சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 08, 2013

மாணவர்களா??? பலி ஆடுகளா???


செய்தித்தாள்களும், செய்தி சேனல்களும்  அந்த செய்தியை வாசித்த போது மனம் முழுக்க பாரமாகி பல்வேறு சிந்தனைகளில் மூழ்க ஆரம்பித்தது...

பள்ளி நேர மாற்றம்!!!!

வரும் கல்வி ஆண்டு முதல் புத்தகச் சுமையோடு இன்னொரு சுமையாக பள்ளிகள் துவங்கும் நேரத்தை காலை 7.30 க்கு  அரசு மாற்றியுள்ளது....
9.30க்கு துவங்கும் பள்ளிக்கே 8.30க்கு  வீட்டுவாசலில் வேன் வந்து நிற்கும். இனி 7.30 எனில்????????????????????????



9.30  எனில்
7.30  எனில்
காலை 6 மணி :  சமையல் செய்யவேண்டும்.  
காலை 5 மணி: 
சமைக்க
வேண்டும்.
7 மணி: 
மகனை
எழுப்ப வேண்டும்.
5மணி:
தூக்கம்
பற்றாக்குறையால் 5மணிக்கு எழுப்பினாலும் 6மணிக்கு எழுவான்.
7.15 :
சாவகாசமாக
பால் கொடுத்த பின் கொஞ்சம் வெயில் எட்டிபார்த்த பின் சூடான நீரில் குளியல்... அதன் பின் சிறுது நேரம் படிப்பு
6 மணி:
குளியலா
?  இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு.முகம் கழுவினால் போதும்
8 மணி:  காலை டிபன் ஊட்டிவிடுதல்
6மணி:
டிபனா
? இப்பதான் பால் குடிச்சான் அதுக்குள்ளையுமா? வேண்டாம்.
8.15 தொடங்கி 8.30 க்குள் : வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்  
6.15 தொடங்கி 6.30க்குள்:இன்னும் கால்  மணி  நேரம் தான் இருக்கு.. வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் 6.30 க்கு வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்
ஸ்கூல் சேரும் ஒருமணி நேரம் வரை   சகமாணவருடன்  விளையாடிக்கொண்டே பயணிக்கிறான்          
காலையில் விட்ட தூக்கத்தை ஒருமணி நேரம் பிடித்துக்கொண்டே பயணிக்கிறான்





  ****சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்  சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து!

   
 கொடுக்கப்பட்ட ஹோம்வொர்க் ,நடத்தப்பட்ட பாடங்களை படிக்கவே நேரம் இரவு 9 முதல் 10 மணிக்கு மேல் ஆகிறது. சாப்பிட்டு தூங்க மட்டுமே குழந்தைகளுக்கு நேரம் இருக்கும்… பெரியவர்களை போல் 8 மணிநேர தூக்கக் கட்டுப்பாடுகள் குழந்தைகளிடம் செல்லுபடியாகாது. காலை என்னதான் நாம் கெஞ்சினாலும் "எழ மாட்டேன்" என அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்க  பாவமாக இருந்தாலும் , காலை நேர பரபரப்பில் அடித்து வழுக்கட்டாயமாய் எழுப்புவது மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே வழி. தூக்க கலக்கத்திலேயே பால் குடித்து, தூக்க கலக்கத்திலேயே முகம் கழுவ மட்டும் தான் நேரமிருக்கும்.

நம் அவசரப்படுத்துதலில் இனி குழந்தைகளுக்கு பள்ளி என்றாலே தீராத வெறுப்பு வரும். காலை நேர உணவு சாப்பிட நேரமிருக்காது, அதையும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பிவிடுவதால் 2 பாக்ஸ், 2 வாட்டர் கேன், ஸ்னேக்ஸ்பாக்ஸ் என கூடுதலாக ஒரு சுமை. வீட்டிலேயே சரியாக சாப்பிடாதவன் அங்கே சாப்பிடுவானா? வீட்டில் என்றால் கொஞ்சமேனும் வயிற்றை நிரப்பி அனுப்ப முடியும். இனி அந்த கவலை வேறு.

வெயில் பிரதேஷத்தில் இருந்தாலும் கூட, பனி/குளிர் இங்கே இல்லை என்ற போதும் கூட  காலை நேர பனி, வாடை காற்றை  தாங்கும் சக்தி குறைவே  இந்த கால குழந்தைகளுக்கு … கால நிலை லேசாக மாறினாலும் தும்மல், சளி என்பது சர்வசாதாரணமாக எட்டிபார்க்கும் நிலையில் , முகத்தில் அடிக்கும் வாடைக்காற்று விடாத இருமலையும் , சளியையும் பரிசாய் கொடுக்கும்! பழகிக்கொள்ளும் வரை சிரமமே...

காலை சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் பாவம் அவனும் குழந்தை தானே…??? எவ்வளவுதான் தாக்கு பிடிக்க முடியும்? தூக்கம் மீண்டும் எட்டிபார்க்கும் மதியவேளையில்… ஆனால் அதற்கும் அனுமதி தரப்படுவதில்லை… மதியத்துடன் விட்டாலும் தேவலை, வீட்டில் சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால்  படிப்பு படிப்பு என கசக்கி பிழியும் பள்ளிகள் மதிய நேரத்தை தியாகம் செய்துவிடுமாக்கும்? அப்படியே விட்டாலும் வேலைக்கு செல்லும் அம்மா,அப்பாவை பெற்றிருக்கும் குழந்தைகளின் நிலை அதைவிட பரிதாபம்! 


சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்,   சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து! சீரியல் பார்க்கும் அம்மா இல்லை என்பதாலும் :-) விடிய காலை தொழுகைக்கு எழ பழகிவிட்டதால் இவையெல்லாம் சுமை இல்லை என்ற போதிலும் அனைத்தும் குழந்தைகளை மையமாக வைத்தே சிந்தனை செல்கிறது... இதுவும் பழகிப்போகும் :-) 

ரொம்ப தான் பீலிங்க்ஸ் ஆப் இந்தியா படம் காமிச்சுட்டிருக்கேன் போல... சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்!


 உப்புசப்பில்லாத காரணத்தால் நேரமாற்றம்:
சாலைகளில் விபத்து அதிகரிப்பதை தடுக்கத் தான் இந்த நடைமுறையை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது சுத்த முட்டாள்தனம்…  குழந்தைகள் மீது ஏன் இந்த இரக்கமற்ற செயலை திணிக்க வேண்டும்? ஏற்கனவே மின்வெட்டால் தூக்கம் இழந்து  , மன உளைச்சலில் பைத்தியங்களாய் திரியும் மக்களுக்கு இன்னொரு அடியா? விபத்துதான் காரணம் எனில் அதற்கு பல வழிகள் இருக்கும் போது இதனை தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம் ??!!!


கொஞ்சம் அறிவோடு சிந்திப்போமா?
மேலை நாடுகளிலும் இதே முறை தான் . இங்கே கொண்டு வருவதில் என்ன தவறு என்ற வாதம் வலுக்கிறது. நியாயம் தான்… ஆனால் அங்கு கல்வியை பார்க்கும்  விதமும் இந்தியாவில்  மாணவர்களை சக்கையாய் பிழியும் கல்விமுறைக்கும் எக்கசக்க வித்தியாசம் உள்ளது.  தன் பள்ளியில் 100 சதவித தேர்ச்சி காட்ட இரவு ஒன்பது மணி வரை பாடாய்படுத்தும் சர்வாதிகார பள்ளி நிலையங்கள் மதியத்துடன் ஓய்வை கொடுப்பார்கள் என்பதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை (சட்டமா?  கிழிஞ்சது… சமச்சீர் புத்தகத்தையே  சும்மா ஷோவுக்கு தான் கொடுத்திருக்கோம்.. இதுல மட்டும் உங்க மதியத்துடன் பள்ளி முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை பாலோ பண்ணுவோமாக்கும்?) மதியத்துடன்  மாணவர்களுக்கு ஓய்வு விட்டால் மட்டுமே இந்த சட்டம் சரியானதாக இருக்க முடியும்!

விபத்து நடப்பது அனைவரும் ஒரே நேரத்தில் வருவதால் என  யோசிக்கும் அரசு ஏன்  எல்லாரின் நேரத்தை மாற்றியமைக்க கூடாது?
வழக்கம் போல் 9.30க்கே (கூட வேண்டாம் 8.30க்கு) குழந்தைகளுக்கு பள்ளி திறந்துவிட்டு, தனியார்/பொதுதுறையில் வேலை செய்பவர்களின்  நேரத்தை 11 மணிக்கு மாற்றிவிடலாமே?

கூட்ட நெரிசலால் படிகட்டுகளில் தொங்கும் நிலை ஏற்படுவதால் விபத்து அதிகரிக்கிறது எனில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயம் வேன் அல்லது பஸ் வசதி செய்து கொடுக்கலாமே?? 
பணம் பறிக்கும் தனியார்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பள்ளி வேனிலே சென்று வந்து விடுகிறார்கள். எத்தனையோ இலவசங்களை வாரி வழங்க தயாராக இருக்கும் அரசாங்கம் , அரசுபள்ளிக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் நிச்சயம் சிரமமே இருக்காது. இது நீண்ட கால திட்டமும் கிடையாது… மாணவர் நலனில் உண்மையிலே அக்கறை இருந்தால், உடனே செயல்படுத்திவிட முடிந்த விஷயமே… 

இது தவிர காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்கலாம்.  சில கிராமங்களுக்கு  சாயங்காலம் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முட்டி மோதி போகும் சூழல் இருக்கிறது. லாபம் பார்க்காமல்  சேவை அடிப்படையில் கிராமப்ப்புறங்களுக்கு கூடுதல் பஸ்வசதியை  ஏற்படுத்தி கொடுத்தால் , இது இல்லையென்றாலும் அடுத்து பேருந்து வரும் என மாணவர்களும் இருந்துவிடுவாங்க…

எல்லாத்தை விடவும் முக்கியமா , சுத்தி சுத்தி வளைக்காம தானியங்கி கதவை அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்துங்க… தொங்கும் நிலை அறவே இருக்காது, விபத்தும் ஏற்படாது!

இதெல்லாம்விட்டுட்டு நேரத்தை மாத்துறாங்களாம்….??? என்னதான் யோசிக்கிறாங்களோ…???  யார் தான் ஐடியா கொடுக்குறாங்களோ??? 

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் இது போன்ற அறிவிப்புகளை விடுத்து, அறிவாய் யோசித்து  மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம், ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம் தமிழக அரசு!

அரசு பரிசீலிக்குமா?????? 

*******************
 

ஆக்கம்- ஆமினா முஹம்மத்


வெள்ளி, ஜனவரி 04, 2013

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

எனக்கு நன்கு தெரியும்... இந்த மருத்துமனையிலிருந்து உயிரோடு நான் திரும்பி வந்தாலும் என்னுடல் பலவீனத்திலிருந்து மீண்டு வர  முடியாது என்று... என் இளமை கால வசந்தம் அன்றிரவுடன்  முடிந்துவிட்டதை தெரிந்தே வைத்திருக்கிறேன்.  என் வாழ்க்கை முடக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை!

அந்த கொடிய இரவை நினைத்து பல வருடங்கள் எனக்கு தூக்கம் வராது. இனி இரவுகளை பார்க்கும் நேரமெல்லாம் அந்த கொடிய விஷயமே என் நினைவில் வந்து நிற்கும்!  ஆண்களை கண்டால் என்னை அறியாமல் என்னுடல் அலர்ஜியால் துடிதுடிக்கும்! இத்தனைக்கும் ஏன்?....  என்  தந்தையோ சகோதரனோ  மீதும் வெறுப்பு கலந்த சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும்!  என் சக தோழிகளை சந்திக்க நேர்ந்தால் கண்ணீர் முட்டும், என்னை பரிதாபமாக பார்க்கப்படும் ஒவ்வொரு நொடியும் மரணமே என் பக்கம் வந்ததுபோல் உணர்வு வரும். என் கனவுகள் ஆறு பேரால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும் இது தான் என் நிலை!

லேசான எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்த்தாலும்  அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கும்.  சாதாரண மாத்திரைகளுமே பக்கவிளைவை ஏற்படுத்தும் எனும் போது  என் உச்சந்தலை முதல் கருப்பை வரை  தாக்கப்பட்ட வலி ஆறு மாதத்திற்குள் நின்றுவிடாது என்பதை  உங்களால் உணர முடிகிறதா? நிச்சயம் எனக்கு தெரியும்...   இனி வீல் சேரும், சிறிய அறையுமே என் தோழி.. என் சுயதேவைகள் அனைத்தும் இனி என் அன்னையின் உதவியால் மட்டுமே முடியும்... சாகும் வரை இந்த வேதனைகளும் வலிகளும் சுமக்க போவது நான் மட்டுமே...

எந்த தவறும் செய்யாத நான் மட்டும் வீட்டுச்சிறையில் மரணத்தை எதிர்நோக்கி!
என்னை சீரழித்தவர்கள் சிலமாத காவல் சிறைக்குப்பின்  விடுதலை எதிர்நோக்கி!

ஒருவேளை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டால்....

பரிதாபம் கொண்டு இந்த மருத்துவச்செலவை ஏற்கிறது அரசு... மருத்துவமனை விட்டு நான் சென்ற பின்??? ஊடகங்களும் போராட்டக்காரர்களும் அடங்கிய பின்?
ஆனால்,
என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த விஷ ஜந்துக்களுக்கு இன்றும் என்றும் ஆயுள்தண்டனை என்ற பெயரில் அரசின் செலவில் இனிதாய் வாழ்க்கை கழிக்கும்! நிச்சயமாய் சில நாட்கள் குற்ற உணர்வு அவர்களை தொற்றிக்கொள்ளும்... ஆனால் நிரந்தரமல்ல... என் அவலநிலை மட்டும் நான் சாகும் வரை நிரந்தரமே...


இரக்கமற்றவர்களின் இருப்பு கம்பி அடியால் தலையில் பலத்த அடி வாங்கிய போதும், என்னை  காப்பாற்ற அந்த ஆறுபேருடன் போராடி தோற்ற போதும்,   கொசு கடிபட்டாலே பதறிப்போகும் போகும் என் மெல்லிய  தோல், வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்   பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு உராய்வு ஏற்பட்டு ரத்தத்தால் சிவப்புச்சாயம்  பூசப்பட்ட போதும்  ,  கூடியவர்களுக்கு முன் நிர்வாணமாய் நான் காட்சியளித்த  போதும்  என் உயிர் என்னுடலில் ஒட்டியிருந்ததற்கும் இல்லை... இல்லை...  வலுகட்டாயமாய் தைரியம் வரவழைத்து உயிரை பிடித்து வைத்திருந்ததற்கும்  ஒரே காரணம் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே! மனதில் இருந்த ஒரே  எண்ணம் இவர்களை  தண்டிக்க வேண்டும் என்பதே! நான் கண் விழித்ததும் எதிர்பார்த்ததும் அதுவே! 

பாறைக்கு கண் இருந்தாலும்  அன்றிரவு என்னை பார்த்து அன்று அழுதிருக்கும்... 

கேட்போரையும்  கதறச்செய்யும் எனக்கிழைக்கப்பட்ட கொடுமை பார்த்த பின்னும் காமவெறியர்களை திருந்த வாய்ப்பு கொடுக்கச்சொல்லும் சமூகம்... சிரிப்பு மட்டுமே வருகிறதெனக்கு...

 எறும்புகடித்தால் அதை நசுக்கி கொல்லாமல், கையை விட்டு மெல்லமாய் அப்புறப்படுத்துகிறதா   அவர்களின்  பகுத்தறிவு ? 

 வீட்டில் பாம்பு நுழைந்தால் அதை அடிக்காமல் ,  இரக்கப்பட்டு , மன்னித்து, மெல்லமாய்  எடுத்து வெளியே அனுப்பிவிடுகிறதா அவர்களின் மனிதாபிமானம்?

ஆம் எனில், நானும் அவர்களுடன் கைகோர்க்கிறேன்... ஹா..ஹா..ஹா... சிறுகடிக்கே அறிவற்ற உயிரியை கொல்லதுணியும் நாம், நல்ல மனநிலையில்,  வேண்டுமென்றே ஒரு பெண்ணை சித்ரவதை  செய்த கேடுகெட்டவர்களை மன்னித்துவிடவேண்டுமா? தாராளமாக மன்னிக்கட்டும்..... அவர்கள்  வீட்டு பெண்ணுக்கு இந்த அலங்கோல நிலை ஏற்படும்போது!
 
மன்னிப்பார்கள் எனில் ...
அவர்களும்  திருந்தக்கூடும் எனில் ... 
அவர்களை திருத்தியதால் அனைத்தும் சரியாகிவிட்டதா?  இனி உருவாகிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் காமவெறியர்களை  எப்படி திருத்தப்போகிறார்கள்... "தைரியமா கற்பழி! மனிதாபிமானம் கொண்ட சட்டம் உன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் "  என்றா???   


கேட்டுக்கொள்ளுங்கள்.... அந்த ஆறு பேரை விடவும் கேவலமானவர்கள் இவர்களே...!!!
குறித்துக் கொள்ளுங்கள்... எனக்கு நடந்தது போல் இனி நடக்கபோகும் அனைத்து கொடிய நிகழ்வுக்கும்  பொறுப்புத்தாரி  இவர்கள் மட்டுமே!
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.... இல்லையேல் நாளை உங்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இதே நிலையே!!!!


என் விதியை நிச்சயம் மாற்றியமைக்க முடியாது... ஆனாலும் மற்ற பெண்கள் இந்நிலையை அடையாதிருக்க, சிறந்த வழியை என்னை பார்த்த பின்பாவது ஏற்படுத்திகொடுக்கட்டும் இவ்வரசு! ஆணாதிக்கத்தை தீயிழிட்டு பொசுக்க இன்றேனும் சந்தர்ப்பத்தை உருவாக்கட்டும் இவ்வரசு!



*********************

ஆக்கம் - ஆமினா முஹம்மத்


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters