நலமா நிரூபன்?
நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நமக்குள் கருத்து மோதல் தானே, மற்றபடி என்ன வாய்க்கால் சண்டையா? ஆகவே நாம் அனைவரும் நலமாகவே இருக்க வேண்டும்.
உங்களுக்கும் எனக்கும் பெரிய பரிட்சயம் இல்லை. அதனால் என்னிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்து நீங்கள் சிறிது ஆச்சரியம் அடையக்கூடும். சில சந்தேகங்கள் சகோ.
சகோ என்று கூப்பிடலாம் தானே? போலித்தனமாக இல்லை, உண்மையாகவே. போலித்தனமாக யாரையும் எனக்கு விழிக்கத்தெரியாது நிரூ.
சகோ சவுந்தர் அவர்களுடன் நீங்கள் சண்டையிட்ட ஒரு பதிவில், தவறான கருத்துள்ள பதிவிற்கு நான் பின்னூட்டமிடமாட்டேன்.
மாறாக, அவர்களுக்கு தனியாக மெயில் செய்வேன் என்பதுபோல்
கூறியிருந்தீர்கள். அதை படித்தவுடன் நீங்கள் மிகச்சிறந்த பண்பாளர் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ?, உங்களுக்கென்று ஒரு இடத்தை என் மனதில் கொடுத்திருந்தேன்.
ஆனால் பவுடர் அண்ணே மிக கொச்சையாக ஆபாசமாக பதிவிட்ட ஒரு பதிவிற்கு
வணக்கம் மச்சி மணி,,
என்னா ஒரு வேகம்?
இருங்க படிச்சிட்டு வாரேன்.
என்று முதல் பின்னூட்டமும்,அதை தொடர்ந்து
உனக்கு எம்புட்டுத் தில் மச்சி!
செமையா கலாய்ச்சிருக்காய்.
என்று இரண்டாவது பின்னூட்டமும் போட்டிருந்தீர். அது உங்கள் பார்வையில் ஒரு கண்ணியமான பதிவா? தரமான பதிவர் என்று பலராலும் அறியப்பட்ட உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை
ஒருவேளை மற்றவர்கள் தவறான முறையில் பதிவு எழுதினால் மட்டும்தான் மெயிலில் சொல்வீர்கள் போல.....அதே தவறை உங்கள் நண்பர் செய்தால் ஆதரிப்பீர்களோ? இது எந்த விதத்தில் நியாயம்?
அந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உடன்பாடு இருந்திருக்கும். ஆனால்,
அதை எழுதிய முறையில் சில ஆபாசமும், அருவருப்பும் இருந்ததே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?
இவ்வளவு தானா நிரூபன் நீங்கள்?
இந்த இரண்டு முகங்களில் எது நிருபனின் உண்மையான முகம்?
மேலும் ஒரு சந்தேகம்?,
அந்த பின்னூட்டத்திலேயே
உனக்கு எம்புட்டு தில் மச்சி....என்று
இன்னொன்றையும் சொல்லியிருந்தீர்கள்.
ஃபிரான்சில் படுத்துக்கொண்டு இஸ்லாத்தை திட்டி எழுத என்ன தில் வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
சவுதியில் இருந்துகொண்டு இஸ்லாத்தை தாக்கி பவுடர் அண்ணே எழுதியிருந்தா அது தில்லு.....அல்லது இலங்கையில், அதுவும் கொழும்பில் இருந்து ஏதாவது ஒரு பத்திரிகையில் ராஜபக்ஷேவை எதிர்த்து எழுதியிருந்தா அது தில்லு.
அதை விடுத்து, ஃபிரான்சில் உட்கார்ந்துகொண்டு தனது றஜீவன் என்ற ஒரிஜினல் பெயரிலோ அல்லது ஒரிஜினல் முகத்தையோ காட்டாமல் பவுடர் பூசிக்கொண்டு போலி பெயரில் அநாகரீகமாக கெட்டவார்த்தையில் எழுத என்ன தில் வேண்டும் நிரூ....
இந்த இரு சந்தேகங்களையும் கொஞ்சம்புரிய வைத்தால் நன்று....
தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்....இறைவன் நாடினால்.
| Tweet |
