பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 31, 2011

ஈழப் பதிவர்கள் vs இஸ்லாமியர்கள்= தீர்வுதான் என்ன?


குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////

இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....

நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.

நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால்,  அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....

நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....

இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில்  லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?

அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?

வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.

ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள்  என்றும்,  ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.





வெள்ளி, மே 27, 2011

செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு ஷொட்டு.... ஒரு குட்டு...


ஷொட்டு - சட்ட மேல்சபை

                                                                        
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் இனி தமிழகத்தில் மேல்சபை வராது என்று அறிவித்து உள்ளார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாகவே இந்த முடிவு தெரிகிறது. எதுக்கு சட்ட மேல்சபை? அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்த்தால், ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையில் பேசமுடியாத எந்த விஷயத்தை மேல் சபையில் பேசிவிடப் போகிறார்கள்?

யாருக்கேனும் பதவி கொடுக்காவிட்டால் அல்லது கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு தன் இதயத்தில் இடம் உண்டு என்று கூறுவார் கலைஞர். இதயத்தில் கொடுத்த இடத்தால் சமாதானம் ஆகாதவர்களுக்கு பதவி கொடுக்கவே சட்ட மேல்சபை பயன்படும். மற்றபடி அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

இப்பொழுது இருக்கும் ஒவ்வொரு MLA க்களுக்கும் மாத சம்பளமாக ருபாய்      45 ,000 , படி, பாதுகாப்பு செலவு மற்றும் இத்யாதி இத்யாதி என்று ஒரு மாதத்திற்கும் ஆகும் செலவே லட்சத்தை தொடும். அப்படி இருந்தும் அவர்களில் பாதி பேர் சட்டசபையில் பேசுவதே இல்லை, பேசாட்டியும் பரவாயில்லை பாதி பேர் தூங்கிர்றாங்க. இந்த நிலையில் சட்ட மேல் சபையை கொண்டு வந்து அவர்களுக்கும் தெண்டமாக செலவு செய்ய வேண்டுமா? தேவையே இல்லை. உள்ளவங்க சட்டசபையில் கிழித்தால் போதும், புதுசா யாரும் வந்து ஒன்னும் செய்யவேண்டியது இல்லை.

முதல்வரே, ரொம்ப நல்ல காரியம் செஞ்சு இருக்கீங்க.உங்களின் இந்த நல்ல முடிவை கை தட்டி ஆராவரித்து வரவேற்கிறோம்.

குட்டு - சமச்சீர் கல்வி

                                                           
முதல்வரே.. என்ன முதல்வரே இப்படி பண்ணிட்டீங்க. கிராமப்புற மாணவர்களுக்கும் நகரத்து மாணவர்களுக்கும் கல்வித் தரத்தில் பெரிய வித்தியாசங்கள் உள்ளன என்பது காலம் காலமாக தமிழகத்தில் இருந்து வரும் பிரச்சனை.  அந்த பிரச்சனையை தீர்க்க சமச்சீர் கல்வி தான் ஒரே வழி என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை களைவதற்கான முதல் படி சமச்சீர் கல்வி அல்லவா? முதல் முயற்சியே தடை படலாமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாடறிந்த முதுமொழி ஆயிற்றே.

ஆகவே முதல்வரே...  பாட திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே அறிவு சார்ந்த நடவடிக்கையாக எனக்கு படுகிறது. கலைஞர் தன்னை பற்றி பாடத்திட்டங்களில் சேர்த்து இருந்தால் அந்த பாடத்தை தடை செய்து விடுங்கள், இதில் நாட்டு மக்களாகிய எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே போல் நீங்களும் வரும் ஆண்டுகளில் உங்கள் பற்றிய பாடங்களை சேர்த்து விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.

தன்னுடைய ஆட்சியின் பொது தன்னைப்பற்றியே பெருமையாக மாணவர்கள் படிக்கும் பாடங்களில் சேர்ப்பது என்பது கொஞ்ச நஞ்சம் ஈனம் மானம்  உள்ள மக்கள்கூட செய்ய முடியாத செயல். எப்படிதான் தமிழக அரசியல் வாதிகள் செய்கிறார்களோ???? பொது மேடையிலும், சினிமா நிகழ்சிகளிலும் பெருமை பேசிக் கொள்கிறீர்களே அது போதாதா? மாணவர்கள் மடியிலும் வந்து கை வைக்க வேண்டுமா?? வெட்கக்கேடு.

தயவு செய்து சமச்சீர் கல்வி முறையில் உள்ள குறைகளை களைந்து அதை தொடர்வதற்கான முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது என்பது கிராமப் புற தற்போதைய மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் செய்யும் துரோகமே ஆகும். கிராமப் புற ஏழைகளின் வயித்தில் அடித்த எந்த ஆட்சியாளரும்  நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.


சொல்வது எங்கள் தலையாய கடமை... முடிவு உங்களிடம்.


சனி, மே 21, 2011

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஆனந்த விகடன்




 வழக்கமான ஆர்வத்துடன் இந்த வார ஆனந்த விகடனை வாங்கி பார்வையை செலுத்தினேன். தலையங்கத்தில், நடந்து முடிந்த தேர்தலில் ஏன் கலைஞர் தோற்றார்  என்பதற்க்கான நியாயமான காரணங்களை பட்டியலிட்டும் , அதே நேரம் ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளையும் சுட்டி காட்டி, இவை இரண்டும் போல் இல்லாமல் நல்லாட்சி தாருங்கள் என்று இருந்தது.  தலையங்கம் மிகவும் அற்புதமாக நடுநிலையுடன் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அதற்க்கு சில பக்கங்கள் தள்ளி தலையங்கத்தில் காட்டிய புத்திசாலிதனத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் சில வரிகள் இருந்தன. அந்த கட்டுரையின் தலைப்பு.



இலையைத் துளிர்க்கவைத்த  இரண்டு தலைகள்...


விகடன் கூறும் இரண்டு தலைகள் யார் தெரியுமா?

சசிகலா மற்றும் சோ ராமசாமி


                               

அதற்க்கு விகடனார் கூறும் காரணம். சோ ராமசாமி தான் விஜயகாந்துடன் கூட்டணி முக்கியம் என்றாராம், சசிகலா சரியான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தாராம்.

நான் விகடனை பார்த்து கேட்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர்கள் நல்லவர்கள் என்பதற்க்காகத்தான் மக்கள் அந்த வேட்பாளர்களுக்கு வக்களித்தார்களா? விஜயகாந்துடன்  கூட்டணி வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற அந்த கடினமான முடிவை எடுக்க சோ வால்தான் முடியுமா? அரசியல் அறிவு அறவே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட கணிக்க கூடிய கணிப்பல்லவா அது... பொதுமக்களை விடுங்கள் என் மகனுக்கு கூட தெரிந்த கணிப்புதான் அது.
அதுகூட தெரியாமல் தான் ஜெயலலிதா  இருந்தாரா அவருக்கு சோ சொல்லி புரிய?

                                                              

யாரை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறீர்கள் விகடனாரே? சோ வையா? ஏன்??? தமிழகத்தில் இலையை துளிர்க்க வைக்க அவர் ஏதும் புரட்சி செய்தாரா? கடந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? ஒரு புண்ணாகும் இல்லைல... அப்புறம் என்ன?

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் கொட்டி இலையை துளிர்க்க வைத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை...  மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத  சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.

அப்படி தான்தான்  காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் விகடனாரே.....
இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது ஒரு பாரம்பரிய பத்திரிகைக்கு அழகல்ல....




புதன், மே 18, 2011

பயோ டேட்டா....சராசரி இந்தியக் குடிமகன்...




                                                  
                                 பயோ-டேட்டா...


பெயர் : இந்தியக் குடிமகன்

மொழி : 1500  க்கும் மேல்

இனம் : கணக்கில்லை

பிடித்தது     :  சினிமா மற்றும் பேச்சு

பிடிக்காதது :  அடுத்தவர்களின் தவறு

விரும்புவது : ஊழலை ஒழிக்க

விரும்பாதது : அதற்காக தான் போராடுவதை

எதிரி : பாகிஸ்தான்

உப எதிரி : சீனா

ஆதர்ச புருசர்கள் : சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்

பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாக

பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு

வாழவேண்டியவர்கள் : தானும் தன் குடும்பத்தாரும்

மற்றவர்கள் : எக்கேடு கெட்ட எனக்கென்ன

பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்... கிரிக்கெட் ... கிரிக்கெட் மட்டுமே


தவறே செய்யாத நாடு : இந்தியா

தவறை மட்டுமே செய்யும் நாடு : பாகிஸ்தான்

பலம் : மக்கள் தொகை

பலவீனம் : பலமே பலவீனம்

நம்புவது : ஆட்சியாளர்களை(இன்னுமா நம்புறீங்க???)

சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


வெள்ளி, ஏப்ரல் 29, 2011

யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு...


அன்பு நண்பர்களே... அருமைத் தம்பிகளே... பெரியோர்களே...
தாய்மார்களே... இதோ வலை உலகத்திற்கு ஒரு புதிய அறிமுகம்...
நீண்ட நாட்களாகவே பதிவுலக ஜாம்பவான் நண்பர்கள் என்னை வலை உலகிற்குள் வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் சரி என்னதான் நடக்குது, எப்டிதான் எழுதுறாங்கன்னு பாத்துட்டு அப்புறம் நுழையலாம்னு கடந்த இரண்டு வாரமா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். உள்ளதும் போச்சிடா நொள்ள கண்ணாங்கிற கதையா ஏன்டா இத்தன நாள் வாட்ச் பண்ணோம்னு ஆயிடுச்சு. பின்ன என்னங்க கொஞ்ச நஞ்சமா ஏழுதுறாங்க? இத பாத்தா பின்னால நாமள்லாம் பதிவுலகத்தில தாக்கு புடிக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்கு.

இருந்தாலும் இந்த கடல்ல நீச்சலடிச்சு தான் பார்ப்போமேன்னு தொபுகடீர்னு குதிச்சிட்டேன், ஹ்ம்ம்.. பார்ப்போம்... தேருவனான்னு...
இருக்கிற ஆளுங்க பத்தாதா இவன் வேறயான்னு நீங்க முனுமுக்கிறது காதில விழுது. கவலையே படாதீங்க, அடிக்கடி எழுதி தொந்தரவு செய்ய மாட்டேன்... மனசில தோணுனா மட்டும் தான் எழுவேன். ஆனா மனசில தோன்றது எல்லாத்தையும் எழுவேன், முடிந்த அளவு அடுத்தவர் மனதை காய படுத்தாமல்.

ஆனா யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு... ஆமாம். மத்தபடி மனசில படுற கமெண்ட்ச தயங்காம போடுங்க, படிச்சு என்னைய திருதிக்கிறேன் இல்லாட்டி அத பார்த்து என்ன வளர்த்து கொள்கிறேன்.
பதிவு உலகிற்குள் நான் இன்று நுழைய முழுக்க முழுக்க காரணம் எனது அருமை நண்பன் ரஹீம் கஸாலி தான். எனக்கு ஊக்கம் அளித்து எல்லா வகைகளிலும் உதவி புரிந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள்.

நட்புடன்,
சிராஜ்.



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters