சனி, டிசம்பர் 31, 2011

ஈழப் பதிவர்கள் vs இஸ்லாமியர்கள்= தீர்வுதான் என்ன?


குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////

இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....

நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.

நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால்,  அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....

நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....

இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில்  லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?

அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?

வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.

ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள்  என்றும்,  ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.





வியாழன், டிசம்பர் 29, 2011

பதிவுலகின் ஒரே நேர்மையாளர் நிரூபனுக்கு ஒரு கடிதம்...



நலமா நிரூபன்?

நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நமக்குள் கருத்து மோதல் தானே, மற்றபடி என்ன வாய்க்கால் சண்டையா? ஆகவே நாம் அனைவரும் நலமாகவே இருக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் பெரிய பரிட்சயம் இல்லை. அதனால் என்னிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்து நீங்கள் சிறிது ஆச்சரியம் அடையக்கூடும். சில சந்தேகங்கள் சகோ.

சகோ என்று கூப்பிடலாம் தானே? போலித்தனமாக இல்லை, உண்மையாகவே. போலித்தனமாக யாரையும் எனக்கு விழிக்கத்தெரியாது நிரூ.

சகோ சவுந்தர் அவர்களுடன்  நீங்கள் சண்டையிட்ட ஒரு பதிவில், தவறான கருத்துள்ள பதிவிற்கு நான் பின்னூட்டமிடமாட்டேன்.
மாறாக, அவர்களுக்கு தனியாக மெயில் செய்வேன் என்பதுபோல்
கூறியிருந்தீர்கள்.  அதை படித்தவுடன் நீங்கள் மிகச்சிறந்த பண்பாளர் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ?, உங்களுக்கென்று ஒரு இடத்தை என் மனதில் கொடுத்திருந்தேன்.

ஆனால் பவுடர் அண்ணே மிக கொச்சையாக ஆபாசமாக பதிவிட்ட ஒரு பதிவிற்கு
   
வணக்கம் மச்சி மணி,,
 என்னா ஒரு வேகம்?
 இருங்க படிச்சிட்டு வாரேன்.
  
என்று முதல் பின்னூட்டமும்,அதை தொடர்ந்து

    உனக்கு எம்புட்டுத் தில் மச்சி!

    செமையா கலாய்ச்சிருக்காய்.

என்று இரண்டாவது பின்னூட்டமும் போட்டிருந்தீர். அது உங்கள் பார்வையில் ஒரு கண்ணியமான பதிவா? தரமான பதிவர் என்று பலராலும் அறியப்பட்ட உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை
ஒருவேளை மற்றவர்கள் தவறான முறையில் பதிவு எழுதினால் மட்டும்தான் மெயிலில் சொல்வீர்கள் போல.....அதே தவறை உங்கள் நண்பர் செய்தால் ஆதரிப்பீர்களோ? இது எந்த விதத்தில் நியாயம்?

அந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உடன்பாடு இருந்திருக்கும். ஆனால்,
அதை எழுதிய முறையில் சில ஆபாசமும், அருவருப்பும் இருந்ததே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?

இவ்வளவு தானா நிரூபன் நீங்கள்?

இந்த இரண்டு முகங்களில் எது  நிருபனின் உண்மையான முகம்?

மேலும் ஒரு சந்தேகம்?,
அந்த பின்னூட்டத்திலேயே

உனக்கு எம்புட்டு தில் மச்சி....என்று
இன்னொன்றையும் சொல்லியிருந்தீர்கள்.

ஃபிரான்சில் படுத்துக்கொண்டு இஸ்லாத்தை திட்டி எழுத என்ன தில் வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
சவுதியில் இருந்துகொண்டு இஸ்லாத்தை தாக்கி பவுடர் அண்ணே எழுதியிருந்தா அது தில்லு.....அல்லது இலங்கையில், அதுவும் கொழும்பில் இருந்து ஏதாவது ஒரு பத்திரிகையில் ராஜபக்‌ஷேவை எதிர்த்து எழுதியிருந்தா அது தில்லு.

அதை விடுத்து, ஃபிரான்சில் உட்கார்ந்துகொண்டு தனது றஜீவன் என்ற ஒரிஜினல் பெயரிலோ அல்லது ஒரிஜினல் முகத்தையோ காட்டாமல் பவுடர் பூசிக்கொண்டு போலி பெயரில் அநாகரீகமாக கெட்டவார்த்தையில் எழுத என்ன தில் வேண்டும் நிரூ....

இந்த இரு சந்தேகங்களையும் கொஞ்சம்புரிய வைத்தால் நன்று....

தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்....இறைவன் நாடினால்.


புதன், டிசம்பர் 28, 2011

சும்மா காட்டு காட்டென்று காட்டும் பவுடர் ஸ்டார்...



சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு  பதிவில் நமது அண்ணன் பவுடர் ஸ்டார் என்ற பிறர்பல பதிவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.

"நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன், நீங்க வேற காட்டச் சொல்றீங்க" என்பது போல்...

அதை படித்த உடன், நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் இவருக்கு எவ்வளவு கர்வம் மற்றும் தான் என்ற அகந்தை என்று.
அப்பொழுது நான் நினைத்தேன், அண்ணனோட பதிவுகள கண்டிப்பா படிக்கணும்னு. இப்ப  2 நாளாதான் பார்க்க முடியுது.


என்னமோ இவர் மட்டும் தான் அதி புத்திசாலி மாதிரியும், பதிவுலகில் எழுதும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் மாதிரியும் நினைச்சிகிட்டு இருக்கார் போல சார்...

ஸ்டார் அண்ணே, நீங்க காட்டு காட்டென்று காட்டுவீங்களோ என்னமோ எனக்கு தெரியாது. இனி நான் என் அளவில் உங்களை காட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம பெயரையும் உங்க டைரில எழுதி வச்சிக்கங்க.

ஆனாலும் ஸ்டார் அண்ணே, உங்களோட மோத எனக்கு கொஞ்சம், இல்ல ரொம்பவே பயமாத்தான் இருக்கு. ஏன்னா... சாக்கடையில் விழுந்து சண்டை போட கொஞ்சம் பயமா தான் இருக்கும்.

இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.

லிங்க்-1

என்ன சகோ, இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இந்தாங்க இந்த பதிவை பார்வையிடுங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள்.


லிங்க்-2

டிஸ்கி-1 : இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எனது வோட்டு எண்ணிக்கை "0 " ல இருக்கணும், இல்லாட்டி பவுடர் ஸ்டார் வகையறாக்கள் புண்ணியத்தில் மைனசில் இருக்க வேண்டும். ஏன்னா....இந்த பொறாமை புடிச்சவங்களுக்கு வோட்டு போட்டாலும் பிடிக்காது, ஒற்றுமையா  இருந்தாலும் பிடிக்காது. தானும் ஒற்றுமையா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்க இருந்தாலும் பொறாமைலேயே செத்துருவாங்க.

டிஸ்கி-2 : ஏன்பா பவுடர் ஸ்டார் வகையறாக்களா, நீங்களெல்லாம் ஒற்றுமையா இருக்க வேண்டாம்னு நாங்களெல்லாம் இலங்கை போலிஸ்லையா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம்? இல்ல ஐநா ஏதும் தடை விதிச்சி இருக்கா? நல்லா குரூப் சேர்த்து ஒற்றுமையா இருந்து மாத்தி மாத்தி வோட்டு போட்டுக்க வேண்டியது தானே...நாங்களா வேண்டாம்னு சொன்னோம்? ஏன் ஆள் சேர்க்க வேண்டியது தானே.... இவ்வளவு நயவஞ்சகமா இருந்தா உங்களோட எவன்யா சேருவான்? ஒருத்தர்  தமிழ் நாத்துன்னு ஆரம்பிச்சா உடனே அடுத்தவர் இங்கிலீஷ் நாத்துன்னு ஆரம்பிக்கிறார்.

ஆனா ஒண்ணுப்பா... உலகத்திலே ஒற்றுமையா இருக்கிறதா எதிர்க்கிற ஒரே குரூப் நீங்க தான்பா...


டிஸ்கி-3 :
உங்க குரூப் ரொம்ப பொறாமை பிடித்தது மற்றும் நயவஞ்சகமானது என்று நிறைய கேள்வி பட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் ஒரு முறை காட்டி, அறியாமல் இருந்த பிற சகோதரர்களுக்கும் அறிய தந்ததற்காக நன்றி.. மிக்க நன்றி...

டிஸ்கி - 4 : கண்டிப்பா தொடர்ந்து பவுடர் போட்டுகிட்டே தான் இருப்பேன்... ஆனால் வழக்கம் போல், உங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறான வார்த்தைகளோ ஆபாசமோ இருந்தால் அவற்றிற்கு பதில் அளிக்க மாட்டேன். அதை வெற்றி என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் தாராளமாக அதைக் கொண்டாடலாம். ஏனெனில் ஆபாச வார்த்தைகள் பேசி வெற்றி அடைய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைவிட தோல்வியே மேல்.

டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை. ஆனால், ஆரம்பித்துவைத்தது நீங்கள்தான். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை, வன்மத்தை, குரோதத்தை மொத்தமாக கொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு எழுதிய நீங்கள் மதவெறியரா? அல்லது அதற்காக பதில் சொல்ல வந்த இஸ்லாமியர்கள் மதவெறியரா? என்ற கேள்வியை  உங்கள் மனசாட்சிக்கும்(?), நடு நிலையாளர்களின் மனசாட்சிக்குமே விட்டுவிடுகிறோம். 

இன்னும் காட்டுவேன்....


வியாழன், டிசம்பர் 22, 2011

நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறிய பிரபல பதிவர்....


                                                               

இவ்வளவு நாளும் கிடைக்கும் சந்து பொந்து கேப்ல எல்லாம் நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த பிரபல பதிவர் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள்
டிசம்பர் 20 அன்று பதிவிட்ட ஒரு கவிதை மூலம் தான் நாத்திகவாதி அல்ல கடவுளை நம்பும் ஆத்திகவாதி என்ற உண்மையை முதல் முறையாக
உலகிற்கு தெரிவித்து உள்ளார்(நான் அறிந்த வகையில்). அவரை கடவுள் படைத்த நமது உண்மையான உலகிற்கு வரவேற்கிறேன்.

முதலில் அவரின் கவிதையை பார்த்து விடுங்கள், அதன் பின் எனது சந்தேகங்களை கேட்கிறேன்.

ஆற்றாமையாகத்தானிருக்கும்
எனக்கு..

கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..

அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள் 
ஏழை வயசாளிகளை 
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..

புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட 
பின்னும் 
முகாம்களில் தவிக்கும் 
சகோதரங்களை நினைத்து 
புத்தனும் செத்துப் போனான் என..

தெரு வண்டி வியாபாரியிடம் 
பத்து ரூபாய்க்கு கை நீட்டும் 
போலீஸ்காரன் நிலை நினைத்து 
இதுவா கடமை?  என..

கடவுளை 

இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..

ஓட்டுக்கு காசு வாங்கி 
தேர்தல் முடிந்தபின்னர் 
ஐயோகோ 
ஆட்சி சரியில்லை எனும் 
மக்களை நினைத்து 
உன் உரிமை இதுவா என..

தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..

இந்த கவிதையை படித்த உடன் தோன்றிய எனது சந்தேகங்கள்...

/* கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..   */


பெரியவர்களையும், சிறு பிள்ளைகளையும் மற்றும் பெண்களையும் கையேந்த விட்டது கடவுளா அல்லது மனிதர்களா?
அப்படி அவர்களை ஆக்கியதற்காக மனிதர்களாகிய நாம் தான் தூக்கில் தொங்க வேண்டும். அத விட்டுட்டு கடவுளை கொல்றாராம். நீங்க(நாம) பண்ற தப்புக்கு கடவுள கொள்ளுவீர்களா? நல்லா இருக்குப்பா உங்க நியாயம்....


/*
இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..   */

படைத்து, உயிர் கொடுத்து பரிபாலிக்கும் இறைவனை இல்லை என்று கூறும் துரோகிகளை மற்றும் முட்டாள்களை விட இனம் பிரித்து வணங்கும் மக்கள் ஒரு படி மேல் தான் நண்பரே.

/*
தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..  */

உங்களோட இந்த வைர வரிகளை மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறேன். You  rocks  here.

ஆனாலும் "கடவுளை கொன்றுபோட..." என்ற வரிகள் மூலம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றிகள்.
(உயிருடன் இருக்கும் ஒன்றைத் தான் கொள்ள முடியும்).
 இன்று போலவே என்றும் இறை நம்பிக்கையுடன் நீங்கள் வாழவும்,  மேலும் உங்கள் நாத்திக நண்பர்களையும் ஆத்திகத்தை நோக்கி அழைக்க வேண்டும் என்றும்  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அண்ணனோட தளத்தில் உள்ள வரி "எங்கே செல்லும் இந்த பாதை". பாவம் எங்க போறதுன்னே தெரியாம சுத்திகிட்டு இருக்காரு போல. கவலை படாதீங்க நண்பா.
 
கடவுளிடம் தான்  போகும் இந்தப் பாதை....

 


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters