சின்ன வயசுல அடிக்கடி கேள்விபடும் விஷயம், "அரைகுறை ஆடை அணியும் நடிகையை எதிர்த்து மாதர் சங்கம் போராட்டம், உலக அழகி போட்டி எதிர்த்து போராட்டம், விளம்பரத்தில் பெண் போகப்பொருளாக காட்டுவதை கண்டித்து
போராட்டம்...ன்னு இந்த லெவளில் இருக்கும்... இதெல்லாம் நான் முன்பே சொன்ன மாதிரி சின்ன வயசுல... சின்ன வயசுல...
சில வருட குளிர்கால உறக்கத்துக்கு பின் பெண்கள் அமைப்பு புதிய பரிணாமத்தில் வந்தது செம அதிர்ச்சி.... இவ்வளவு நாள் பெண்கள் கண்ணியம் பத்தி பேசிட்டிருந்தவங்களா இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி என புருவத்தை தலைமுடி தொடும் அளவுக்கு உயர்த்தி, காய்ந்து போய் ஒட்டிக்கொண்டிருந்த உதட்டை திறந்து இருக்கும் பற்களையெல்லாம் தெரிய வைத்து, மவுஸ்ஸில் இருக்கும் உள்ளங்கையை தானாக நெத்தியில் சடார்ன்னு ஒரு அடி அடிக்க வச்சது!
ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப இஸ்லாமிய பெண்களைப் போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும்- ன்னு சொன்னார். பாவம் இவர் கெட்ட நேரம் இஸ்லாமும், பர்தாவும் வாய்ல வந்துடுச்சு.... கொஞ்சம் உஷாரா இருந்திருந்து இப்படி சொல்லியிருக்கணும்... //ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப அனைத்து பெண்களும் முழு உடலை மறைக்கும் கன்னியமான ஆடை அணிய வேண்டும்// - இப்படி சொல்லியிருந்தா இப்ப இவருக்கு இந்த நெலம ஏற்பட்டிருக்குமா? இல்ல குளிர்கால உறக்கத்தில் இருந்த பெண்கள் அமைப்பும் மார்கழி மாசம் அதுவுமா மடத்தை முற்றுகையிட்டிருக்குமா? பாவம் தூங்குறவங்களையெல்லாம் எழுப்பிட்டார் இந்த ஆதினம் :-))
போராட்டத்தின் போது "நாங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லாதே" என்ற வாசகம் பற்றி கேள்விபடும் போதும், பெண்கள் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டாம் என ஆந்திராவில் ஒரு அரசியல் பிரமுகர் சொன்ன போது அதை நீ சொல்லாதே என சொன்னபோதும்- அப்படின்னா எக்கேடோ கெட்டு போ என அனைவரையும் சொல்ல வைத்திருக்கும்... நம் நாட்டு மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்தது எது என்ற வருத்தமே மிஞ்சியது... கண்ணியமா ஆடை உடுத்து என சொன்னது தப்பா என மனசாட்சி உள்ள அனைவர் மனதிலும் நிச்சயமாய் உதித்திருக்கும்.. பாவம் மாதர் சங்கங்களும், போராட்டத்தில் குதித்த அனைவரின் முகத்திலும் நீங்காத நெய்வேலி கரி படிந்துவிட்டது...
இந்த பிரச்சனை ஆரம்பமாகிய நேரத்திலிருந்து அனைவரின் பார்வையும் உடைகட்டுப்பாடு, வளர்ப்பு, தண்டனை என்ற 3 விஷயங்களை சுற்றியே வந்தது. அனைவரின் கோரிக்கையும் இதனை வலியுறுத்தியே வந்தது..... துரதிஷ்ட்டவசமாக இவர்கள் வலியுறுத்திய இந்த விஷயங்கள் எல்லாமே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னொரு காலத்திலிருந்தே இஸ்லாமியர்களின் வாழ்க்கை பகுதியில் பிரிக்க முடியாத அங்கமா இருக்கு... இந்த சம்பவத்தால் "இஸ்லாம் முறைப்படி" என்பது அனைவரின் ஒட்டுமொத்த குரலாக இருக்கும் போது இஸ்லாமோபோஃபியாக்கள் சும்மா இருப்பாங்களா??...ம்ஹூம்.........
உடைகட்டுப்பாடு தேவை- ஆனால் இஸ்லாம் பெண்களை போல் என சொல்லக்கூடாது! பெண் பிள்ளை கண்காணிப்பு தேவை- ஆனால் இஸ்லாம் கூறும் வழிமுறைபடி என சொல்லக்கூடாது! கடுமையான தண்டனை வேண்டும்- ஆனா இஸ்லாம் சொன்ன மரணதண்டனை என சொல்ல கூடாது!
-என்பதில் ரொம்பவே உறுதியா இருக்காங்க. பாவம் அவங்க பயமும் நியாயமானதே :-)
என்னத்தான் மூடி மறைச்சாலும் இஸ்லாம் எனும் விதை மண்ணை துளைத்து தழைக்கவே செய்யும்.. பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டாலும் பிளவு ஏற்படுத்தி வளரவே செய்யும்... காரணம், இது மலட்டு விதை அல்லவே :-)
அப்பறம் இன்னொரு முக்கிய விஷயம்...
பர்தா போட்டா மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...
கடுமையான தண்டனை கொண்டு வந்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...
பெண்பிள்ளைகளை கட்டுப்பாடோடும் கண்காணிப்போடும் வளர்த்தால் மட்டும் பாலியல், வன்கொடுமைகள் எல்லாம் நின்றுவிடாது...
கண்ணியமாய் உடை உடுத்தி, வரைமுறைகளோடு பாதுகாப்பான சுதந்திரமும் அளித்து, நாட்டில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால் நிச்சயம் எந்த வெறிநாயும் சீண்டாது! நாம் ஏன் கறித்துண்டை காமிப்பானேன்? நாய் ஏன் நம்மை கடிப்பானேன்?? தப்பு செய்றதுக்கான எல்லா கதவையும் அடைச்சு விடுங்க... அப்பறம் குற்றம் கொறையுதா இல்லையான்னு பாருங்க...
டிஸ்கி: இந்த பதிவை தனது தளத்தில் போட அனுமதித்த சிராஜ்ஜிற்கு நன்றி :-)
-ஆமினா முஹம்மத்
நன்றி : oneindia , inneram.com
Tweet |