மாண்புமிகு முதலமைச்சர் செல்வி J . ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் சொன்ன சில முக்கியமான வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவேன் என்பதும் ஒன்று.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது தற்போதைய முதல்வரின் ஸ்பெசாலிட்டி என்பது போன்ற ஒரு பிம்பமும் நீண்ட நெடுங்காலமாய் அவரின் ஆதரவு பத்திரிக்கைகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் வாயிலாக பெருமையுடன் பேசப்பட்டு வந்தது. இப்பொழுது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இதுவும் அரசிடம் காரியம் சாதிக்க நினைக்கும் நபர்களின் துதிகளில் ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நிறைய உதாரணங்கள் இருந்தாலும் ஓரிரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
சம்பவம்-1 : சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம்-2 : சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.இந்த வங்கியில் நேற்று பகல் 2 மணிக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தனர். வந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி சர்வ சாதாரணமாக ரூ 14 லட்சங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
சம்பவம்-3 : நேற்று இரவு திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள் ரூ 14 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதே திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் முத்தூட் நிறுவனத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.
கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்???? ஒவ்வொரு கடை அல்லது நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நடை முறைச் சாத்தியமா? என்று யோசித்தால், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே கொள்ளை நடக்கும் விசயத்தில் அரசை பெரிதாக நாம் குற்றம் சாட்டி விட முடியாது தான்.
ஆனால் பெரிய அளவில் திட்டம் போட்டு பட்டப் பகலில் பஹிரங்கமாக துப்பாக்கி காட்டி கொள்ளை அடிக்கும் நபர்களை பல மாதங்களாக பிடிக்க முடியாமல் இருப்பது நிச்சயம் காவல்துறை மற்றும் உளவுத் துறையின் தோல்வியைத் தான் காட்டுகிறது.
இதற்கு மேலும் தாமதிக்காமல், முதல்வர் மக்களுக்கு கொடுத்த சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்ற வாக்குறுதியை உறுதியாக செயல்படுத்த வேண்டும். உண்மையோ பொய்யோ, அவரின் மீது கூறப்படும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர் என்ற சொல்லை காக்க கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது நிச்சயம் அவரின் ஆட்சியின் நீங்காத கரையாக வரலாற்றில் பதியப்படும். பின் அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை.
நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று பெருமை பொங்க அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
அது முற்றிலும் உண்மை தான். அதற்காக நன்றி மேடம்.
ஆனால்... ஆனால்... பேங்குகளையும், நகைக்கடைகளையும் கொள்ளை அடிக்கும் பலே திருடர்கள் அனைவரும்
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து விட்டார்களே அம்மா. வாட் டு டூ!!!!!!
இது தொடர்பில் நான் இந்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் பதிவிட்ட கீழ்க்கண்ட பதிவையும் பார்வையிடுங்கள் நண்பர்களே...
Tweet |