நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் - ஞானிக்கு ஒரு கேள்வி....


முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்ட விநோதினி அநியாயமாக இறந்து விட்டார்....

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்...
(நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே மீள்பவர்களாக இருக்கிறோம்...)


இதை பற்றி ஏராளமான செய்திகள் வந்து விட்டன... ஆகவே அதற்குள் நான் நுழையவில்லை... அந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுப்பது???
இது தான் மக்கள் மத்தியில் இருக்கும் விவாதம்....

காலையில் புதிய தலைமுறையில் அவரது தந்தை மற்றும் உறவினர்களின் பேட்டியை காட்டினார்கள். அதில் அவரின் தந்தை "என் மகள் முகத்தில் ஆசிட் ஊற்றியவனின் மூஞ்சியில்  ஆசிட் ஊற்ற வேண்டும், வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை.. தூக்கு தண்டனை வேண்டாம், ஒரு நொடியில் செத்துவிடுவான்... என் மகள் பட்ட கஷ்டத்தை அவன் காலமெல்லாம் பட வேண்டும்" என்றார்.

அதைவிட முக்கியம் அந்த பெண் விநோதினியும் மருத்துவமணையில் இருக்கும் பொழுது, "அவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்... நான் அனுபவிக்கும் இதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

என்ன செய்யப்போகிறது அரசு
??? தெரியவில்லை...

ஆனால், என்னை பொறுத்த வரையில் இதற்கு சரியான தீர்வு சுரேஷ் என்ற அந்த குற்றவாளியின் மூஞ்சியில் மீண்டும் ஆசிட் ஊற்ற வேண்டும். ஜெயிலில் போட்டு சாப்பாடு போடுவது ஒரு போதும் தீர்வாகாது. இது போன்ற சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால், குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வர வேண்டும்... செய்தால் நாமும் அதே போல் செய்யப்படுவோம் என்ற அச்சம் வர வேண்டும். அதற்கு "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற சட்டம் தான் சரி வரும்.

ஆகவே அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அவன் மூகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்.. ஆசிட் ஊற்றியும் அவன் கண் பார்வை பறி போகாவிட்டால், அவன் கண் பார்வையையும் பறிக்க வேண்டும்.. அந்த பெண் அனுபவித்த வேதனையை அவன் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டும் அல்லது இதே போல் 3 மாதத்தில் மூச்சுத் திணறல் வந்து சாக வேண்டும். இவன் இருந்து இந்த உலகத்திற்கு எதுவும் செய்யப் போவது இல்லை.

இதற்கு சட்டத்தில் இடம் இல்லாவிட்டால் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும்... பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்து குற்றத்தை அணுகுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். அவர்கள் வயிறு எறிந்து
இருக்கிறார்கள். அரசே!!  அவரின் குடுபத்தாரின் வயிரை குளிர வை. இல்லை இல்லை 6 மாசம் ஜெயில் தான் தருவேன் என்றால் தாராளமாக ஜெயில் தண்டனை கொடுங்கள்... ஆனால் அறிந்து கொள்ளுங்கள், உங்களால் ஒரு போதும் குற்றத்தை குறைக்க முடியாது....

சுரேஷ்...


இந்த அரசின் தண்டணைகளில் இருந்து ஒரு வேலை நீ தப்பிவிடலாம்.. திறமையான வக்கீல், பண பலம் இருந்தால் நீ தப்பிவிடக்கூடும்... அறிந்துகொள், யாருடைய பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த இறுதி தீர்ப்பு நாளில்  இறைவன் உனக்கு அளிக்கும் தண்டனையில் இருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ தப்பிக்க முடியாது.

இன்று கதறி அழுது, வயிறெரிந்து இருக்கும் அவரின் பெற்றோர்களின் மூஞ்சியிலும், அநியாயமாக இறந்த பெண்ணின் மூஞ்சியிலும் அன்று நாங்கள் நீதி கிடைத்த  மகிழ்சியையும், நிம்மதியையும் மற்றும் புன்னகையையும் காண்போம்.  அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இருக்கு உனக்கு ஆப்பு....

இந்த இடத்தில் தான் நாம் அனைவரும், கடவுள் இல்லை என்பவர்கள் உட்பட சிந்திக்க வேண்டும்.... உலக சட்டத்தை மட்டும் நம்பினால்?? இந்த குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்து தப்பி விட்டால்?? விநோதினியின் கஷ்டத்திற்கு என்ன தீர்வு?? அவள் பாதிப்புக்கு பதில் என்ன?? அல்வா தானா???? கடவுள் இல்லை என்பவர்களே பதில் சொல்லுங்கள்???

இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஹதீஸ்(நபி ஸல் அவர்கள் கூறியது) :


2413. அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ("ஆம், அவன்தான்" என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.
Volume :2 Book :44


2703. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள்.


அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.
Volume Book :53


இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குரான் வசனம் :

அறிவுடையோரே !பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து)விலகிக்கொள்வீர்கள்.
அல்குரான். 2: 178,179.


உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம்.
(பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல் குர் ஆன் 5:45)


நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக(கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக(கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக(கொலை செய்த)பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்குவது  உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு(கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்கவேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனை உள்ளது.

என்னே விநோதம்???

மார்க்கபந்துகளின் இந்த முடிவைத் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கேட்டிருக்கிறார்கள்... எக்ஸாட்லி டிட்டோ... இதையே தான் கேட்டு இருக்கிறார்கள். இஸ்லாம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து தீர்ப்பு சொல்கிறதுக்கு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை.

பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயத்துக்கு ஆறுதல் தரும் சட்டத்தை தந்த  இறைவா!! நீயே தூயவன்... நீயே உலகத்தின் அதிபதி.. நாங்கள் அனைவரும் உன்னுடைய அடிமைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.. 


இறைவனே மிக்க அறிந்தவன்........

ஞானிக்கு ஒரு கேள்வி :

இது குறித்து எழுத்தாளர் ஞானியிடம் இன்று காலை புதிய தலைமுறை கருத்து கேட்டது.

இந்த சம்பவங்கள் நடக்க என்ன காரணம்?

ஞானி ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்ன பதில்     "சினிமா".

மேலும் அவர் சொன்ன சில விஷயங்கள்...

"சினிமாவை நம்பும் ஒரு பெரிய கூட்டம்(தலைமுறை) இன்னும் நம்மிலே இருக்கிறது"

 "இந்த சம்பவங்களுக்கு சினிமா தான் காரணம்",

"சினிமாவில் காட்டப்படும் தவறான விஷயங்களை தவறு என்று சுட்டிக்காட்ட நம்மிடம் கல்வி முறையோ, அமைப்புகளோ இல்லை".

ஐயா ஞானி, இத தானே "விஸ்வரூப" பிரச்சனையில் நாங்கள் கத்தி, கதறி சொன்னோம். படம் வந்த பிறகு எதிர்ப்பது தான் சரி என்று சொன்னீர்களே???? நம்ம கிட்ட தான் அப்படி சரியாக எடுத்துச் சொல்லும் சிஸ்டம் இல்லையே??? (உங்க கருத்துப்படி தான்... ஹி..ஹி..ஹி), பின்ன எப்படி படம் வந்த பிறகு மக்களுக்கு புரிய வைக்கிறது???

"மற்றவர்களுக்கு வந்தா இரத்தம், முஸ்லிம்களுக்கு வந்தா தக்காளி சட்னி" - என்ற கொள்கையில் இல்லாதவர் நீங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.





நீங்கள் தவறானவர் என்று எனக்கு தோன்றவில்லை.. ஆனால் உங்கள் பேச்சில் நீங்கள் அறியாமலே எவ்வளவு முரண்பாடுகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கு இடைவெளி இருக்கிறது என்று சிந்தியுங்கள், உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பதாகவே இருக்கும்.





புதன், பிப்ரவரி 08, 2012

வாச்சாத்தி - கிடைத்தது முழுமையான நீதியா????


காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அந்த கூற்றை உண்மையாக்கியது போல் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  கொடுமைகளுக்கு, கடும் போராட்டங்களுக்கு பிறகு , 19  ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதென்ன வாச்சாத்தி வழக்கு, ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்....

ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான ஒரு குக்கிராமம்தான் வாச்சாத்தி. இது தர்மபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் இருக்கிறது. . கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.


இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில்  சந்தன மரங்கள் ஏராளமாக இருந்த காலம் அது.  இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, சந்தன மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர்.

அங்கு சில பாலியல் ரீதியான தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வர… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல்  கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். போலீஸார், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தனர். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.





இந்த சம்பவம் தமிழக மலைவாழ் மக்கல் நல சங்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த அ(கே)வலத்தை கண்ட தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீதி கிடைக்க அந்த சங்கம் போராட்டத்தில் இறங்கியது.  இவர்களோடு கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தது.  வழக்கும் போடப்பட்டது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக,  இன்றைக்கு அந்த மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க(?????) தீர்ப்பை பெற்றுத்தந்துள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் MLA அண்ணாமலை மற்றும் அதற்காக பாடுபட்ட நெஞ்சுரம் மிகுந்த அனைத்து மக்களையும் நான் உளமார பாராட்டுகிறேன். இதுபோன்று ஏழைகளுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் நல்லோர்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்தது முழுமையான நீதி தானா? குற்றவாளிகள் 
அனைவரும் தண்டிக்கப்பட்டு விட்டார்களா??? சிந்திக்க வேண்டிய கேள்வி 
தோழர்களே,நண்பர்களே, சகோதரர்களே.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர் அளவில் மனசாட்சியோடு தீர்பளித்துவிட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இது ஒரு முழுமையான தீர்ப்பாக எனக்கு படவில்லை, ஒரு சின்ன நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.
என்ன நெருடல் அது?????
இந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் பொழுதே இறந்து போனவர்கள் 54 பேர். அவர்கள் எந்த தண்டனையும் அனுபவிக்க வில்லையே???? அவர்களும் தவறு செய்தவர்கள் தானே???? அவர்களை நம்மால் தண்டிக்க முடியவில்லையே???? மரணம் அடைந்தது தான் தண்டனையா???? அப்படி என்றால் அனைவரும் தானே மரணம் அடையப் போகிறோம்... அவ்வளவு ஏன் இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்களும் ஒரு நாள் மரணிக்கத் தானே போகிறார்கள். எனவே குற்றவாளிகள் மரணம் அடைந்து விட்டால், அவர்கள் செய்த தீங்குகள் அநீதிகள் இல்லையென்று ஆகி விடுமா????
நிச்சயமாக மரணம் அடைந்தவர்களை எழுப்பி தண்டனை கொடுக்க முடியாது. வேறு என்னதான் தீர்வு????? இங்குதான் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை என்ற தத்துவம் வருகிறது...... சொர்க்கம், நரகம் என்ற கான்செப்ட் வருகிறது.
இறந்தவர்களை ஒருநாள் கடவுள் மீண்டும் எழுப்புவார். அவர்களின் நன்மை, தீமை குறித்து விசாரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சொர்க்கமோ நரகமோ செல்வார் என்ற சித்தாந்தம் வருகிறது.
அருமைத் தோழர் அண்ணாமலை, பாபு மற்றும் இதற்காக பாடுபட்ட தோழர்கள் இதை நம்புவார்களோ மாட்டார்களோ. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கான உண்மையான நீதி மறுமை நாளில்தான் கிடைக்கும். செய்த பாவத்திற்கு எந்த தண்டனையும் அனுபவிக்காமல் சென்றுவிட்ட அந்த 54 பெரும் இறுதித் தீர்ப்பு நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.

உலக மக்கள் அனைவர் முன்னிலயிலும் நடக்கும் அந்த நீதி விசாரணையின் போது தவறிழைத்தவர்கள் தலைகுனிந்தும், வாச்சாத்தி மக்கள் தலை நிமிர்ந்தும் சந்தோசமாக நடக்கும் அந்த கணம் நிச்சயம் வந்தே தீரும். அன்றுதான் அவர்கள் நீதிக்கான தேடல் முற்றுப்பெறும்.

குறிப்பு: நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் இருந்த பதிவு இது...  நேரமின்மை காரணமாக அப்போது வெளியிட முடியவில்லை.


புதன், ஜனவரி 11, 2012

கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்!(எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)


கோவி கண்ணன் எழுதிய சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் என்ற பதிவிற்கான எதிர் பதிவை கக்கு மாணிக்கம் அவர்களின் பின்னூட்டத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

/* உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்?   */
என்று பின்னூட்டமிட்டுருந்தார் அண்ணாச்சி கக்கு மாணிக்கம் அவர்கள்.
வாங்க கக்கு மாணிக்கம்,
நீங்க வேணும்னா புல்ல அடிவரை மேஞ்சிட்டு ஒரு ஆக்கம் போடுங்களேன். நீங்க புல்ல FULL ஆ மேஞ்சீங்களா இல்லையான்னு பின்னூட்டம் வழியா விவாதிப்போம்.
உங்களுக்கு இந்த இரண்டு வரிகள் தான். நீங்க அப்பீட்டாகிக்கலாம்.

இனி, அண்ணன் கோவி கண்ணன்,
விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத  பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட  பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக  நீங்கள் மாற்றி  இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர்  வந்து விட்டதா , உடனே  எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய   மனப்பான்மையில்   நீங்கள் கட்டுரை தீட்டியதோ  ஏனோ?????
இதற்க்கு மறுப்பு சொல்றதா இருந்தா நமது நாடு அப்படியெல்லாம் கிடையாது. விவசாயத்தில் இன்ன இன்ன மாதிரிலாம் இருக்கோம்,மணல் திருட்டு நடைபெறுவது  இல்லைவிவசாய
நிலங்கள்  வீட்டு மனைகளாக  மாறவில்லை  என்றால்  அது சரியான பதில்.


அதுவும் இல்லையா, சவுதியோட திட்டங்கள் சரி இல்லை. இப்படி இப்படி செய்து இருந்தால் இன்னும் வளமான நாட்டை உருவாக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் அது நியாயம். அத விட்டுட்டு வீட்டு வேலை செய்பவர்களை பற்றி பேசினால் என்ன அர்த்தம்? விவசாயத்திற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்???
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நமது நாட்டில் மட்டும் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லையா? அவர்களை  அடிமை போல் நடத்துவது நடக்க வில்லையா???? அல்லது உங்களுக்கு தெரியாதா????
பதிவின் மையக் கருத்தோட விவாதிக்கப் பழகுங்கள். ஒரு இனத்தின் மீது உள்ள உங்களின் வெறுப்பை எல்லா இடங்களிலும் காட்டாதீர்கள்.
அதற்காக சவுதியில் யாரும் தவறு செய்தால் அதற்க்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று கதை கட்டி விடாதீர்கள். யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே. யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து. அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.
கீழ்க்கண்ட வசனம் ஒரு புத்தகத்தில் உள்ளது. இது தான் உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த வசனம். இது எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினால் அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே புத்தகப் பெயரை நான் குறிப்பிடவில்லை .
"நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது."
டிஸ்கி - 1 :
இன்றைய நிலையில் சவூதி அரேபியா தன்னிறைவு அடைந்த நாடுதான். ஆனாலும் பெட்ரோலை மட்டுமே நம்பாமல் இப்பொழுதே விவாசயத்திலும் கவனம் செலுத்தும் அந்த அரசின் பார்வை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்ல செயல்தான், தொலைநோக்கு பார்வைதான். இதை விவாதிக்கும் பொருளாக  எடுக்காமல், பாசிடிவாக எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters