சனி, செப்டம்பர் 15, 2012

இஸ்லாத்தின் பிரச்சார பீரங்கி - ஆமினா முஹம்மத்....



//அதுமட்டுமன்றி, இந்த மதவெறி கொண்ட ஒரு கும்பலோடு அவர்கள் ஒருபோதும் சேர்வதையே விரும்பாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் வரிசையில் இருந்தவர் தான் ஆமினாவும். 
மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! 
அப்புறம் எப்படி ஆமினாவிற்கு திடீரென்று ஞானோஸ்தயம் “மௌலவி சுவனப்பிரியனிடமிருந்து” கிடைத்தது என்று நீங்கள் கேட்கலாம்?//

இது நேற்று ஒரு பதிவில் சொல்லப்பட்ட கருத்து. இது எந்த பதிவு?? யார் எழுதியது? என்பதெல்லாம் இந்த பதிவிற்க்கு அவசியம் இல்லை என்று கருதுகிறேன். கண்டன்ட் தான் விவாதப் பொருள்.

அதாவது ஆமினா அவர்கள் ஏதோ ஒரு முகநூல் குழுமத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்த வேலையில், அண்ணன், வஹாபிகளின் தலைவர், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள் அவரை அங்கிருந்து பிரித்து கூட்டி வந்து இஸ்லாமிய பெண்மணி என்ற தளத்தில் மிரட்டி எழுது வைத்தார் என்பது குற்றச்சாட்டு...

ஒரு நபரை ஒரு இடத்தில் இருந்து பிரித்து கூட்டி வந்து ஒரு விஷயத்தை மிரட்டி செய்யச் சொல்வது என்றால் அந்த விஷயத்தில் அவர் பெரிய பிஸ்தாகத் தான் இருக்க வேண்டுமென்று தான் அனைவரும் நினைப்போம்(ஹாலிவுட் படத்தில் விஞ்ஞானிகளைலாம் மிரட்டுவாங்கள்ல??? அவங்க மகளையோ, மகனையோ பிடித்து வைத்துக்கொண்டு. அதுமாதிரி நினைத்துக்கொள்ளுங்கள்) .

இதை காண்பவர்கள் ஆமினா அவர்கள் இஸ்லாத்தில் பெரிய கரை கண்டவர் போல. இப்ப கொஞ்ச காலமா அதில் இருந்து விலகி அவர்களின் முகநூல் குழுமத்தில் அட்மினாக சேவை செய்கிறார் போல என்று நினைத்து மிகுந்த ஆச்சரியம் அடையலாம்.


சரி, இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்வோம் என்று ஆமினா அவர்களின் குட்டிசுவர்க்கம் தளத்தை பார்வையிட்டீர்கள் என்றால்.....றால்.........ல்..............

ஆஹா..ஆஹா.. என்ன அருமையா இஸ்லாத்தை பற்றி எழுதி இருக்கிறார்... ???? வாவ்.....அந்த தளத்தில் இருந்த அனைத்து கட்டுரைகளும் அப்படியே இஸ்லாத்தை வளர்ப்பதற்க்காகவே எழதுப்பட்டு இருந்தது கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள்..


அந்த வரலாற்று சிறப்பு மிக்க இஸ்லாமிய கட்டுரைகள் சிலவற்றை பாருங்கள் சகோஸ்...

பதிவு -1 :கொலவெறியும் ஜெட் வேகத்தில் பயணிக்கும் தமிழும்!

http://www.kuttisuvarkkam.com/2011/11/blog-post_29.html

பதிவு - 2: ஊர் வம்பு 1-10-2011

http://www.kuttisuvarkkam.com/2011/10/1-10-2011.html

பதிவு - 3 :சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!!

http://www.kuttisuvarkkam.com/2012/03/blog-post_26.html


இவரைத்தான்...இது போன்று அருமையான இஸ்லாமிய சேவை ஆற்றியவரைத்தான்.... இப்படி முகநூலில் தனது திறமையை வேஸ்ட் செய்கிறாறே என்று உள்ளம் வெதும்பிய எங்கள் அன்பு அண்ணன்...இஸ்லாமிய பிரச்சார ஆண் பீரங்கி, வஹாபிகளின் தலைவர்,மதவெறி பிடித்த மாணிக்கம், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள்.. ஆமினா அவர்களை தேடி கண்டுபிடித்து, மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இஸ்லாத்தை பரப்பச் சொல்லி உள்ளார்.....


அட போங்கப்பா!! நீங்களும் உங்க குற்றச்சாட்டும்... ஆமினா எழதுன எல்லாமே மொக்க பதிவு... இதுல இவுகள மிரட்டி கூட்டி வந்து எழுத சொன்னாங்களாம்.... இத விட பெரிய காமெடி எதுவும் இருக்க முடியாது.....

நான் நினைக்கிறேன்.... ஆமினா அவர்கள் வந்த பிறகு அந்த குழுமத்தின் செயல்பாடுகளில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்று... அந்த கோபத்தில் அவர் சார்ந்த மதத்தை நுழைத்து தாக்குகிறார்கள் என்று.... முன்னொரு முறையும் இதே போல் தான் நடந்தது....

இஸ்லாமிய வளர்ச்சி என்பது தனி மனிதர்கள் சார்ந்தது அல்ல... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தானே நடக்கும்.... ஆமினா இல்லாட்டி ஒரு பெனாசிர், ஒரு பெனாசிர் இல்லாட்டி ஒரு சாஜிதா.....அவ்ளோதான்..
இஸ்லாத்திற்க்கு முன் தனி மனிதர்கள் அனைவருமே தூசு தான்... இந்த லட்சணத்தில மிரட்றாங்களாம்!!!!! அய்யோ..அய்யோ......காலக்கொடுமை...


சகோஸ்.. உங்களுக்கு பிரச்சனை அவருடன் என்றால் நேரடியாக அவருடன் மோதுங்கள்..அதை விடுத்து அவர் சார்ந்த மதத்தையும், பிற நபர்களையும் சாடுவது சரியான அணுகுமுறை ஆகாது.....

ஒரு வேளை சுவனப்பிரியனோ அல்லது வேறு யாரோ மிரட்டி அவர் உங்கள் குழுமத்தை விட்டு வந்து இருந்தாலும் அது ஆமினாவின் தவறே அன்றி சுவனப்பிரியனின் தவறு ஆகாது..... மிரட்டலுக்கு பணியும் அளவுக்கு ஆமினாவும் பலகீனமானவர் அல்ல....
அவர் ஒரு வீர மங்கை... (அட்ரா..அட்ரா..அட்ரா....)


குறிப்பு : இது தான் இந்த பிரச்சனை தொடர்பாக எனது லாஸ்ட் பதிவு**. நெஜமாவே ரொம்ப போர் அடிக்குது. வேல வெட்டி இல்லாம இருந்தா தான் இந்த சண்டைக்கெல்லாம் பிட் ஆகுவோம் போல....???????


வியாழன், செப்டம்பர் 13, 2012

சில ஈழப் பதிவர்களின் ஹிட்ஸ் வெறியும், பிரிவினை வாதமும்....

முக்கிய முன் அறிவிப்பு: இப்பதிவானது பதிவுலகில் சைக்கோ போல் சுற்றி திரியும் ஹிட்ஸ் வெறியர்களுக்காக மட்டுமே..  என்னையும் மீறி தவறுதலாக எங்கேனும் ஒட்டுமொத்த ஈழப்பதிவர்களை குறைகூறும்படியான வார்த்தைகள் அமைந்தால் சுட்டிக்காட்டுங்கள். அவ்வார்த்தைகள்/வசனங்கள் உடனே நீக்கப்படும்! (ஈழ பதிவர்கள்னு பொதுவா சொல்லக்கூடாதாம், இஸ்லாமிய வெறியர்கள் கட்டளை இட்டுள்ளார்கள், இந்த முறை மட்டும் கட்டுப்பட்றேன்னு சொல்லி இருக்கேன்)

சில நாட்களாக  எந்த வித சச்சரவுகளும் (பதிவர் சந்திப்பு குழுவிற்கும் மூத்த பதிவர்களுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தவிர்த்து) அல்லாமல் அமைதியாகவே இருந்துவந்தது. இது இந்த ஹிட்ஸ் வெறியர்களுக்கு பொறுக்கவில்லை போலும்! . சில நாட்களுக்கு முன் நிரூபன் இஸ்லாமியர்களை தாக்கி ஒரு பதிவு போட, அவர்கள் இயக்கிவரும் வானொலியை பிரபலப்படுத்த இத்தகைய  விளம்பரம் தேவைப்படுகிறது போலும்  என  கண்டுக்கொள்ளாமல் விட்டாச்சு. அவர்களின் நோக்கம் அப்போதும் புரியவில்லை! வெறும் ஹிட்ஸ், விளம்பரம் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது! அதன் பின்னும் ஐடியாமணி பதிவு போட  ஹிட்ஸ்  என்ற கண்ணோட்டத்திலேயே  அதையும் நினைத்தேன்! ஆனால்  இன்றைய பதிவில் தான் தெரிந்தது இவர்களின்  நோக்கம் என்னவென்று!




//அல்லாவுக்காகச் செய்யப்படும் கொலைகள் பற்றிக் கேள்வி கேட்டால், அவர்கள் இந்துக் கடவுள்களுக்காகச் செய்யப்படும் கொலைகள் பற்றித்தானே ப்பேசோணும்! அப்பத்தானே நாமும் எம் பக்க தவறுகளைத் திருத்த முடியும்!//

அட்ரா...அட்ரா...அட்ரா... இந்து-முஸ்லீம் பிரிவினை ஒன்று மட்டுமே இவர்களின் நோக்கம் என்று  இந்த பதிவில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது.,..   நாம் அல்லாஹ்வை தாக்கினால் இவர்கள் இந்து கடவுளை தாக்கக்கூடும்... அப்ப தான் பதிலுக்கு  மத்த பதிவர்களும் இஸ்லாமியர்களை தாக்குவாங்க... பதிவுலகில் மதக்கலவரம் வரட்டும்..  அமைதி குலையட்டும். ஆளாளுக்கு தனித்தனியா பிரிஞ்சு போகட்டும்... நாம ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கலாம்... சூடேத்திவிடலாம்... இதான் இவர்களின் நோக்கம்.. உங்க வாயாலேயே தெரியப்படுத்தியதற்கு நன்றிங்க!

ஏன் சார்.... இப்படி இரு பிரிவினர்களுக்கிடையே  பிரச்சனையை உண்டு பண்ணுவதால்  எதாவது பத்து பைசாவுக்கு ப்ரோஜனம் இருக்கா சொல்லுங்க?? இல்ல பிரான்ஸ்ல மால் கட்ட போறீங்களா? 

ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழி இருக்குங்க... ஏன் இந்த கேவலமான வழிய தேர்ந்தெடுக்கிறீங்க....???

எங்கனாலயும்....
 "பிரபாகரன் சிறந்தவறா.. ராஜபக்சே சிறந்தவரா???"
 "பிரபாகரன் சிறந்தவரா??? முல்லா உமர் சிறந்தவறா" னு பதிவு போட முடியும்.... பட் பெரும்பான்மை ஈழ மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்த விரும்பவில்லை... நேத்து பேசினதே மனசு இன்னும் ரணமா இருக்கு...

இந்த பதிவ ரொம்பா சூடா எழுதி இருக்க முடியும் சகோஸ்.... இந்த சண்டை போரடிக்குது எனக்கு.... How long???? hi..hi..hi..hi....

டிஸ்கி-1 : எனக்கு இன்னும் பசுமையா நியாபகம் இருக்கு.. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஈழ பதிவர்களுக்கும் இஸ்லாமியரகளுக்கும் சண்டை வந்தது.. அதன் பின் சில மாதங்கள் கழித்து ஈழ பதிவர்களுக்கும், தமிழக பதிவர்களுக்கும் சண்டை வந்தது...அப்ப நானும், ஆசிக்கும்(மனிதாபிமானி) பிரிவினைவாதத்தை ஆதரிக்க முடியாதுன்னு பதிவு போட்டோம்... அப்பொழுது நாங்கள் நினைத்து இருந்தால் இப்ப நீங்க பிடிக்க நினைக்கிற மீன ஈசியா பிடிச்சு இருப்போம்... நீங்கள் இப்படி நடந்துகொண்ட பிறகும் அந்த முடிவிற்காக நாங்கள் பெருமையே கொள்கிறோம்... ஏனெனில் எங்கள் செயல்களுக்கான கூலியை இறைவனிடமே எதிர்பார்க்கிறோம்..மனிதர்களிடம் அல்ல....

டிஸ்கி-2 : காலைல ஒரு SMS .. நான் நேத்து ரிஷியோட தளத்தில போட்ட கமெண்ட்ட Q பிராஞ்ச்க்கு அனுப்பிட்டாங்களாம்...வருண்னு ஒருத்தர் மும்பைல இருந்து மெஸேஜ் பண்ணி இருந்தார்... டைம் வேஸ்ட் பண்ணாதிங்க சார்... நம்ம பேர் 6 வருஷத்துக்கு முன்னாடியே அந்த லிஸ்ட்ல வந்திடுச்சு வேறு காரணங்களுக்காக....அய்யோ..அய்யோ......



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters