இலங்கை பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 29, 2011

பதிவுலகின் ஒரே நேர்மையாளர் நிரூபனுக்கு ஒரு கடிதம்...



நலமா நிரூபன்?

நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நமக்குள் கருத்து மோதல் தானே, மற்றபடி என்ன வாய்க்கால் சண்டையா? ஆகவே நாம் அனைவரும் நலமாகவே இருக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் பெரிய பரிட்சயம் இல்லை. அதனால் என்னிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்து நீங்கள் சிறிது ஆச்சரியம் அடையக்கூடும். சில சந்தேகங்கள் சகோ.

சகோ என்று கூப்பிடலாம் தானே? போலித்தனமாக இல்லை, உண்மையாகவே. போலித்தனமாக யாரையும் எனக்கு விழிக்கத்தெரியாது நிரூ.

சகோ சவுந்தர் அவர்களுடன்  நீங்கள் சண்டையிட்ட ஒரு பதிவில், தவறான கருத்துள்ள பதிவிற்கு நான் பின்னூட்டமிடமாட்டேன்.
மாறாக, அவர்களுக்கு தனியாக மெயில் செய்வேன் என்பதுபோல்
கூறியிருந்தீர்கள்.  அதை படித்தவுடன் நீங்கள் மிகச்சிறந்த பண்பாளர் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ?, உங்களுக்கென்று ஒரு இடத்தை என் மனதில் கொடுத்திருந்தேன்.

ஆனால் பவுடர் அண்ணே மிக கொச்சையாக ஆபாசமாக பதிவிட்ட ஒரு பதிவிற்கு
   
வணக்கம் மச்சி மணி,,
 என்னா ஒரு வேகம்?
 இருங்க படிச்சிட்டு வாரேன்.
  
என்று முதல் பின்னூட்டமும்,அதை தொடர்ந்து

    உனக்கு எம்புட்டுத் தில் மச்சி!

    செமையா கலாய்ச்சிருக்காய்.

என்று இரண்டாவது பின்னூட்டமும் போட்டிருந்தீர். அது உங்கள் பார்வையில் ஒரு கண்ணியமான பதிவா? தரமான பதிவர் என்று பலராலும் அறியப்பட்ட உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை
ஒருவேளை மற்றவர்கள் தவறான முறையில் பதிவு எழுதினால் மட்டும்தான் மெயிலில் சொல்வீர்கள் போல.....அதே தவறை உங்கள் நண்பர் செய்தால் ஆதரிப்பீர்களோ? இது எந்த விதத்தில் நியாயம்?

அந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உடன்பாடு இருந்திருக்கும். ஆனால்,
அதை எழுதிய முறையில் சில ஆபாசமும், அருவருப்பும் இருந்ததே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?

இவ்வளவு தானா நிரூபன் நீங்கள்?

இந்த இரண்டு முகங்களில் எது  நிருபனின் உண்மையான முகம்?

மேலும் ஒரு சந்தேகம்?,
அந்த பின்னூட்டத்திலேயே

உனக்கு எம்புட்டு தில் மச்சி....என்று
இன்னொன்றையும் சொல்லியிருந்தீர்கள்.

ஃபிரான்சில் படுத்துக்கொண்டு இஸ்லாத்தை திட்டி எழுத என்ன தில் வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
சவுதியில் இருந்துகொண்டு இஸ்லாத்தை தாக்கி பவுடர் அண்ணே எழுதியிருந்தா அது தில்லு.....அல்லது இலங்கையில், அதுவும் கொழும்பில் இருந்து ஏதாவது ஒரு பத்திரிகையில் ராஜபக்‌ஷேவை எதிர்த்து எழுதியிருந்தா அது தில்லு.

அதை விடுத்து, ஃபிரான்சில் உட்கார்ந்துகொண்டு தனது றஜீவன் என்ற ஒரிஜினல் பெயரிலோ அல்லது ஒரிஜினல் முகத்தையோ காட்டாமல் பவுடர் பூசிக்கொண்டு போலி பெயரில் அநாகரீகமாக கெட்டவார்த்தையில் எழுத என்ன தில் வேண்டும் நிரூ....

இந்த இரு சந்தேகங்களையும் கொஞ்சம்புரிய வைத்தால் நன்று....

தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்....இறைவன் நாடினால்.


புதன், டிசம்பர் 28, 2011

சும்மா காட்டு காட்டென்று காட்டும் பவுடர் ஸ்டார்...



சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு  பதிவில் நமது அண்ணன் பவுடர் ஸ்டார் என்ற பிறர்பல பதிவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.

"நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன், நீங்க வேற காட்டச் சொல்றீங்க" என்பது போல்...

அதை படித்த உடன், நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் இவருக்கு எவ்வளவு கர்வம் மற்றும் தான் என்ற அகந்தை என்று.
அப்பொழுது நான் நினைத்தேன், அண்ணனோட பதிவுகள கண்டிப்பா படிக்கணும்னு. இப்ப  2 நாளாதான் பார்க்க முடியுது.


என்னமோ இவர் மட்டும் தான் அதி புத்திசாலி மாதிரியும், பதிவுலகில் எழுதும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் மாதிரியும் நினைச்சிகிட்டு இருக்கார் போல சார்...

ஸ்டார் அண்ணே, நீங்க காட்டு காட்டென்று காட்டுவீங்களோ என்னமோ எனக்கு தெரியாது. இனி நான் என் அளவில் உங்களை காட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம பெயரையும் உங்க டைரில எழுதி வச்சிக்கங்க.

ஆனாலும் ஸ்டார் அண்ணே, உங்களோட மோத எனக்கு கொஞ்சம், இல்ல ரொம்பவே பயமாத்தான் இருக்கு. ஏன்னா... சாக்கடையில் விழுந்து சண்டை போட கொஞ்சம் பயமா தான் இருக்கும்.

இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.

லிங்க்-1

என்ன சகோ, இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இந்தாங்க இந்த பதிவை பார்வையிடுங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள்.


லிங்க்-2

டிஸ்கி-1 : இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எனது வோட்டு எண்ணிக்கை "0 " ல இருக்கணும், இல்லாட்டி பவுடர் ஸ்டார் வகையறாக்கள் புண்ணியத்தில் மைனசில் இருக்க வேண்டும். ஏன்னா....இந்த பொறாமை புடிச்சவங்களுக்கு வோட்டு போட்டாலும் பிடிக்காது, ஒற்றுமையா  இருந்தாலும் பிடிக்காது. தானும் ஒற்றுமையா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்க இருந்தாலும் பொறாமைலேயே செத்துருவாங்க.

டிஸ்கி-2 : ஏன்பா பவுடர் ஸ்டார் வகையறாக்களா, நீங்களெல்லாம் ஒற்றுமையா இருக்க வேண்டாம்னு நாங்களெல்லாம் இலங்கை போலிஸ்லையா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம்? இல்ல ஐநா ஏதும் தடை விதிச்சி இருக்கா? நல்லா குரூப் சேர்த்து ஒற்றுமையா இருந்து மாத்தி மாத்தி வோட்டு போட்டுக்க வேண்டியது தானே...நாங்களா வேண்டாம்னு சொன்னோம்? ஏன் ஆள் சேர்க்க வேண்டியது தானே.... இவ்வளவு நயவஞ்சகமா இருந்தா உங்களோட எவன்யா சேருவான்? ஒருத்தர்  தமிழ் நாத்துன்னு ஆரம்பிச்சா உடனே அடுத்தவர் இங்கிலீஷ் நாத்துன்னு ஆரம்பிக்கிறார்.

ஆனா ஒண்ணுப்பா... உலகத்திலே ஒற்றுமையா இருக்கிறதா எதிர்க்கிற ஒரே குரூப் நீங்க தான்பா...


டிஸ்கி-3 :
உங்க குரூப் ரொம்ப பொறாமை பிடித்தது மற்றும் நயவஞ்சகமானது என்று நிறைய கேள்வி பட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் ஒரு முறை காட்டி, அறியாமல் இருந்த பிற சகோதரர்களுக்கும் அறிய தந்ததற்காக நன்றி.. மிக்க நன்றி...

டிஸ்கி - 4 : கண்டிப்பா தொடர்ந்து பவுடர் போட்டுகிட்டே தான் இருப்பேன்... ஆனால் வழக்கம் போல், உங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறான வார்த்தைகளோ ஆபாசமோ இருந்தால் அவற்றிற்கு பதில் அளிக்க மாட்டேன். அதை வெற்றி என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் தாராளமாக அதைக் கொண்டாடலாம். ஏனெனில் ஆபாச வார்த்தைகள் பேசி வெற்றி அடைய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைவிட தோல்வியே மேல்.

டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை. ஆனால், ஆரம்பித்துவைத்தது நீங்கள்தான். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை, வன்மத்தை, குரோதத்தை மொத்தமாக கொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு எழுதிய நீங்கள் மதவெறியரா? அல்லது அதற்காக பதில் சொல்ல வந்த இஸ்லாமியர்கள் மதவெறியரா? என்ற கேள்வியை  உங்கள் மனசாட்சிக்கும்(?), நடு நிலையாளர்களின் மனசாட்சிக்குமே விட்டுவிடுகிறோம். 

இன்னும் காட்டுவேன்....


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters