நாத்திகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாத்திகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 22, 2011

நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறிய பிரபல பதிவர்....


                                                               

இவ்வளவு நாளும் கிடைக்கும் சந்து பொந்து கேப்ல எல்லாம் நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த பிரபல பதிவர் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள்
டிசம்பர் 20 அன்று பதிவிட்ட ஒரு கவிதை மூலம் தான் நாத்திகவாதி அல்ல கடவுளை நம்பும் ஆத்திகவாதி என்ற உண்மையை முதல் முறையாக
உலகிற்கு தெரிவித்து உள்ளார்(நான் அறிந்த வகையில்). அவரை கடவுள் படைத்த நமது உண்மையான உலகிற்கு வரவேற்கிறேன்.

முதலில் அவரின் கவிதையை பார்த்து விடுங்கள், அதன் பின் எனது சந்தேகங்களை கேட்கிறேன்.

ஆற்றாமையாகத்தானிருக்கும்
எனக்கு..

கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..

அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள் 
ஏழை வயசாளிகளை 
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..

புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட 
பின்னும் 
முகாம்களில் தவிக்கும் 
சகோதரங்களை நினைத்து 
புத்தனும் செத்துப் போனான் என..

தெரு வண்டி வியாபாரியிடம் 
பத்து ரூபாய்க்கு கை நீட்டும் 
போலீஸ்காரன் நிலை நினைத்து 
இதுவா கடமை?  என..

கடவுளை 

இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..

ஓட்டுக்கு காசு வாங்கி 
தேர்தல் முடிந்தபின்னர் 
ஐயோகோ 
ஆட்சி சரியில்லை எனும் 
மக்களை நினைத்து 
உன் உரிமை இதுவா என..

தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..

இந்த கவிதையை படித்த உடன் தோன்றிய எனது சந்தேகங்கள்...

/* கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..   */


பெரியவர்களையும், சிறு பிள்ளைகளையும் மற்றும் பெண்களையும் கையேந்த விட்டது கடவுளா அல்லது மனிதர்களா?
அப்படி அவர்களை ஆக்கியதற்காக மனிதர்களாகிய நாம் தான் தூக்கில் தொங்க வேண்டும். அத விட்டுட்டு கடவுளை கொல்றாராம். நீங்க(நாம) பண்ற தப்புக்கு கடவுள கொள்ளுவீர்களா? நல்லா இருக்குப்பா உங்க நியாயம்....


/*
இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..   */

படைத்து, உயிர் கொடுத்து பரிபாலிக்கும் இறைவனை இல்லை என்று கூறும் துரோகிகளை மற்றும் முட்டாள்களை விட இனம் பிரித்து வணங்கும் மக்கள் ஒரு படி மேல் தான் நண்பரே.

/*
தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..  */

உங்களோட இந்த வைர வரிகளை மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறேன். You  rocks  here.

ஆனாலும் "கடவுளை கொன்றுபோட..." என்ற வரிகள் மூலம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றிகள்.
(உயிருடன் இருக்கும் ஒன்றைத் தான் கொள்ள முடியும்).
 இன்று போலவே என்றும் இறை நம்பிக்கையுடன் நீங்கள் வாழவும்,  மேலும் உங்கள் நாத்திக நண்பர்களையும் ஆத்திகத்தை நோக்கி அழைக்க வேண்டும் என்றும்  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அண்ணனோட தளத்தில் உள்ள வரி "எங்கே செல்லும் இந்த பாதை". பாவம் எங்க போறதுன்னே தெரியாம சுத்திகிட்டு இருக்காரு போல. கவலை படாதீங்க நண்பா.
 
கடவுளிடம் தான்  போகும் இந்தப் பாதை....

 


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters