புதன், ஜனவரி 11, 2012

கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்!(எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)


கோவி கண்ணன் எழுதிய சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் என்ற பதிவிற்கான எதிர் பதிவை கக்கு மாணிக்கம் அவர்களின் பின்னூட்டத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

/* உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்?   */
என்று பின்னூட்டமிட்டுருந்தார் அண்ணாச்சி கக்கு மாணிக்கம் அவர்கள்.
வாங்க கக்கு மாணிக்கம்,
நீங்க வேணும்னா புல்ல அடிவரை மேஞ்சிட்டு ஒரு ஆக்கம் போடுங்களேன். நீங்க புல்ல FULL ஆ மேஞ்சீங்களா இல்லையான்னு பின்னூட்டம் வழியா விவாதிப்போம்.
உங்களுக்கு இந்த இரண்டு வரிகள் தான். நீங்க அப்பீட்டாகிக்கலாம்.

இனி, அண்ணன் கோவி கண்ணன்,
விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத  பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட  பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக  நீங்கள் மாற்றி  இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர்  வந்து விட்டதா , உடனே  எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய   மனப்பான்மையில்   நீங்கள் கட்டுரை தீட்டியதோ  ஏனோ?????
இதற்க்கு மறுப்பு சொல்றதா இருந்தா நமது நாடு அப்படியெல்லாம் கிடையாது. விவசாயத்தில் இன்ன இன்ன மாதிரிலாம் இருக்கோம்,மணல் திருட்டு நடைபெறுவது  இல்லைவிவசாய
நிலங்கள்  வீட்டு மனைகளாக  மாறவில்லை  என்றால்  அது சரியான பதில்.


அதுவும் இல்லையா, சவுதியோட திட்டங்கள் சரி இல்லை. இப்படி இப்படி செய்து இருந்தால் இன்னும் வளமான நாட்டை உருவாக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் அது நியாயம். அத விட்டுட்டு வீட்டு வேலை செய்பவர்களை பற்றி பேசினால் என்ன அர்த்தம்? விவசாயத்திற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்???
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நமது நாட்டில் மட்டும் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லையா? அவர்களை  அடிமை போல் நடத்துவது நடக்க வில்லையா???? அல்லது உங்களுக்கு தெரியாதா????
பதிவின் மையக் கருத்தோட விவாதிக்கப் பழகுங்கள். ஒரு இனத்தின் மீது உள்ள உங்களின் வெறுப்பை எல்லா இடங்களிலும் காட்டாதீர்கள்.
அதற்காக சவுதியில் யாரும் தவறு செய்தால் அதற்க்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று கதை கட்டி விடாதீர்கள். யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே. யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து. அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.
கீழ்க்கண்ட வசனம் ஒரு புத்தகத்தில் உள்ளது. இது தான் உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த வசனம். இது எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினால் அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே புத்தகப் பெயரை நான் குறிப்பிடவில்லை .
"நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது."
டிஸ்கி - 1 :
இன்றைய நிலையில் சவூதி அரேபியா தன்னிறைவு அடைந்த நாடுதான். ஆனாலும் பெட்ரோலை மட்டுமே நம்பாமல் இப்பொழுதே விவாசயத்திலும் கவனம் செலுத்தும் அந்த அரசின் பார்வை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்ல செயல்தான், தொலைநோக்கு பார்வைதான். இதை விவாதிக்கும் பொருளாக  எடுக்காமல், பாசிடிவாக எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters