வியாழன், ஜனவரி 31, 2013

இஸ்லாமிய அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்????



                                                           
                                                               

விஸ்வரூப பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து எங்கு சென்றாலும் இதை பற்றி தான் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கமல் இப்பொழுது தான் சரியான திசைக்கு வந்து இருக்கிறார்.... பேச்சுவார்த்தைக்கு தயார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குகிறேன் என்று சொல்லி உள்ளார்.  இருப்பதிலே மிகச் சரியான முடிவு இது தான். காலம் தாழ்த்தி எடுத்து இருந்தாலும் சரியான முடிவு. அப்ரிசியேட் கமல்...

இதையே தான் நான் ஒரு வாரம் முன்பே என் பதிவின் கமெண்டுகளில் சொல்லி இருந்தேன். "இவர்கள் அனைவரும் உங்களை தூண்டுகிறார்கள்.. ஆனால் சிறந்த வழி "பெட்டர் கோ பார் பீஸ் டாக்""என்று...
பல களேபரங்களுக்கு பிறகு இன்று அது தான் நடந்துள்ளது.

ஓக்கே. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.

இன்று மாலை முஸ்லிம்களின் கூட்டமைப்பு தலைவர்களுடன், கமல் சார்பாக இயக்குனர் அமீர் பேச இருக்கிறார். அந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

இந்த நிலையில்... தமிழகத்தின் மாபெரும் இஸ்லாமிய அமைப்பான ததஜ தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் இந்த பேச்சு வார்த்தையை வரவேற்று இருப்பது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது.  இந்த படம் வெளிவருவதில் ததஜ வின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, அண்ணன் பிஜே அவர்களின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

                                                      


இது குறித்து தட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கை..

"சென்னை: விஸ்வரூபம் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். பிரச்சினையை வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும். இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/31/tamilnadu-tamil-nadu-tauheed-jamaat-puts-new-168913.html  "

ஆனால்.. சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய இயக்கமான ததமுக, அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி. சோ, அதன் மூலம் நிர்பந்தம் கொடுக்க யாரும் முனையலாம்.

இந்த சூழ்நிலையில், தமுமுக எடுக்க இருக்கும் நிலைப்பாடும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. ததஜ அறிவித்தது போல், 23 கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு தமுமுக ஒத்துழைப்பு அளித்து பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் எதிர்பார்ப்பு.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது தான். அவரின் அறிவும், பொருமையும்  நிச்சயம் அவரை சரியான முடிவையே எடுக்க சொல்லும் என்று நம்புகிறோம்.

                                                             

அனைத்துக்கும் மேலாக... என்னுடைய இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு சொல்லிக் கொள்வது இது தான். நமது போராட்டம் அனைவரின் கவனத்திற்கும் சென்று விட்டது. இனி இது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதை நிச்சயம் தவிர்ப்பார்கள். அந்த விதத்தில் இந்த போராட்டம் மாபெரும் வெற்றியே. கமலை நஷ்டம் அடைய வைப்பது நம் நோக்கம் அல்ல.... ஆகவே, இஸ்லாமிய கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கட்டுப்படுவோம். பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
  
 இறுதியாக கமலை ஆதரிக்கும் நண்பர்களுக்கு சும்மா "ஐ சப்போர்ட் கமல்" னு குதிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. உண்மையிலே கமல சப்போர்ட் பண்றதா இருந்தா தயவுசெய்து இந்த படத்த திருட்டு விசிடில பார்க்காதீங்க. இந்த படம் தாமதம் ஆவதால் கமலுக்கு பெரிய நட்டம் வராது. தேவையான அளவு விளம்பரம் கிடைத்துவிட்டது. சோ, படம் வந்தாலும் நன்றாகவே ஓடும். ஆனால் மிகப் பெரிய பிரச்சனை திருட்டு விசிடி தான். சோ, அதை உங்களால் இயன்ற அளவு தடுத்து கமலுக்கு உதவுங்கள். அதான் உண்மையான சப்போர்ட்.

இதை ஏன் நான் சொல்றேன்னா... ஐ சப்போர்ட் கமல் னு சொன்ன ஒரு ஆளு, நேற்று என்னிடம் பேசும் போது திருட்டு விசிடி கிடைச்சா பார்ப்பேன், ஆர்வமா இருக்குன்னு சொன்னான். கேட்டதும் கடுப்பாயிடுச்சு... ஆர்வம் தாங்க முடியலையாம்... ஒரு வாரம் தள்ளி படம் பார்த்தா என்ன?? தலை வெடிச்சிடுமா??? இதுல சினிமாவ சினிமாவ பாருங்கன்னு அறிவுரை வேற சொன்னவன் அவன். அடப்பாவிங்களா?? நீங்க சினிமாவாவா பார்க்கிறீங்க?? வெறி பிடிச்சுல்ல பார்க்கிறீங்க....???

உங்க வாதப்படி...

எங்களுக்கு மதம் என்ற மதம் பிடிச்சு இருக்கு..

எங்கள் வாதப்படி உங்களுக்கு...

சினிமா என்ற மதம் பிடிச்சு இருக்கு....

ஹா..ஹா...ஹா. மொத்ததில பூரா பேருக்கும் எதாவது ஒரு மதம் பிடிச்சு தான் இருக்கு...

குறிப்பு : கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்கள்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................




செவ்வாய், ஜனவரி 29, 2013

8 மணிக்கு தீர்ப்பு - நாம் செய்ய வேண்டியது என்ன????


விஸ்வரூப பட விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.

தீர்ப்பு எப்படி இருக்கும்?

சில கண்டிஷன்களுடன் படம் வெளியிட அனுமதி அளிப்பார்கள் என்பதே என்னுடைய கணிப்பு. அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நாம் என்ன செய்ய வேண்டும்????

1. சகோஸ்.. தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் தயவுசெய்து உணர்ச்சிவசப் படாதீர்கள்.

2. என்றும் இல்லாத அதிசயமாய் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இதற்காக கமலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி கமல். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

சோ, இந்த கூட்டமைப்பினர் எடுக்கும் அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான போராட்டத்திற்காக பொறுத்திருங்கள்.

3. தனி மனிதர்களாக எந்த போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்.

4. தயவுசெய்து வன்முறையில் யாரும் இறங்காதீர்கள்.

5. போராடுவது மட்டுமே நம் கடமை. வெற்றி , தோல்வி அளிப்பவன் இறைவனே என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

6. எந்த கருத்தை, எங்கு சொல்வதாக இருந்தாலும் நாகரிகமாக மட்டுமே பேசுங்கள். அப்படி பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், நீங்கள் பேசவே வேண்டாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.

7. சாலை மறியல் கண்டிப்பாக செய்யாதீர்கள். 

8. எந்த போராட்டமாக இருந்தாலும் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பொதுமக்களை வருத்தி நடக்கும் எந்த போராட்டத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
 
9. தியேட்டர் முற்றுகைப் போராட்டமோ அல்லது வேறு ஏதேனும் போராட்டம் என்றாலும் அரசின் அனுமதியுடனே நடத்துங்கள் அல்லது அரசுக்கு முன்னரே தெரிவித்துவிடுங்கள்.

10  இறுதியாக, நாம் இந்த போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் என்பதை மறவ வேண்டாம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் இனி ஒரு படம் இது போல் எடுக்க யோசிப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்



மொத்தத்தில் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே தமிழக முஸ்லிம்கள் மற்றும் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.






திங்கள், ஜனவரி 28, 2013

அண்ணன் பி.ஜே அவர்களுக்கு ஒரு கடிதம்



                                                               

அன்புள்ள அண்ணனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நலமாக இருக்கிறீர்களா??

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண உடல் சுகத்தையும் தருவானாக. ஆமீன்.

நீங்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர். ஏன்? இந்தியாவிலே மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களை கணக்கிட்டால் நீங்கள் முதல் 5 இடங்களுக்குள் வருவீர்கள்(என்னைப்பொறுத்தவரை). இத்தகைய ஞானத்தை உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

2002 ம் வருடம் என்று நினைக்கிறேன், இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஹஸரத்மார்கள் சொன்னதை மட்டும் மார்க்கம் என்று நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது காரைக்குடியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது, பிஜே பேசுகிறார் என்று கூறி ஏறத்தால வற்புறுத்தி இழுத்துச் சென்றான் என் நண்பன் கஸாலி. அன்று தான் உங்கள் உரையை முதன் முதலில் கேட்டேன், முழுமையாகக் கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ். அவ்வளவு அழகாகப் பேசினீர்கள். அன்று தான் என் மனதில் மாற்றத்திற்கான முதல் விதை விழுந்தது, அது இன்று ஆலமரமாய் வளர்ந்து உங்களுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் வாழும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் நீங்கள். அதில் எந்த சூழ்நிலையிலும் மாற்றம் வராது, இன்ஷா அல்லாஹ்.

ஆனால், கடந்த சில நாட்களாக உங்கள் கட்டுரைகளில் சிலவும், உங்கள் பேச்சுக்களில் சிலவும் வரம்பு மீறி இருப்பது போல் தோன்றுகிறது அண்ணன். இது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பாலான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அப்படி தான் தோன்றுகிறது. குறிப்பாக மனுஷபுத்திரனை நீங்கள் "மிருகபுத்திரன்" என்று கூறியதையும், நேற்று விஸ்வரூப எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளையும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களால் ரசிக்க முடியவில்லை.

எது சொன்னாலும் அதில் குறை காணத் துடிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நான் இந்த கடிதத்தை எழுதவில்லை. நீங்கள் மிக கண்ணியமாக பேசி இருந்தாலும் அவர்கள் எதிர்க்கவே செய்வார்கள் என்பதை நானறிவேன்.
ஆனால் பொதுவான மாற்று மத சகோதரர்கள் பலர் இருக்கிறார்களே?? அவர்களுக்கும் அல்லவா நீங்கள் சொல்ல வந்த கருத்து போய்ச் சேராமல் ஆகிவிடும். எவ்வளவு அழகான கருத்துக்களை வைத்தீர்கள்?? ஆனால் வார்த்தைகளில் சற்று நிதானம் தவறியதால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்று அஞ்சிகிறேன்... அஞ்சுகிறோம்.

ஏன் இப்படி பேச வேண்டும் என்று கேட்டால், அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறலாம் என்ற வசனத்தை உதாரணமாக காட்டுகிறார்கள் நம் சகோதரர்கள். ஆனால், வரம்பு மீறுவதை விட மன்னிப்பது சிறந்தது என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.

அண்ணன்... நான் உங்களை மன்னிக்கச் சொல்லவில்லை... தாராளமாக உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஆனால் வார்த்தையில் கண்ணியத்தைப் பேணலாமே??? நீங்கள் வேண்டுமென்றே கண்ணியக்குறைவாக பேசினீர்கள் என்று நாங்கள் கூறவில்லை. அறியாமல் கூட இனி பேச வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் விமர்சனங்களில் இருக்கும் சில வார்த்தைகளை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது அண்ணே... "மிருகபுத்திரன்" என்ற வார்த்தையை கேட்டதும் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் பதறினோம். கமலின் குடும்பத்தை பற்றி நாம் பேச வேண்டியது இல்லையே அண்ணன். அவர் செய்தது நியாயம் இல்லை தான். அதற்காக நாமும் தரம் இறங்கத்தேவை இல்லையே???

அப்படி இறங்கினால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??? இவர்களா நமக்கு தீர்ப்பளிக்கப்போகிறார்கள்?? இவை அனைத்தும் தற்காலிகம் தானே?? அதற்கு ஏன் இவ்வளவு கடினமான வார்த்தைகள்?? மென்மையாகவே கூறுவோம். முடிந்தால் புரிந்து கொள்வார்கள், முடியாவிட்டால் அதை இறைவனின் புறத்தில் விட்டுவிடுவோம்.

நீங்கள் சாதாரணமானவர் அல்ல... தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை... உங்களால்  மட்டுமே கொத்து கொத்தாக இளைஞர்களை குரான், ஹதீஸின் பக்கம் கொண்டு வர முடியும்(இறைவன் நாடினால்...).. அந்த வல்லமையை இறைவன் உங்கள் பேச்சிற்கு கொடுத்து உள்ளான்.


அந்த ஆற்றலை இன்னும் வீரியமாக, விவேகமாக பயன்படுத்தி இந்த சமுதாயத்தை நீங்கள் மென்மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இனி தவறிக்கூட உங்கள் வாயில் இருந்தோ அல்லது எழுத்திலோ எந்த சூழ்நிலையிலும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
இதை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சார்பாகவும். பதிவுலகத்தில் இருக்கும் பெரும்பான்மை பதிவர்கள் சார்பாகவும் கேட்கிறோம். உங்கள் அன்புத் தம்பிகளின், தங்கைகளின் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

வஸ்ஸலாம்.

சிராஜுதீன்,
28.01.2013


குறிப்பு : இந்த கடிதம் சகோ பிஜே அவர்களுக்கும் அனுப்பப்படும்.




வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வரூபம் திருட்டு சிடி - முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்.....


தமிழக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....


முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் அந்தப்படம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி திருட்டு விசிடி விற்பவர்கள் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டு காசு பார்க்க குறியாக இருப்பார்கள்.
பிரச்சனை கோர்ட்டில் உள்ளது, அந்த தீர்ப்பு வரும் வரை முஸ்லிம்கள் யாரும் இந்த படத்தை திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள்.

அதே போல் திருட்டு விசிடி விற்பவர்களையும் கண்காணித்து போலிஸிடம் ஒப்படையுங்கள்.

நமது நோக்கம் படத்தில் இருக்கும் ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது தானே ஒழிய, கமலை நட்டம் அடைய வைப்பது அல்ல...
100 கோடி ருபாயை முதலீடு செய்து உள்ளார். குறைந்த பட்சம் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் வரை பார்க்காதீர்கள். ப்ளீஸ்...

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தமிழகத்தில் ஆகும் வசூல் தான் பெரிது. ஏனைய மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமையில் பெரிதாக சம்பாதித்துவிட முடியாது..

இந்த சூழ்நிலையில் பொறுமையும் , நிதானமும் நமக்கு மிகவும் அவசியம். நாம் சொல்ல வந்த செய்தி, அனைவரையும் அடைந்தே இருக்கிறது. நமது போராட்டங்கள் நியாயமான வழியில் இருக்க வேண்டுமே ஒழிய, குறுக்கு வழியில் ஒரு போதும் இருக்கக்கூடாது.

3 நாள் என்பது மிகப்பெரியது, 72 மணி நேரத்திற்குள் திருட்டு விசிடி கும்பல் இந்த படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சேர்த்து விடும். அதை நடக்க விடாமல் செய்வோம். அந்த கடமை நமக்கு உள்ளது.

குறிப்பு : இதை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் சுருக்கமாக எழுத வேண்டி ஆகிவிட்டது.




வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம் - தடையை விலக்க கோரிய வழக்கு தள்ளிவைப்பு..


தன் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க கோரி கமல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் 28-ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. படத்தை பார்த்த பிறகே தீர்ப்பு என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஸ்வரூபம் படத்திற்கான தடை நீடிக்கின்றது. 

அதாவது இக்பால் செல்வன்.. உங்கள் டிவிட்டர் முயற்சி தோற்றுவிட்டது.. நாளை படம் ரிலீஸ் கிடையாது...டையாது..யாது....  

அதே போல் டேம் 999 படமும் தமிழகத்தில் வெளியிடப்படாது... ஹா..ஹா

என்னே கருத்து சுதந்திரம்???
வாழ்க கருத்து சுதந்திரம்...

குறிப்பு : மலேஷியாவிலும் நாளை தடை என்ற அறிவிப்பு வெளியிடப்படலாம்... 

வியாழன் என்ற சகோதரின் பின்னூட்டத்தையும் அதற்கான என் பதிலையும் நான் இத்துடன் இணைக்கிறேன்... வேற வழி, மொக்கை பதிவு, ரொம்ப சின்னதா வேற இருக்கு..  அதான்..ஹி..ஹி.ஹி

வியாழன் சகோ..


//Anyway we will watch the movie in thiruttu vcd //

இத கமல் பார்த்தா இரத்தக் கண்ணீர் வடிப்பார்.. அடப்பாவிங்களா அவங்க தான்(முஸ்லிம்ஸ்) பிரச்சனை பண்றாங்கன்னா நீங்களுமான்னு?? ஹா..ஹா..ஹா

ப்ளீஸ் டோன்ட் டூ தட்.. நாங்க செய்றத தான் நீங்க செய்றீங்க இப்ப?? இது கமலுக்கு எந்த விதத்திலும் உதவாது... 3 நாளோ ஒரு வாரமோ வெயிட் பண்ணுங்க படம் கண்டிப்பா வரும்.... தியேட்டரிலே போய் பாருங்க...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

என்னடா இப்படி சொல்றானேன்னு ஆச்சரியமா இருக்கா?? இனி படம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. நாங்க சொல்ல விரும்பிய மெசேஜ் எல்லாருக்கும் தெளிவாவே போய் சேர்ந்து இருக்கும் இன்னேரம்...  :) :-)) :-)))

வி அல்ரெடி வோன் திஸ் பேட்டில் பாஸ்.... 

குறிப்பு - 2 : எதிர்பார்த்தபடியே , மலேசியாவில் விஸ்வரூபம் தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மலேசிய அமைச்சர் மேற்கண்ட செய்தியை அறிவித்ததாக புதிய  தலைமுறை சற்றுமுன் அறிவிப்பு. ( இது எனக்கு உறுதியா தெரியல, பட் சரியா இருக்க வாய்ப்பு அதிகம்).


செவ்வாய், ஜனவரி 22, 2013

விஸ்வரூபம் - முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

 
விஸ்வரூபம் திரைப்படம் இன்று முஸ்லிம் இயக்கங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைக்  கண்ட இயக்க தலைவர்கள் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். தமுமுக மற்றும் ததஜ தளங்களில் இதுக்குறித்த அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அவற்றை உங்கள் கவனத்திற்க்கு கொண்டு வரவே இந்தப் பதிவு....


                                                                 

தமுமுக தளத்தில் இருந்து : 

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, திருமறை குர்ஆனை தீவிரவாத வழிகாட்டி என சித்தரிக்கும் "விஸ்வரூபம்" படம் உடனே தடை செய்யப்பட வேண்டுமென தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை. இல்லையேல் கடும் போராட்டம் வெடிக்கும் என அறிவிப்பு. பார்க்க: http://www.tmmk.in/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தளத்தில் இருந்து : 

நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
 
குறிப்பு : இந்த போராட்டங்களை வரவேற்கும் அதே நேரத்தில், படத்திற்க்கு மிகப் பெரிய பப்ளிசிட்டி கிடைக்குமே என்ற கவலையும் கூடவே வருகிறது.


திங்கள், ஜனவரி 14, 2013

எதிர்க்குரல் - இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்


சென்னை மக்களை சிலநாட்களுக்கு இலக்கியவியாதிக்கு ஆளாக்கும் புத்தகத்திருவிழா இனிதே தொடங்கிவிட்டது.  அனைவரும் பேராவலுடன் எதிர்பார்த்த உம்மத் குழுமத்தின்  புதிய முயற்சியான  "எதிர்க்குரல் (இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமியப் பதிவர்கள்)" புத்தகமும்  திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


                                                                
இந்த புத்தகம் பற்றிய சிறுகுறிப்பு

 முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது இணையத்தில் ஆக்கபூர்வமாக செயலாற்றிக்கொண்டிருக்கும் முஸ்லிம் பதிவர்களின் குழுமமான உம்மத் குழுமத்தின்  நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று.     ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூலானது, இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.


                                                    
வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றோம்.  128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 50 ரூபாய் மட்டுமே!

இப்புத்தகம் கிடைக்குமிடங்கள் :


கடையின் பெயர்
கடை எண்
சாஜிதா புக் சென்டர்
522
டிஸ்கவர் புக் பேலஸ்
43 & 44
பஷாரத் பப்ளிகேஷன்ஸ்
52 & 53
மக்கள் சக்தி
406
மலிவு விலை இஸ்லாமிய பதிப்பகம்
66
தமிழ்ச் சோலை பதிப்பகம்
 344 & 345
இளையான்குடி மடல்
92
சமநிலைச் சமுதாயம்
266
அறிவு நாட்றாங்காள் என்ற சொர்கத் தோழி
17


  (மேலும்  பல கடைகளில் விரைவில் கிடைக்கும்... )


குறிப்பு : இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர். கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இறைவன் நாடினால், உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்.

சிராஜ்        - +91-994-158-5566   (vadaibajji@googlemail.com)
ஆஷிக்     - +91-978-954-4123   (aashiq.ahamed.14@gmail.com)

வெளிநாடுகளுக்கு : வெளிநாடுகளில் இருந்து கேட்ட சகோஸ் தங்கள் இந்திய முகவரியை அனுப்பினால், அங்கு அனுப்பி விடுகிறோம். அங்கிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது தான் எளிய வழி. ஏனெனில் கூரியரில் அனுப்பினால் செலவு எக்கச்சக்கமாக இருக்கும்.


வியாழன், ஜனவரி 10, 2013

36-வது சென்னை புத்தகக் கண்காட்சி - உங்கள் நேரம் மற்றும் எனர்ஜியை மிச்சபடுத்த பயனுள்ள டிப்ஸ்


சென்னை மக்கள் குறிப்பாக படிப்பாளிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த 36  வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை ஜனவரி 11ம் தேதி துவங்க உள்ளது.  நாளை தொடங்கி 23ம் தேதி வரை 13 நாட்களுக்கு இந்த புத்தக கண்காட்சி நடைபெறும்.  கடந்த வருடம் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் நடைப்பெற்ற இந்த கண்காட்சியானது அப்பகுதியில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும் என்பதால் இவ்வருடம் நந்தனம்  ஒய்எம்சிஏ மைதானத்தில்  நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் பொங்கல் விடுமுறையும் ஆரம்பித்து விட்டதால்   நிச்சயம் மக்கள் கூட்டம் அலைமோதும்.



                                                              

ஒவ்வொரு வருடமும் நான் சென்னையில் இருக்கும் பொழுதெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வகையில் நான் கற்றுக்கொண்ட சில விசயங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே...

1 . கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும். அதே போல் முதல் 2 நாட்களிலும் செல்லாதீர்கள் நிறைய புத்தங்கள் மற்றும் கடைகள் வந்தே இருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.

3 . விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும், வார நாட்களில் மதியம் 2 மணிக்கு துவங்கும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள்.

4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.

5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.

6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.

7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள்.

8 . ஏதாவது ஒரு முனையில் இருந்து தொடங்குங்கள். நடுவிலிருந்து தொடங்காதீர்கள், அது நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தும்.

9 . பணமாக எடுத்துச் செல்லுங்கள்(நிறைய எடுத்துச் செல்லுங்கள்). கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தலாம் என்று யோசனையை புறம் தள்ளுங்கள். ஏனெனில் அனைத்து கடைகளிலும் அந்த வசதி இருக்காது. மாறாக அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் ஒருவர் இருப்பார். அங்கும் கூட்டம் அதிகம் இருக்கும். அதற்காக நீங்கள் இங்கும் அங்கும் நடக்க வேறு வேண்டும். எனவே பணமாக எடுத்துச் செல்வது புத்திசாலித் தனம்.

10 . மறக்காமல் ஒரு நோட்டு மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இந்த புத்தகம் வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பம் இருக்கும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், விற்பனை செய்யும் கடையின் பெயர், அதன் விலை மற்றும் கடையின் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மேலும் இது போல் 5 புத்தக விபரங்களை நியாபகம் செய்தால் முதலாவது மறந்து விடும். எனவே எழுதுவது சாலச் சிறந்தது.





                                                
11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.

12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.

13 . நிறைய எழுத்தாளர்களை அங்கு நீங்கள் காணலாம். அவர்களுடன் ஒரு 5 நிமிடங்களை செலவு செய்யுங்கள். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக ஞானி அங்கேயே  இருப்பார்.

14 . முடிந்த அளவு toilet பயன்படுத்தாதீர்கள். ரொம்ப கேவலமாக இருக்கும் பராமரிப்பு.

15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள்.

நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்... அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்....  எவ்வளவு காலம் தான்
இலக்கியவாதிகளே நம்மல கொல்றது....??? நாமும் பழி தீர்ப்போம்...


டிஸ்கி : இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் எழுதிய பதிவுகளின் தொகுப்பு "எதிர்க்குரல்" என்ற பெயரில் ஜனவரி 14 முதல் விற்பனைக்கு வருகிறது. "சாஜிதா புக் சென்டர்" மற்றும் வேறு கடைகளிலும் கிடைக்கும். அனைவரும் வாங்கிப் படிக்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.  128 பக்கங்கள். விலை ரூபாய் 50 மட்டுமே. 
                                                                                                                                       

         
இந்த புத்தகம் பற்றி மேலும் அறிய :

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...

                                                
                                                 


செவ்வாய், ஜனவரி 08, 2013

மாணவர்களா??? பலி ஆடுகளா???


செய்தித்தாள்களும், செய்தி சேனல்களும்  அந்த செய்தியை வாசித்த போது மனம் முழுக்க பாரமாகி பல்வேறு சிந்தனைகளில் மூழ்க ஆரம்பித்தது...

பள்ளி நேர மாற்றம்!!!!

வரும் கல்வி ஆண்டு முதல் புத்தகச் சுமையோடு இன்னொரு சுமையாக பள்ளிகள் துவங்கும் நேரத்தை காலை 7.30 க்கு  அரசு மாற்றியுள்ளது....
9.30க்கு துவங்கும் பள்ளிக்கே 8.30க்கு  வீட்டுவாசலில் வேன் வந்து நிற்கும். இனி 7.30 எனில்????????????????????????



9.30  எனில்
7.30  எனில்
காலை 6 மணி :  சமையல் செய்யவேண்டும்.  
காலை 5 மணி: 
சமைக்க
வேண்டும்.
7 மணி: 
மகனை
எழுப்ப வேண்டும்.
5மணி:
தூக்கம்
பற்றாக்குறையால் 5மணிக்கு எழுப்பினாலும் 6மணிக்கு எழுவான்.
7.15 :
சாவகாசமாக
பால் கொடுத்த பின் கொஞ்சம் வெயில் எட்டிபார்த்த பின் சூடான நீரில் குளியல்... அதன் பின் சிறுது நேரம் படிப்பு
6 மணி:
குளியலா
?  இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு.முகம் கழுவினால் போதும்
8 மணி:  காலை டிபன் ஊட்டிவிடுதல்
6மணி:
டிபனா
? இப்பதான் பால் குடிச்சான் அதுக்குள்ளையுமா? வேண்டாம்.
8.15 தொடங்கி 8.30 க்குள் : வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்  
6.15 தொடங்கி 6.30க்குள்:இன்னும் கால்  மணி  நேரம் தான் இருக்கு.. வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் 6.30 க்கு வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்
ஸ்கூல் சேரும் ஒருமணி நேரம் வரை   சகமாணவருடன்  விளையாடிக்கொண்டே பயணிக்கிறான்          
காலையில் விட்ட தூக்கத்தை ஒருமணி நேரம் பிடித்துக்கொண்டே பயணிக்கிறான்





  ****சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்  சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து!

   
 கொடுக்கப்பட்ட ஹோம்வொர்க் ,நடத்தப்பட்ட பாடங்களை படிக்கவே நேரம் இரவு 9 முதல் 10 மணிக்கு மேல் ஆகிறது. சாப்பிட்டு தூங்க மட்டுமே குழந்தைகளுக்கு நேரம் இருக்கும்… பெரியவர்களை போல் 8 மணிநேர தூக்கக் கட்டுப்பாடுகள் குழந்தைகளிடம் செல்லுபடியாகாது. காலை என்னதான் நாம் கெஞ்சினாலும் "எழ மாட்டேன்" என அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்க  பாவமாக இருந்தாலும் , காலை நேர பரபரப்பில் அடித்து வழுக்கட்டாயமாய் எழுப்புவது மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே வழி. தூக்க கலக்கத்திலேயே பால் குடித்து, தூக்க கலக்கத்திலேயே முகம் கழுவ மட்டும் தான் நேரமிருக்கும்.

நம் அவசரப்படுத்துதலில் இனி குழந்தைகளுக்கு பள்ளி என்றாலே தீராத வெறுப்பு வரும். காலை நேர உணவு சாப்பிட நேரமிருக்காது, அதையும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பிவிடுவதால் 2 பாக்ஸ், 2 வாட்டர் கேன், ஸ்னேக்ஸ்பாக்ஸ் என கூடுதலாக ஒரு சுமை. வீட்டிலேயே சரியாக சாப்பிடாதவன் அங்கே சாப்பிடுவானா? வீட்டில் என்றால் கொஞ்சமேனும் வயிற்றை நிரப்பி அனுப்ப முடியும். இனி அந்த கவலை வேறு.

வெயில் பிரதேஷத்தில் இருந்தாலும் கூட, பனி/குளிர் இங்கே இல்லை என்ற போதும் கூட  காலை நேர பனி, வாடை காற்றை  தாங்கும் சக்தி குறைவே  இந்த கால குழந்தைகளுக்கு … கால நிலை லேசாக மாறினாலும் தும்மல், சளி என்பது சர்வசாதாரணமாக எட்டிபார்க்கும் நிலையில் , முகத்தில் அடிக்கும் வாடைக்காற்று விடாத இருமலையும் , சளியையும் பரிசாய் கொடுக்கும்! பழகிக்கொள்ளும் வரை சிரமமே...

காலை சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் பாவம் அவனும் குழந்தை தானே…??? எவ்வளவுதான் தாக்கு பிடிக்க முடியும்? தூக்கம் மீண்டும் எட்டிபார்க்கும் மதியவேளையில்… ஆனால் அதற்கும் அனுமதி தரப்படுவதில்லை… மதியத்துடன் விட்டாலும் தேவலை, வீட்டில் சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால்  படிப்பு படிப்பு என கசக்கி பிழியும் பள்ளிகள் மதிய நேரத்தை தியாகம் செய்துவிடுமாக்கும்? அப்படியே விட்டாலும் வேலைக்கு செல்லும் அம்மா,அப்பாவை பெற்றிருக்கும் குழந்தைகளின் நிலை அதைவிட பரிதாபம்! 


சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்,   சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து! சீரியல் பார்க்கும் அம்மா இல்லை என்பதாலும் :-) விடிய காலை தொழுகைக்கு எழ பழகிவிட்டதால் இவையெல்லாம் சுமை இல்லை என்ற போதிலும் அனைத்தும் குழந்தைகளை மையமாக வைத்தே சிந்தனை செல்கிறது... இதுவும் பழகிப்போகும் :-) 

ரொம்ப தான் பீலிங்க்ஸ் ஆப் இந்தியா படம் காமிச்சுட்டிருக்கேன் போல... சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்!


 உப்புசப்பில்லாத காரணத்தால் நேரமாற்றம்:
சாலைகளில் விபத்து அதிகரிப்பதை தடுக்கத் தான் இந்த நடைமுறையை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது சுத்த முட்டாள்தனம்…  குழந்தைகள் மீது ஏன் இந்த இரக்கமற்ற செயலை திணிக்க வேண்டும்? ஏற்கனவே மின்வெட்டால் தூக்கம் இழந்து  , மன உளைச்சலில் பைத்தியங்களாய் திரியும் மக்களுக்கு இன்னொரு அடியா? விபத்துதான் காரணம் எனில் அதற்கு பல வழிகள் இருக்கும் போது இதனை தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம் ??!!!


கொஞ்சம் அறிவோடு சிந்திப்போமா?
மேலை நாடுகளிலும் இதே முறை தான் . இங்கே கொண்டு வருவதில் என்ன தவறு என்ற வாதம் வலுக்கிறது. நியாயம் தான்… ஆனால் அங்கு கல்வியை பார்க்கும்  விதமும் இந்தியாவில்  மாணவர்களை சக்கையாய் பிழியும் கல்விமுறைக்கும் எக்கசக்க வித்தியாசம் உள்ளது.  தன் பள்ளியில் 100 சதவித தேர்ச்சி காட்ட இரவு ஒன்பது மணி வரை பாடாய்படுத்தும் சர்வாதிகார பள்ளி நிலையங்கள் மதியத்துடன் ஓய்வை கொடுப்பார்கள் என்பதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை (சட்டமா?  கிழிஞ்சது… சமச்சீர் புத்தகத்தையே  சும்மா ஷோவுக்கு தான் கொடுத்திருக்கோம்.. இதுல மட்டும் உங்க மதியத்துடன் பள்ளி முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை பாலோ பண்ணுவோமாக்கும்?) மதியத்துடன்  மாணவர்களுக்கு ஓய்வு விட்டால் மட்டுமே இந்த சட்டம் சரியானதாக இருக்க முடியும்!

விபத்து நடப்பது அனைவரும் ஒரே நேரத்தில் வருவதால் என  யோசிக்கும் அரசு ஏன்  எல்லாரின் நேரத்தை மாற்றியமைக்க கூடாது?
வழக்கம் போல் 9.30க்கே (கூட வேண்டாம் 8.30க்கு) குழந்தைகளுக்கு பள்ளி திறந்துவிட்டு, தனியார்/பொதுதுறையில் வேலை செய்பவர்களின்  நேரத்தை 11 மணிக்கு மாற்றிவிடலாமே?

கூட்ட நெரிசலால் படிகட்டுகளில் தொங்கும் நிலை ஏற்படுவதால் விபத்து அதிகரிக்கிறது எனில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயம் வேன் அல்லது பஸ் வசதி செய்து கொடுக்கலாமே?? 
பணம் பறிக்கும் தனியார்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பள்ளி வேனிலே சென்று வந்து விடுகிறார்கள். எத்தனையோ இலவசங்களை வாரி வழங்க தயாராக இருக்கும் அரசாங்கம் , அரசுபள்ளிக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் நிச்சயம் சிரமமே இருக்காது. இது நீண்ட கால திட்டமும் கிடையாது… மாணவர் நலனில் உண்மையிலே அக்கறை இருந்தால், உடனே செயல்படுத்திவிட முடிந்த விஷயமே… 

இது தவிர காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்கலாம்.  சில கிராமங்களுக்கு  சாயங்காலம் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முட்டி மோதி போகும் சூழல் இருக்கிறது. லாபம் பார்க்காமல்  சேவை அடிப்படையில் கிராமப்ப்புறங்களுக்கு கூடுதல் பஸ்வசதியை  ஏற்படுத்தி கொடுத்தால் , இது இல்லையென்றாலும் அடுத்து பேருந்து வரும் என மாணவர்களும் இருந்துவிடுவாங்க…

எல்லாத்தை விடவும் முக்கியமா , சுத்தி சுத்தி வளைக்காம தானியங்கி கதவை அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்துங்க… தொங்கும் நிலை அறவே இருக்காது, விபத்தும் ஏற்படாது!

இதெல்லாம்விட்டுட்டு நேரத்தை மாத்துறாங்களாம்….??? என்னதான் யோசிக்கிறாங்களோ…???  யார் தான் ஐடியா கொடுக்குறாங்களோ??? 

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் இது போன்ற அறிவிப்புகளை விடுத்து, அறிவாய் யோசித்து  மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம், ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம் தமிழக அரசு!

அரசு பரிசீலிக்குமா?????? 

*******************
 

ஆக்கம்- ஆமினா முஹம்மத்


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters