சனி, செப்டம்பர் 14, 2013

விநாயகர் ஊர்வலங்களும்... என் மன வேதனையையும்...

 
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் 3, அதில் பாலவாக்கம் கடற்கரையும் ஒன்று...
நேற்று என் மகனை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பாலவாக்கம் பீச் வழியா போகையில் ஏராளமான போலிஸ்கள் பாதுகாப்பிற்கு நின்றார்கள்... முதலில் என்னவென்று எனக்கு புரியவில்லை, அதன்பின் விசாரிக்கையில் தான் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு நடக்கிறது என்று கூறினார்கள். மேலும் விசாரிக்கையில்  சிலைகளை கரைக்க சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 3 தானாம்... அதில் பாலவாக்கமும் ஒன்று என்று கூறினார்கள்.

அதேபோல், இன்று ஈ.சி.ஆர் ரோட்டில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுகொண்டு இருக்கையில், நிறைய விநாயகர் சிலைகளை வண்டியில் எடுத்துக்கொண்டு சென்றார்கள்... ஒவ்வொரு வண்டியிலும் ஒரு போலிஸ் உட்கார்ந்து இருந்தார்... அதைத்தவிர நிறைய போலிஸ் வாகனங்கள் முன்னும், பின்னும்... அதை பார்த்ததும் மனம் வேதனையாக இருந்தது...

இந்துக்களின் விழாக்களில் இதுவும் ஒன்று... அதற்கு இவ்வளவு பாதுகாப்பும், பந்தோபஸ்தும் தேவையா...?? என்னமோ நடக்கக்கூடாதது நடந்து கொண்டு இருப்பது போல் இருந்தது அதைப்பார்த்ததும்... 
அமைதியாக நடந்து கொண்டு இருந்த இந்த ஊர்வலங்களை வன்முறையாக மாற்றிய பெருமை இந்து முண்ணனி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபர்களையே சாரும்... பெரும்பான்மை இந்து சகோக்கள் அமைதியாக போகும்பொழுது, இந்த கயவர்கள் ஊடுருவி பள்ளிவாசல்கள் அருகில் செல்லும் பொழுது கெட்ட வார்த்தை பேசுவது, வெடி வெடிப்பது என்று செய்து வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்க வைத்திருக்கிறார்கள்... 
அதேபோல் விநாயகர் ஊர்வலங்களுக்கு பர்மிஷன் கேட்கும் பொழுது வேண்டுமென்றே பள்ளிவாசல்கள் இருக்கும் வழித்தடங்களில் செல்ல அனுமதி கேட்பது. ஏன் பள்ளிவாசல் இருக்கும் வழித்தடங்கள்??? இதில் இருந்தே இவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறதல்லவா? நல்ல மனிதர்கள் பிரச்சனை வராமல் இருப்பதையே விரும்புவார்கள்.. ஆனால் இவர்களோ பிரச்சனை வளர்க்கும் அனைத்தையும் திட்டமிட்டு செய்கிறார்கள். இந்து சகோக்கள் இவர்களின் தீய நோக்கை புரிந்து கொண்டு, இவர்களை புறக்கணித்து வரும் காலங்களில் அமைதியான விநாயகர் ஊர்வலங்கள் நடக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்...

ஆர்.எஸ்.எஸ் தம்பிகளா...
நீங்க நினைக்கலாம் இந்துக்களையும், முஸ்லிம்களையும் இதை வைத்து பிரித்து குளிர்காயலாம்னு...
ஒரு நாள் வரும்...
அன்னைக்கு இந்த இரண்டு தரப்பும் ஒன்னு சேர்ந்து உங்கள ஓடஓட விரட்டும்...
அதன் பின்...
விநாயகர் ஊர்வலங்களில் போலிஸ் இல்லாத நாள் ஒன்றும் வரும்... 



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters