//அதுமட்டுமன்றி, இந்த மதவெறி கொண்ட ஒரு கும்பலோடு அவர்கள் ஒருபோதும் சேர்வதையே விரும்பாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் வரிசையில் இருந்தவர் தான் ஆமினாவும்.
மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்!
அப்புறம் எப்படி ஆமினாவிற்கு திடீரென்று ஞானோஸ்தயம் “மௌலவி சுவனப்பிரியனிடமிருந்து” கிடைத்தது என்று நீங்கள் கேட்கலாம்?//
இது நேற்று ஒரு பதிவில் சொல்லப்பட்ட கருத்து. இது எந்த பதிவு?? யார் எழுதியது? என்பதெல்லாம் இந்த பதிவிற்க்கு அவசியம் இல்லை என்று கருதுகிறேன். கண்டன்ட் தான் விவாதப் பொருள்.
அதாவது ஆமினா அவர்கள் ஏதோ ஒரு முகநூல் குழுமத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்த வேலையில், அண்ணன், வஹாபிகளின் தலைவர், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள் அவரை அங்கிருந்து பிரித்து கூட்டி வந்து இஸ்லாமிய பெண்மணி என்ற தளத்தில் மிரட்டி எழுது வைத்தார் என்பது குற்றச்சாட்டு...
ஒரு நபரை ஒரு இடத்தில் இருந்து பிரித்து கூட்டி வந்து ஒரு விஷயத்தை மிரட்டி செய்யச் சொல்வது என்றால் அந்த விஷயத்தில் அவர் பெரிய பிஸ்தாகத் தான் இருக்க வேண்டுமென்று தான் அனைவரும் நினைப்போம்(ஹாலிவுட் படத்தில் விஞ்ஞானிகளைலாம் மிரட்டுவாங்கள்ல??? அவங்க மகளையோ, மகனையோ பிடித்து வைத்துக்கொண்டு. அதுமாதிரி நினைத்துக்கொள்ளுங்கள்) .
இதை காண்பவர்கள் ஆமினா அவர்கள் இஸ்லாத்தில் பெரிய கரை கண்டவர் போல. இப்ப கொஞ்ச காலமா அதில் இருந்து விலகி அவர்களின் முகநூல் குழுமத்தில் அட்மினாக சேவை செய்கிறார் போல என்று நினைத்து மிகுந்த ஆச்சரியம் அடையலாம்.
சரி, இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்வோம் என்று ஆமினா அவர்களின் குட்டிசுவர்க்கம் தளத்தை பார்வையிட்டீர்கள் என்றால்.....றால்.........ல்..............
ஆஹா..ஆஹா.. என்ன அருமையா இஸ்லாத்தை பற்றி எழுதி இருக்கிறார்... ???? வாவ்.....அந்த தளத்தில் இருந்த அனைத்து கட்டுரைகளும் அப்படியே இஸ்லாத்தை வளர்ப்பதற்க்காகவே எழதுப்பட்டு இருந்தது கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள்..
அந்த வரலாற்று சிறப்பு மிக்க இஸ்லாமிய கட்டுரைகள் சிலவற்றை பாருங்கள் சகோஸ்...
பதிவு -1 :கொலவெறியும் ஜெட் வேகத்தில் பயணிக்கும் தமிழும்!
http://www.kuttisuvarkkam.com/2011/11/blog-post_29.html
பதிவு - 2: ஊர் வம்பு 1-10-2011
http://www.kuttisuvarkkam.com/2011/10/1-10-2011.html
பதிவு - 3 :சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!!
http://www.kuttisuvarkkam.com/2012/03/blog-post_26.html
இவரைத்தான்...இது போன்று அருமையான இஸ்லாமிய சேவை ஆற்றியவரைத்தான்.... இப்படி முகநூலில் தனது திறமையை வேஸ்ட் செய்கிறாறே என்று உள்ளம் வெதும்பிய எங்கள் அன்பு அண்ணன்...இஸ்லாமிய பிரச்சார ஆண் பீரங்கி, வஹாபிகளின் தலைவர்,மதவெறி பிடித்த மாணிக்கம், மௌலவி சுவனப்பிரியன் அவர்கள்.. ஆமினா அவர்களை தேடி கண்டுபிடித்து, மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இஸ்லாத்தை பரப்பச் சொல்லி உள்ளார்.....
அட போங்கப்பா!! நீங்களும் உங்க குற்றச்சாட்டும்... ஆமினா எழதுன எல்லாமே மொக்க பதிவு... இதுல இவுகள மிரட்டி கூட்டி வந்து எழுத சொன்னாங்களாம்.... இத விட பெரிய காமெடி எதுவும் இருக்க முடியாது.....
நான் நினைக்கிறேன்.... ஆமினா அவர்கள் வந்த பிறகு அந்த குழுமத்தின் செயல்பாடுகளில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்று... அந்த கோபத்தில் அவர் சார்ந்த மதத்தை நுழைத்து தாக்குகிறார்கள் என்று.... முன்னொரு முறையும் இதே போல் தான் நடந்தது....
இஸ்லாமிய வளர்ச்சி என்பது தனி மனிதர்கள் சார்ந்தது அல்ல... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தானே நடக்கும்.... ஆமினா இல்லாட்டி ஒரு பெனாசிர், ஒரு பெனாசிர் இல்லாட்டி ஒரு சாஜிதா.....அவ்ளோதான்..
இஸ்லாத்திற்க்கு முன் தனி மனிதர்கள் அனைவருமே தூசு தான்... இந்த லட்சணத்தில மிரட்றாங்களாம்!!!!! அய்யோ..அய்யோ......காலக்கொடுமை...
சகோஸ்.. உங்களுக்கு பிரச்சனை அவருடன் என்றால் நேரடியாக அவருடன் மோதுங்கள்..அதை விடுத்து அவர் சார்ந்த மதத்தையும், பிற நபர்களையும் சாடுவது சரியான அணுகுமுறை ஆகாது.....
ஒரு வேளை சுவனப்பிரியனோ அல்லது வேறு யாரோ மிரட்டி அவர் உங்கள் குழுமத்தை விட்டு வந்து இருந்தாலும் அது ஆமினாவின் தவறே அன்றி சுவனப்பிரியனின் தவறு ஆகாது..... மிரட்டலுக்கு பணியும் அளவுக்கு ஆமினாவும் பலகீனமானவர் அல்ல....
அவர் ஒரு வீர மங்கை... (அட்ரா..அட்ரா..அட்ரா....)
குறிப்பு : இது தான் இந்த பிரச்சனை தொடர்பாக எனது லாஸ்ட் பதிவு**. நெஜமாவே ரொம்ப போர் அடிக்குது. வேல வெட்டி இல்லாம இருந்தா தான் இந்த சண்டைக்கெல்லாம் பிட் ஆகுவோம் போல....???????
Tweet |