எதிர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 31, 2011

ஈழப் பதிவர்கள் vs இஸ்லாமியர்கள்= தீர்வுதான் என்ன?


குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////

இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....

நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.

நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால்,  அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....

நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....

இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில்  லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?

அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?

வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.

ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள்  என்றும்,  ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.





புதன், டிசம்பர் 28, 2011

சும்மா காட்டு காட்டென்று காட்டும் பவுடர் ஸ்டார்...



சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு  பதிவில் நமது அண்ணன் பவுடர் ஸ்டார் என்ற பிறர்பல பதிவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.

"நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன், நீங்க வேற காட்டச் சொல்றீங்க" என்பது போல்...

அதை படித்த உடன், நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் இவருக்கு எவ்வளவு கர்வம் மற்றும் தான் என்ற அகந்தை என்று.
அப்பொழுது நான் நினைத்தேன், அண்ணனோட பதிவுகள கண்டிப்பா படிக்கணும்னு. இப்ப  2 நாளாதான் பார்க்க முடியுது.


என்னமோ இவர் மட்டும் தான் அதி புத்திசாலி மாதிரியும், பதிவுலகில் எழுதும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் மாதிரியும் நினைச்சிகிட்டு இருக்கார் போல சார்...

ஸ்டார் அண்ணே, நீங்க காட்டு காட்டென்று காட்டுவீங்களோ என்னமோ எனக்கு தெரியாது. இனி நான் என் அளவில் உங்களை காட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம பெயரையும் உங்க டைரில எழுதி வச்சிக்கங்க.

ஆனாலும் ஸ்டார் அண்ணே, உங்களோட மோத எனக்கு கொஞ்சம், இல்ல ரொம்பவே பயமாத்தான் இருக்கு. ஏன்னா... சாக்கடையில் விழுந்து சண்டை போட கொஞ்சம் பயமா தான் இருக்கும்.

இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.

லிங்க்-1

என்ன சகோ, இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இந்தாங்க இந்த பதிவை பார்வையிடுங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள்.


லிங்க்-2

டிஸ்கி-1 : இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எனது வோட்டு எண்ணிக்கை "0 " ல இருக்கணும், இல்லாட்டி பவுடர் ஸ்டார் வகையறாக்கள் புண்ணியத்தில் மைனசில் இருக்க வேண்டும். ஏன்னா....இந்த பொறாமை புடிச்சவங்களுக்கு வோட்டு போட்டாலும் பிடிக்காது, ஒற்றுமையா  இருந்தாலும் பிடிக்காது. தானும் ஒற்றுமையா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்க இருந்தாலும் பொறாமைலேயே செத்துருவாங்க.

டிஸ்கி-2 : ஏன்பா பவுடர் ஸ்டார் வகையறாக்களா, நீங்களெல்லாம் ஒற்றுமையா இருக்க வேண்டாம்னு நாங்களெல்லாம் இலங்கை போலிஸ்லையா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம்? இல்ல ஐநா ஏதும் தடை விதிச்சி இருக்கா? நல்லா குரூப் சேர்த்து ஒற்றுமையா இருந்து மாத்தி மாத்தி வோட்டு போட்டுக்க வேண்டியது தானே...நாங்களா வேண்டாம்னு சொன்னோம்? ஏன் ஆள் சேர்க்க வேண்டியது தானே.... இவ்வளவு நயவஞ்சகமா இருந்தா உங்களோட எவன்யா சேருவான்? ஒருத்தர்  தமிழ் நாத்துன்னு ஆரம்பிச்சா உடனே அடுத்தவர் இங்கிலீஷ் நாத்துன்னு ஆரம்பிக்கிறார்.

ஆனா ஒண்ணுப்பா... உலகத்திலே ஒற்றுமையா இருக்கிறதா எதிர்க்கிற ஒரே குரூப் நீங்க தான்பா...


டிஸ்கி-3 :
உங்க குரூப் ரொம்ப பொறாமை பிடித்தது மற்றும் நயவஞ்சகமானது என்று நிறைய கேள்வி பட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் ஒரு முறை காட்டி, அறியாமல் இருந்த பிற சகோதரர்களுக்கும் அறிய தந்ததற்காக நன்றி.. மிக்க நன்றி...

டிஸ்கி - 4 : கண்டிப்பா தொடர்ந்து பவுடர் போட்டுகிட்டே தான் இருப்பேன்... ஆனால் வழக்கம் போல், உங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறான வார்த்தைகளோ ஆபாசமோ இருந்தால் அவற்றிற்கு பதில் அளிக்க மாட்டேன். அதை வெற்றி என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் தாராளமாக அதைக் கொண்டாடலாம். ஏனெனில் ஆபாச வார்த்தைகள் பேசி வெற்றி அடைய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைவிட தோல்வியே மேல்.

டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை. ஆனால், ஆரம்பித்துவைத்தது நீங்கள்தான். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை, வன்மத்தை, குரோதத்தை மொத்தமாக கொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு எழுதிய நீங்கள் மதவெறியரா? அல்லது அதற்காக பதில் சொல்ல வந்த இஸ்லாமியர்கள் மதவெறியரா? என்ற கேள்வியை  உங்கள் மனசாட்சிக்கும்(?), நடு நிலையாளர்களின் மனசாட்சிக்குமே விட்டுவிடுகிறோம். 

இன்னும் காட்டுவேன்....


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters