந்தாராம். சிலப் பல நாட்களுக்கு பிறகு இஸ்லாமிய கொள்கை 
பிடிக்காமால் கம்யுனிஸ்ட் ஆகிட்டாராம். ஆனா என்ன, அமைதியா கோழி வியாபாரம் பார்த்துகிட்டு குழந்த குட்டிய படிக்க வச்சிக்கிட்டு ஜாலியா இருக்க வேண்டியதுதானே.

அண்ணே அத தான் செய்யல. கம்யுனிஸ்ட் புத்தி சும்மா இருக்குமா???? இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் மதிக்கும் லூத் என்ற நபிய பத்தி எவனோ எழுதின ஒரு கட்டுரைய பேஸ்புக் ல பஹிர்ந்தாராம். சரி அதாவது ஒரு நாகரிகமாக பேசும் கட்டுரயான்னா பதில் இல்லன்னு தான் சொல்லணும். பார்த்த  நம்ம பக்கிய சும்மா இருக்குமா???
பிரிச்சு மேஞ்சுருச்சுகன்னு நினைக்கிறேன். சரியா தெரியல. மேஞ்சிட்டாணுக என்றே கொள்வோமே?? என்ன கெட்டிவிட போகிறது???

ஏன் பிரிச்சாணுக???? அது என்ன அவுக எழுதுன கட்டுரையா??? பஹிர்ந்தது தானே??? யார் எழுதுனதுன்னு நீங்க ஏன் ஆராட்சி பண்ணல???? அப்படின்னு வினவு குதிக்குது. இங்க தான் எனக்கு ஒரு மைல்ட் டவுட்டு. எழுதுனா என்ன?? பஹிர்ந்தா என்ன??? எல்லாம் ஒண்ணுதானே???? என்னோவோ போங்க வினவுக்கு தான் வெளிச்சம்.

சரி, மேஞ்சு முடிச்சாச்சா???? மேஞ்ச உடனே நம்ம துரப்ஷா என்ன பண்ணி இருக்கணும்??? வினவுக்கு போன் போட்டு இருக்கணும். இந்த இந்த மாதிரி நம்ம கொள்கைய எதிர்க்கிராணுவ, கருத்து சுதந்திரம் இல்லாம போய்டுச்சு, கேவலம் 400 கோடி பேர் மதிக்கும் ஒரு மனிதரை அநாகரிகமாக பேசுவது தவறா???  அராஜகம் தலை விரித்து ஆடுது,
நாங்கல்லாம் சீனாவுக்கு போய் அங்கேயே ஜிங் ஜங் ஜக்க எதிர்த்து கேள்வி கேட்போம், இவனுக என்ன சுண்டக்கா  அப்படின்னு. அப்படி செஞ்சாரா நம்ம துரப்ஷா. அது தான் இல்ல. அடிச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்ட்.

அட ஆமாங்க, நம்புங்க.. "நான் தப்பு பண்ணிட்டேன், என்ன மன்னிச்சுகங்க, நான் அல்லாஹ்வையும் முஹம்மது நபியையும் உளமார நம்புறேன்னு" சொல்லிட்டு படக்குன்னு முஸ்லிம் ஆயிட்டாரு இந்த கொள்கைக்  குன்று.

பொறுக்குமா வினவுக்கும் அவர் கூட்டாளி ரெட் flag க்கும்???? போட்டாங்க பாரு ஒரு கட்டுரைய. அந்த கத உங்களுக்கே தெரியும். அத பார்த்து மனிதாபிமானி சும்மா இருப்பாரா??  போட்டாரு பாருங்க அவரு ஒன்ன, அதுவும் பத்திகிட்டு ஓடுது. இதெல்லாம்  பார்த்துகிட்டு நான்  சும்மா இருப்பேனா?? போட்டேன் பாருங்க நான் ஒன்ன. அதான் இது.

யாரோ நாலு பேரு இழுத்துகிட்டு போய் அவர முஸ்லிம் ஆக்கிடாங்கலாம். நான் நெனைக்கிறேன் இதுக்கு முன்னாடி செங்கொடி தான் இழுத்துகிட்டு போய் மிரட்டி அவர கம்யுனிஸ்ட் ஆக்கி இருப்பாருன்னு. இப்ப முஸ்லிம்கள் மிரட்டி முஸ்லிம் ஆக்கிட்டாங்க. நாளைக்கு RSS காரன் மிரட்டி இந்து ஆக்குவாணுக. அதுக்கு பிறகு கம்யுனிஸ்ட் மீண்டும் மிரட்டி பொதுவுடமைக்கு வருவாரு.

துராப்சாவுக்கு இருக்கிறதுக்கு பேரு ஒரு கொள்கை??? இதில அவரு எங்க கோஷ்டி, உங்க கோஷ்டின்னு ஒரு சண்டை??? அதுக்கு 3 பதிவு வேற. போங்கப்பா, போய் வேலைய பாருங்கப்பா. நாளைக்கே  அவரு கிறித்துவரா  வந்தாலும் வருவாரு.

முடிக்கும் முன், இதுக்கு நடுவுல என்ன காமடி நடந்துச்சுன்னு தெரியல. இன்னொரு பொது உடமை கொள்கைக் குன்று ரெட் FLAG  தன் தளத்த மூடிருச்சு. என்ன நடந்துச்சு, என்னான்னு புரியல. மர்மமா இருக்கு. இந்த குன்றோட ஊரும் கடையநல்லூர் தான் என்பது கூடுதல் தகவல்.

என்னப்பா இது!!!
(கடைய)நல்லூருக்கு வந்த சோதனையா இது....
பொதுவுடமைக்கு வந்த சோதனையா இது....
குறிப்பா வினவுக்கு வந்த சோதனையா இது....??????


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters